search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்ப்பால் தானம்"

    • தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கலாம்.
    • நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க உடன்பட வேண்டும்.

    தாய்ப்பால் தானம் யாரெல்லாம் அளிக்கலாம்?

    ஆரோக்கியமாக, தற்போது எவ்வித மருந்துகளும் (வைட்டமின்கள், இன்சுலின், ஆஸ்துமா இன்ஹேலர்கள், தைராய்டு மாத்திரை, கண் சொட்டு மருந்துகளைத் தவிர்த்து) உட்கொள்ளாத தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கலாம்.

    குறிப்பாக, அவர்கள், தங்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க உடன்பட வேண்டும். அவர்களின் பச்சிளங்குழந்தைகள், ஆரோக்கியமாக போதுமான அளவு எடை அதிகரிப்புடன் இருக்க வேண்டும்; குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு, போதுமான அளவு தாய்ப்பால் சுரத்தல் இருக்க வேண்டும்.

    தாய்ப்பால் தானம் யாரெல்லாம் அளிக்கக் கூடாது?

    புகைப்பழக்கம் உள்ளவர்கள், புகையிலைப் பொருள்களை உபயோகிப்பவர்கள் மற்றும் நிகோட்டின் மாற்று சிகிச்சையில் (Nicotinereplacement therapy) உள்ளவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, HTLV அல்லது சிபிலிஸ் நோய்த்தொற்று உள்ளவர்கள், கடந்த 12 மாதங்களில் உறுப்புதானம் அல்லது ரத்ததானம் பெற்றவர்கள், மார்பகங்களில் முலையழற்சி (mastitis), பூஞ்சைத் தொற்று, ஹெர்பெஸ் (herpes simplex) அல்லது வேரிசெல்லா (varicella zoster) நோய்த்தொற்று உள்ளவர்கள் தாய்ப்பால் தானம் அளிக்கக் கூடாது.

    தாய்ப்பால் தானமளிப்பவர்களிடம் ஒப்புதல் வாங்கப்பட்டு, நோய்த்தொற்று உள்ளதா என்று ரத்தப் பரிசோதனை எடுத்த பிறகு, தாய்ப்பால் சேகரிக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப் படுவார்கள். அங்கே, தாய்மார்கள் தங்கள் விரல்களைக் கொண்டு Manual எஸ்பிரஸின் முறையிலோ, பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தியோ, தாய்ப்பாலை அதற்குரிய கொள்கலனில் சேகரிப்பர். கொள்கலன் லேபிள் ஒட்டப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் சேகரிக்கப்படும்.

    தானமளித்தவருக்கு ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி மற்றும் சிபிலிஸ் நோய்த்தொற்று இல்லை என்று ரத்தப் பரிசோதனையில் உறுதி செய்த பிறகு, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால், Pasteurization-க்கு உட்படுத்தப்படும்.

     பாஸ்டுரைசேஷன் செய்வதற்கு முன்பும் பின்பும், தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலில் நுண்ணுயிர்க்கிருமிகள் உள்ளனவா என்பதை அறிய வளர்சோதனை (culture) பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். வளர்சோதனைப் பரிசோதனையில் நுண்ணுயிர்க் கிருமிகள் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, தாய்ப்பால் கொள்கலனில் அதன் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டு, உறைவிப்பானில் 20 டிகிரி செல்சியசில் உறைவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். 3 - 6 மாதங்கள் வரை, இவ்வாறு உறைய வைக்கப்பட்ட தாய்ப்பாலை உபயோகப்படுத்தலாம்.

    தீவிர பச்சிளங்குழந்தை சிகிச்சைப் பிரிவில் உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேவைப்படும்போது, உறைய வைக்கபட்ட தாய்ப்பாலுடைய கொள்கலன், குழாயின் மிதமான சுடுநீரில் காட்டப்பட்டு, நீர்ம நிலைக்குக் கொண்டு வரப்படும். இவ்வாறு நீர்ம நிலைக்குக் கொண்டு வரப்பட்ட தாய்ப்பால், மூன்று மணி நேரத்துக்குள் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

    சென்ற அத்தியாயத்தில், தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் மூலம் நோய்த்தொற்று ஏற்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. தாய்ப்பால் வழியாக ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்று ஏற்படக் கூடுமென்ற காரணத்தால்தான், தாய்ப்பால் தானமளிப்பவர்கள் இந்தப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

