search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தா.மோ.அன்பரசன்"

    • 1959-ம் தொடங்கப்பட்ட சங்கம் நான்கு ஆண்டுகளாக உறுப்பினர் வயது மூப்பின் காரணமாக செயல்படாமல் இருக்கிறது.
    • புதிதாக உறுப்பினர்களை சேர்த்து சங்கத்தை மேம்படுத்தி செயல்படுத்தப்படும் என்பதால் புதிய சங்கம் அமைக்க அவசியமில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் பின்தங்கியுள்ள பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக தொழிற்பேட்டைகளை அரசு தொடங்கும் என சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

    சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது, நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி, நிலக்கோட்டை பகுதியில் பித்தளைப் பாத்திர தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைக்க முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், 1959-ம் தொடங்கப்பட்ட சங்கம் நான்கு ஆண்டுகளாக உறுப்பினர் வயது மூப்பின் காரணமாக செயல்படாமல் இருக்கிறது என்றும், புதிதாக உறுப்பினர்களை சேர்த்து சங்கத்தை மேம்படுத்தி செயல்படுத்தப்படும் என்பதால் புதிய சங்கம் அமைக்க அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.

    இதே போல, தமிழகத்தின் பின்தங்கிய பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையி்ல் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலமாக தொழிற்பேட்டைகளை அரசு அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • தி.மு.க.ஆட்சி பொறுப்பேற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல கமிட்டி அமைக்கப்பட்டது.
    • முதல்-அமைச்சர் ரூ.100 கோடி நிதியில் தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் நடந்த தோள் கொடுப்போம் தொழில்களுக்கு மண்டல மாநாட்டில், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான சமச்சீர், ஏற்றுமதி, பொருளாதாரம் போன்றவற்றிற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகள் திட்டமாக தீட்டப்பட்டது. இந்த திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக தொழில்முனைவோர்கள் வங்கி கடன் பெறுவதில் உள்ள சிரமங்களை குறைக்க, இந்தியாவிலேயே முதல் முறையாக நமது முதல்-அமைச்சர் ரூ.100 கோடி நிதியில் தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார்.

    இந்த திட்டத்தின் மூலம் சிறு, குறு நிறுவனங்கள் பெறும் சொத்து பிணயம் இல்லாத வங்கி கடனுக்கு 90 சதவீதம் வரை கடன் உத்தரவாதத்தை தமிழக அரசு ஏற்கும். இந்தியாவிலேயே 90 சதவீதம் வரை கடன் உத்தரவாதம் வழங்க உள்ள மாநிலம் தமிழகம் தான். சிறு, குறு நிறுவனங்களின் மூலதன சிக்கலை தீர்க்கும் விதமாக வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு கடன் வழங்குவார்கள். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து, தொழிலை மீண்டும் அமைக்கவும், தொடங்கவும் இந்த திட்டம் உதவும்.

    மேலும் ரூ.25 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல் நிதி நெருக்கடியில் சிக்கிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், தொழிலை அதிகரிக்கவும் முதலீட்டு மானியத்தில் 25 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பங்கள் பெறும் பணி நடந்து வருகிறது. விரைவில் இவர்களுக்கு கடன் மற்றும் மானியம் வழங்கப்படும். சிறு, குறு நிறுவனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக ஏற்படும் காலதாமதத்திற்கு தீர்வு காண சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 252 நிறுவனங்களுக்கு ரூ.50 கோடியே 12 லட்சம் தொகை வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் மூலமாக நீட்ஸ் உள்ளிட்ட சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க ஆண்டுக்கு 10 ஆயிரம் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற இந்த குறுகிய காலகட்டத்தில் ரூ.310 கோடியே 33 லட்சம் மானியத்துடன் ரூ.1253 கோடி வங்கி கடன் உதவி வழங்கப்பட்டு, இதுவரை 10 ஆயிரத்து 216 படித்த இளைஞர்கள் புதிய தொழில்முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் ரூ.28 கோடியே 38 லட்சம் மானியத்தில், ரூ.113 கோடியே 52 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு 322 பேர் புதிய தொழில்முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். இதுபோல் ஈரோடு, கோவை மாவட்டத்தில் ரூ.248 கோடியே 59 லட்சம் மானியத்தில், ரூ.996 கோடியே 34 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு 906 புதிய தொழில்முனைவேர்களை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

    • அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 17202 விவசாயிகளுக்கு ரூ.1.22 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு ரூ.10.02 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது.

