என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் ரூ.70 லட்சம் உண்டியல் வசூல்
- பக்தர்கள் முருகனை தரிசித்துவிட்டு காணிக்கை செலுத்திவிட்டு செல்கின்றனர்.
- 6 கிலோ 252 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக கிடைத்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். அதே போல் கிருத்திகை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு காணிக்கை செலுத்திவிட்டு செல்கின்றனர்.
திருத்தணி முருகன் கோவில் மலைக்கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் கோயில் ஊழியர்களின் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதன்படி கடந்த 22 நாட்களில் 70 லட்சத்து 77 ஆயிரத்து 595 ரூபாய் பணம் வசூலாகி உள்ளது. மேலும் 466 கிராம் தங்கம், 6 கிலோ 252 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக கிடைத்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Next Story