     இந்த பரிசோதனைகள் நெகட்டிவ்வாக இருப்பின் மட்டுமே, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் பாஸ்டுரைசேஷன் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு, பின்பு உறைய வைக்கப்படும். பாஸ்டுரைசேஷன் செயல்முறையில், தாய்ப்பாலில் வேறு நுண்ணுயிர்க் கிருமிகள் இருந்தால், கொல்லப்பட்டுவிடும். அதன்பிறகு, வளர்சோதனைப் பரிசோதனையில் நுண்ணுயிர்க் கிருமிகள் இல்லையென்பது, உறுதியான பிறகுதான், தாய்ப்பால் உறைவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

    எனவே, தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலின் மூலம் பச்சிளங்குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படும் சாத்தியக்கூறு மிகமிகக் குறைவு. பவுடர் பாலைவிட, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் பலமடங்கு மேலானதாகும். எனவே கண்டிப்பாக, பச்சிளங்குழந்தைகளுக்கு தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலைப் பயன்படுத்தலாம்.

    • மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாய்ப்பால் வங்கி திறக்கப்பட்டது.
    • தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதிலும் ஆரம்பத்தில் பால் குடிக்க முடியவில்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவ அவர் தயங்கவில்லை.

    புதுக்கோட்டை:

    குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் இன்றியமையாதது. 2 ஆண்டுகள் முழுமையாக தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் தாங்கள் உயிர் வாழும் காலம் வரை அதற்கு தேவையான ஆரோக்கிய அடிப்படையை தாய்ப்பால் வழங்குகிறது.

    அதுமட்டுமல்லாமல் 40 வகையான புற்றுநோய்கள் நம்மை அண்டாமல் தாய்ப்பால் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ஆனால் பல்வேறு காரணங்களால் ஒரு சிலருக்கு குறைந்த அளவு தாய்ப்பால் மட்டுமே சுரக்கிறது.

    இந்த சூழலில் தாய்ப்பால் வங்கியில் இருக்கக்கூடிய தாய்ப்பாலை அந்த பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுத்து வளர்த்தெடுக்கிறார்கள்

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த பீர் முகமது (வயது 39). தனியார் பஸ் டிரைவரான அவர் ஊர்க்காவல் படையிலும் பணியாற்றி வருகிறார்.

    இவருக்கும் சம்சாத் பேகம் (30) என்பவருக்கும் கடந்த 2016ல் திருமணம் நடந்தது. திருமணமான முதல் வருடத்தில் சம்சாத் கர்ப்பம் தரித்தார். அது குறுகிய காலத்தில் கலைந்து விட்டது.

    அதன் பின்னர் பல்வேறு மருத்துவமனைகளில் குழந்தை பாக்கியத்திற்காக சிகிச்சை பெற்றார். அதன் விளைவாக மீண்டும் கடந்த ஆண்டு சம்சாத் பேகம் கர்ப்பமடைந்தார்.

    பின்னர் பிரசவத்திற்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூன் மாதம் அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் ஒன்றரை கிலோ மட்டுமே அந்த குழந்தையின் எடை இருந்தது.

    அதைத்தொடர்ந்து அக்குழந்தையை அங்குள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டில் சேர்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

    ஆரம்பத்தில் அந்த குழந்தை தாய்ப்பால் எடுத்து கொள்ளவில்லை. பின்னர் படிப்படியாக ஒரு மில்லி 2 மில்லி அளவுக்கு தாய்ப்பால் அருந்த தொடங்கியது.

    இவ்வாறான சூழலில் சம்பத் பேகம் தனது குழந்தையின் தேவைக்கு தாய்ப்பாலை கொடுத்து விட்டு மீதமுள்ள தாய்ப்பாலினை அங்குள்ள தாய்ப்பால் வங்கிக்கு தானமாக வழங்கி வந்தார். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் அவர் 20 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்தார்.

    அதைத்தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழாவில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து சம்சாத் பேகத்துக்கு டீன் ராஜ்மோகன் கேடயம் வழங்கி பாராட்டினார்.

    இதுகுறித்து நியோ நாட்டலஜி துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் பீட்டர் கூறும் போது,

    இந்த மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாய்ப்பால் வங்கி திறக்கப்பட்டது. இதற்கு முன்பு ஒரு தாயிடம் அதிகபட்சமாக 14 லிட்டர் தாய்ப்பால் மட்டுமே தானமாக பெறப்பட்டது. இப்போது முதல் முறையாக சம்சாத் பேகம் ஒன்றரை மாதத்தில் 20 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்தார்.

    தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதிலும் ஆரம்பத்தில் பால் குடிக்க முடியவில்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவ அவர் தயங்கவில்லை.

    இது மற்றவர்களும் தங்கள் தாய்ப்பாலை தானம் செய்ய தூண்டுவதாக அமைந்துள்ளது என்றார்.

