search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடகள வீராங்கனை"

    • கவுசல்யா என்ற தடகள வீராங்கனைக்கு வழங்கினார்.
    • அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி முதி யோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டாக் கோருதல், விதவை உதவித் தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித் தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனு தவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 339 மனுக்களை பொதுமக்களிடமிருந்தும், 32 மனுக்களை மாற்றுத்திற னாளிகளிடம் இருந்தும் மொத்தம் 371 மனுக்களை பெற்றார்.

    மேலும் 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் 30- ந் தேதி வரை உத்திரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான தேக் வாண்டோ சாம்பியன்சிப் போட்டிகளில் தமிழகம் சார்பில் வெற்றி பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி சுதேஷ்னாவை மாவட்ட கலெக்டர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து 5 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் வறுமை யில் வாழும், தாகம் தீர்த்தபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி கவுசல்யா என்ற தடகள வீராங்கனைக்கு தேவை யான விளையாட்டு உபகர ணங்கள், விளையாட்டு சீருடைகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வழங்கி னார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலு வலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜலட்சுமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    ×