    அனைத்துத் துறைகளிலும் பொதுமக்கள் பயன் பெற கூடிய வகையில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாலாஜாபாத் ஒன்றியத்தில் பட்டா இல்லா இடங்களில் வசிப்பவர்கள் புதிய மின் இணைப்புகள் வழங்க பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது மாவட்ட ஆட்சித்தலைவர் தக்க நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் மின் இணைப்புகள் வழங்கிட ஆவன செய்யப்படும்.

    தேர்தல் அறிக்கையில் 505 திட்டங்கள் வாக்குறுதிகளாக தரப்பட்டன அதில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட திட்டங்கள் சட்டமாக்கி நடைமுறைக்கு கொண்டு வந்து இன்று மக்கள் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். நமது பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி இந்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 17202 விவசாயிகளுக்கு ரூ.1.22 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதைப்போலவே நமது காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ரூ.77.49 கோடி மதிப்பில் 22251 ஏழைகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்து கொடுத்துள்ளார் நமது முதல்வர்.

    தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ.2756 கோடி மதிப்பில் மகளிர் பெற்றுள்ள கடன் தொகையை ஒரே உத்தரவில் முதலமைச்சர் தள்ளுபடி செய்துள்ளார். தற்போது பால் விலை, பெட்ரோல் விலை ஆகியவை குறைக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமில்லாமல் பெண்களின் வாழ்வு மேம்படுத்துவதற்கு பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்து அதை சட்டமாக்கி மேலும் பெண்கள் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள ஆணை வழங்கிய இந்திய திருநாட்டில் ஒரே முதல்வர் நமது முதல்வர். மேலும் அனைத்து பகுதிகளிலும் மேம்பாலம் பணிகள், சாலைகள் சீரமைப்பு பணிகள், கட்டமைப்பு வசதிகள் போன்றவை விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் வாழ்வில் வளம் பெற வேண்டும் என்பதற்காக இன்றைக்கு சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த அரசுக்கும் நமது முதல்வருக்கும் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை தர வேண்டும் என இந்த தருணத்தில் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். மேலும் கொரோனா பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். இன்றைய தினம் இந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது பாராட்டுக்கள்.

    இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர் (உத்திரமேரூர்) சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம்), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவர் க.தேவேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பி.ஸ்ரீதேவி, ஒன்றியக் குழு துணைத் தலைவர் சேகர் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • 764 பயனாளிகளுக்கு ரூ.10.02 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
    • விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், முதல்வரின் ஆணைக்கிணங்க 22-12-2021 அன்று இதே இடத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 1195 மனுக்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் இன்று 764 பயனாளிகளுக்கு ரூ.10.02 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக பெறப்பட்ட மனுக்களில் 119 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு ரூ.8.71 கோடி செலவில் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

    விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் க.தேவேந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • போரூர் ஏரியின் நீர் அனைத்தும் குடிநீர் பயன்பாட்டிற்கு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கவே பயன்பட்டு வருகிறது.
    • ஏரியின் உபரி நீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட போரூர் ஏரி அருகே ரூ.100 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு பணிகளை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

    சென்னை மாவட்டம் மதுரவாயல் வட்டம் காரம்பாக்கம் மற்றும் போரூர் கிராமத்திலும், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் தெள்ளியகரம் கிராமத்திலும் அமைந்துள்ள போரூர் ஏரி நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ளது. இவ்வேரியின் நீர்பரப்பு 252 ஏக்கர் எனவும் கொள்ளளவு தற்பொழுது 67 மில்லியன் கன அடி ஆகும். இதன் வலது கரையோரம் 25 மீட்டர் நீளத்திற்கு உபரி நீர் வழிந்தோடி அமைந்துள்ளது. இவ்வேரியின் மொத்த கரையின் நீளம் 3092 மீட்டர் ஆகும். இவ்வேரியின் ஆயக்கட்டு பகுதிகள் அனைத்தும் நகர்மயம் ஆனதின் விளைவாக ஏரியின் நீர் அனைத்தும் குடிநீர் பயன்பாட்டிற்கு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கவே பயன்பட்டு வருகிறது.