    சம்சாத்தின் கணவர் பீர் முகமது கூறும்போது,

    திருமணமான முதல் ஆண்டிலேயே குழந்தையை கலைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் பல ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று கடைசியில் குழந்தை பிறந்தது.

    ஆனால் குறை பிரசவமாக இருந்ததால் புதுக்கோட்டை அரசு ராணி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். சிகிச்சைக்கு பின் கடந்த சனிக்கிழமை குழந்தையை டிஸ்சார்ஜ் செய்தனர். இப்போது குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்றார்.

    சம்சாத் கூறும்போது, நான் என் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தபோது தாய்ப்பால் குறைவாக இருந்த பல தாய்மார்கள் மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு செல்வதை பார்த்தேன். இதனால் தாய்ப்பால் தானமாக வழங்க முடிவு செய்தேன் என தெரிவித்தார்.

    • 2 குழந்தைகளின் தாயான எலிசபெத், ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஊட்டமளித்துள்ளார்.
    • எலிசபெத் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் உயிரை காப்பாற்ற உதவுகிறார்.

    அமெரிக்காவின் ஓரிகான் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன் சியாரா. தாய்ப்பால் தெய்வம் என்று அழைக்கப்படும் எலிசபெத்துக்கு ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் என்ற நோய்க்குறியின் காரணமாக அவரது உடல், நாளொன்றுக்கு சுமார் 6.65 லிட்டர் தாய்ப்பாலை உற்பத்தி செய்கிறது. இது சராசரி தாய்க்கு சுரக்கும் தாய்ப்பால் சுரப்பை விட கிட்டத்தட்ட 8 முதல் 10 மடங்கு அதிகமாகும்.

    2014-ம் ஆண்டில், ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் நோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, அவரது மார்பகத்தில் இருந்து, யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு தாய்ப்பால் சுரப்பு இருந்தது. அந்த நிலையில், தாய்ப்பால் வீணாகப் போவதை விரும்பாத எலிசபெத், பிற தாய்மார்களுக்கு உதவ முடிவு செய்தார். அதன்பிறகு அவர் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு தோராயமாக 250 குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தானமாக கொடுத்தார்.

    2 குழந்தைகளின் தாயான இவர் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஊட்டமளித்துள்ளார். குறிப்பாக குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றவும் உதவுகிறார்.

    கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந் தேதி முதல் 2018-ம் ஆண்டு ஜூன் 20-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1,599.68 லிட்டர் ஒரு பால் வங்கிக்கு நன்கொடையாக அளித்ததன் மூலம், எலிசபெத் ஆண்டர்சன் சியாரா கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    உண்மையில், இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை என்கிறார் அவர்.

    • எனது மகள் பிறந்த 5-வது நாளில் இருந்து தாய்ப்பால் தானம் கொடுக்கத் தொடங்கினேன்.
    • தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் 'கப்' மூலமாகவும், டியூப் மூலமாகவும் தேவையான குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.

    கோவை:

    தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது.

    பிரசவத்துக்கு பின்னர், உடல் நல பாதிப்புகள் காரணமாக சில தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்காத நிலை ஏற்படுகிறது.

    அதேபோல பிரசவத்தின்போது தாய் உயிரிழப்பதால் தனிமையில் வாடும் குழந்தைகள், ஆதரவின்றி மீட்கப்படும் தொட்டில் குழந்தைகள், குறைந்த எடை கொண்ட குழந்தைகள் ஆகியோருக்கும் தாய்ப்பால் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.

    இதுபோன்ற இடர்பாடுகளை தவிர்க்க அரசு சார்பில் தாய்ப்பால் வங்கி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை பற்றி பலர் அறிந்திருந்தாலும், தாய்மார்கள் சிலர் தானம் அளிக்க முன்வருவதில்லை.

    இந்நிலையில், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக கோவை வடவள்ளி அருகே உள்ள பி.என்.புதூரைச் சேர்ந்த ஸ்ரீவித்யா(27) என்பவர் கடந்த 10 மாதங்களாக, அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்காக தாய்ப்பால் தானம் செய்து வருகிறார்.

    எனது கணவர் பைரவன். எங்களுக்கு அசிந்தியா (4) என்ற மகனும், 10 மாதம் ஆன ப்ரக்ருதி என்ற மகளும் உள்ளனர்.

    மூத்த மகன் பிறந்தபோதே, தாய்ப்பால் தானம் திட்டம் குறித்து அறிந்திருந்தேன். ஆனாலும் அப்போது என்னால் தானம் செய்ய முடியவில்லை.

    அரசு மருத்துவமனைகளில் தினமும் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றனர்.

    அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகள் குறைந்த எடையிலும், உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையிலும் பிறந்திருப்பர்.

    இதுபோன்ற குழந்தைகளுக்கு அவர்களது தாயாரால் நேரடியாக தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழல் உள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு ஒரே உணவு தாய்ப்பால் மட்டுமே.

    எனவே, தாய்ப்பால் கிடைக்காத பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்க தானம் அளிக்க முடிவு செய்தேன்.

    திருப்பூரைச் சேர்ந்த ரூபா செல்வநாயகி என்பவர் நடத்தி வரும் பவுண்டேசன் மூலமாக, தாய்ப்பால் தானத்தை சமூக சேவை அடிப்படையில் நான் அளித்து வருகிறேன்.

    எனது மகள் பிறந்த 5-வது நாளில் இருந்து தாய்ப்பால் தானம் கொடுக்கத் தொடங்கினேன்.

    அதிலிருந்து 7 மாத காலத்தில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளேன். தற்போது 10 மாத காலத்தில் 135 லிட்டருக்கு மேல் தாய்ப்பால் தானம் செய்துள்ளேன்.

    தினமும் எனது குழந்தைக்கு அளித்தது போக, மீதம் உள்ள தாய்ப்பாலை அதற்கு என பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட பாக்கெட்டில் சேகரித்து விடுவேன். பின்னர் அதனை, குளிர்சாதன எந்திரத்தில் வைத்து விடுவோம். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை தன்னார்வலர்கள் வந்து சேகரித்து செல்வார்கள்.

    அவர்கள் சேகரித்து செல்லும் தாய்ப்பாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அளித்து வருகின்றனர்.

    அங்கு தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் 'கப்' மூலமாகவும், டியூப் மூலமாகவும் தேவையான குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.

    தாய்ப்பால் தானத்துக்காக 'இந்தியன் புக் ஆப் அன்ட் ஆசியன் புக் ரெக்கார்ட்ஸ்' சார்பில் என்னை பாராட்டி, பாராட்டு சான்றிதழும், விருதும் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாய்ப்பால் தானம் குறித்து அரசு ஆஸ்பத்திரி நிா்வாகம் சாா்பில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • இந்த ஆண்டில் ஆகஸ்டு மாதம் வரை 2,355 போ் தாய்ப்பால் தானம் வழங்கி உள்ளனா்.

    கோவை,

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2015-ம் ஆண்டு தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. இங்கு பிரசவித்த பெண்கள் தானமாக அளிக்கும் தாய்ப்பால் பாதுகாக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் உள்ள குழந்தைகளுக்கும், ஆதரவற்ற நிலையில் சிகிச்சைக்கு அனுமதி க்கப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கும் அளிக்கப்படுகிறது.

    தாய்ப்பால் தானம் குறித்து அரசு ஆஸ்பத்திரி நிா்வாகம் சாா்பில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயனாக ஆண்டுதோறும் தாய்ப்பால் தானம் அளிப்பவா்களின் எண்ணிக்கையும், பயனடைபவா்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயா்ந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டில் ஆகஸ்டு மாதம் வரை 2,355 போ் தாய்ப்பால் தானம் வழங்கி உள்ளனா். இதன் மூலம் 5,511 குழந்தைகள் பயனடைந்துள்ளனா். இந்த தாய்ப்பால் வங்கி மூலம் பல குழந்தைகளுக்கு ஊட்டச்ச த்தான, ஆரோக்கியமான தாய்ப்பால் கிடைத்து வருவதாக ஆஸ்பத்திரி நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

    இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிா்மலா கூறியதாவது:- கோவை அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கி மூலம் நாள்தோறும் தாய்ப்பால் தானம் பெறப்பட்டு வருகிறது. இந்த தாய்ப்பால் வங்கியில் பாதுகாப்பான முறையில் தாய்ப்பா ல் பராமரிக்க ப்பட்டு தேவைப்படும் குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.

    ஆதரவற்ற நிலையி ல் சிகிச்சைக்கு அனுமதி க்கப்படும் பச்சிளம் குழந்தைகள், குறைப் பிரசவத்தில், குறைந்த எடையில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், பாலூட்ட முடியாத தாய்மாா்களின் குழந்தைகள் ஆகியோருக்கு தாய்ப்பால் அளிக்கப்படுகிறது.

    மேலும், தனியாா் ஆஸ்பத்திரிகளில் பிரசவமாகி தாய்ப்பால் பற்றாக்குறை காணப்படும் குழந்தைகளுக்கும் இங்கிருந்து தாய்ப்பால் அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

    ×