    பல வருடங்களாக ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரானது மௌலிவாக்கம், மதனந்தபுரம் மற்றும் முகலிவாக்கம் கிராம பட்டா நிலங்களின் வழியாக சென்று முகலிவாக்கத்தில் உள்ள இராமாபுரம் ஓடையில் கலந்து மணப்பாக்கம் மற்றும் இராமாபுரம் வழியாக சென்று அடையாறு ஆற்றில் சேரும்படி அமைந்திருந்தது.

    தற்பொழுது உபரி நீர் செல்லும் பட்டா நிலங்கள் முழுவதும் குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டதாலும், ஏரியின் குறுக்கே புறவழிச்சாலை அமைக்கப்பட்டதாலும் ஏரியின் உபரி நீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் போரூர் ஏரியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கொளுத்துவான்சேரி, சீனிவாசபுரம், பரணிபுத்தூர், பட்டூர், மற்றும் அய்யப்பதாங்கல் கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த ஆண்டு பருவ மழையின் போது மேற்கண்ட பகுதிகள் பெரும் வெள்ள பாதிப்புக்கு உள்ளானது.

    தமிழக முதலமைச்சர் 04.12.2021 அன்று போரூர் ஏரியின் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு உடனடியாக வெள்ள பாதிப்புகளை தவிர்க்க பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் பருவமழைக் காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அடையாறு மற்றும் கொசஸ்தலையாறுகளை அகலப்படுத்துதல், நீர் வழித்தடங்களை மேம்படுத்துதல், கரைகளை சீரமைத்து பலப்படுத்துதல் மற்றும் வடிகால்கள் அமைத்தல் போன்ற பணிகளை ரூ.250 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இதில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் போரூர் ஏரியில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க காஞ்சிபுரம் மாவட்டம் போரூர் ஏரியின் உபரி நீர் கால்வாயினை மேம்படுத்துதல் மற்றும் நீர் ஒழுங்கி அமைத்தல் பணி, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிசாலையில் கூடுதல் பெட்டி வடிவிலான கல்வெட்டுகள் Push through முறை மூலம் அமைத்தல் பணி (ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது), காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் கொளுத்துவான்சேரி சாலையில் தந்தி கால்வாயிலிருந்து போரூர் ஏரியின் உபரி நீர் கால்வாய் வரை புதியதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைத்தல் பணி, சென்னை மாவட்டம் ஆலந்தூர் வட்டம் போரூர் ஏரியில் புதிய மதகு அமைத்தல் மற்றும் போரூர் ஏரியிலிருந்து இராமாபுரம் ஓடை வரை மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

    இப்பணியால் போரூர் ஏரியின் அருகில் உள்ள தனலட்சுமி நகர், குமரன் நகர், ஸ்ரீ சாய் நகர், மதுரம் நகர், ஜோதி நகர், பாலாஜி நகர், சீனிவாசபுரம், மற்றும் மாங்காடு, கொளுத்துவான்சேரி, சீனிவாசபுரம், பரணிபுத்தூர், பட்டூர், பெரியபணிச்சேரி, அய்யப்பன்தாங்கல், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மதனந்தபுரம், முகலிவாக்கம் மற்றும் மணப்பாக்கம் கிராமங்களில் வெள்ள நீர் சூழாமல் அடையாறு ஆற்றினை சென்றடையும். இதனால் குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்காமல் பொதுமக்கள் பாதுகாக்கப்படுவர். இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

    • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம், இலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி முகமை மற்றும் பல்வேறு அரசு துறைகள் சார்பாக அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், மு.பாபு, எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • குன்றத்தூர் போரூர் ஏரி அருகே வெள்ள ரூ.100 கோடி மதிப்பீட்டில் தடுப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன் பங்கேற்பு

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் போரூர் ஏரி அருகே ரூ.100 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு பணிகளை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் ஏ.வந்தேமாதரம், திருவள்ளுவர் கொசஸ்தலையாறு வடிநில கோட்ட நீர்வள ஆதாரத் துறை செயற்பொறியாளர் சி.பொதுப்பணி திலகம் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×