search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாதி"

    • பாஜக ஆட்சியில், மக்களின் குறைகளைக் கேட்க அரசு தயாராக இல்லை.
    • யாத்திரை, வடகிழக்கு பிராந்திய மக்களின் துன்பங்களை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். தற்போது ராகுல் காந்தி அசாமில் நடைபயணம் மேற்கொண்டார்.

    அசாமை தொடர்ந்து ராகுல் காந்தி தனது யாத்திரையை அருணாச்சல பிரதேசத்தில் தொடங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மதம் மற்றும் மொழியின் பெயரால் பாஜக தங்களுக்குள் சண்டையிட மக்களைத் தூண்டுகிறது. நாட்டை பிரிக்கிறது. பாஜக ஒரு சில தொழிலதிபர்களின் நலனுக்காக பாடுபடுகிறதே தவிர, மிகவும் கஷ்டப்படும் மக்களின் நலனுக்காக அல்ல.

    மறுபுறம், காங்கிரஸ் மக்களை ஒன்றிணைப்பதற்கும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் செயல்படுகிறது. ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் இருந்து தொடங்கி மார்ச் 20ம் தேதி மும்பையில் முடிவடையும் 6,713 கிமீ நீளமுள்ள யாத்திரை, வடகிழக்கு பிராந்திய மக்களின் துன்பங்களை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

    நாங்கள் அருணாச்சல பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்தை வழங்கினோம். ஏழைகளின் பிரச்சினைகளை எழுப்பவும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தின் நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காகவும் எங்கள் கட்சி எப்போதும் தயாராக உள்ளது.

    பாஜக ஆட்சியில், மக்களின் குறைகளைக் கேட்க அரசு தயாராக இல்லை. அவர்களின் பிரச்சினைகளை ஊடகங்கள் எழுப்பவில்லை. யாத்திரையின் போது, காலை முதல் மாலை வரை பல மணிநேரம் பயணித்து, மக்களின் வலி மற்றும் துன்பங்களை கேட்கும் இடங்களில் நின்றுகொண்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாணவர்கள் மத்தியில் ஜாதி வன்மத்தை தூண்டியதாக ஆசிரியைகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • வன்மத்தை தூண்டிவிடும் ஆசிரியர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும்.

     மதுரை

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த காந்திமதிநாதன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நான் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறையின் ஆயோசனை குழு உறுப்பினராகவும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முன்னாள் கண்காணிப்பு குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறேன். கடந்த மாதம் சமூக வலைதளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ்-அப்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஆசிரியருக்கு எதிராக உயர்சாதியை சேர்ந்த ஒரு மாணவரை பள்ளி ஆசிரியைகள் தூண்டிவிட்டு பேசுவது போன்ற ஆடியோ வெளியானது.

    வாட்ஸ்-அப்பில் வெளிவந்த ஆடியோவில் பேசியவர்கள் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் உள்ள குவத்தூர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியைகள் என்பது தெரியவந்தது. மாணவர்கள் மத்தியில் சாதி வன்மத்தை தூண்டிவிடும் ஆசிரியர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரி யர்களே இதுபோன்று சாதி வன்மத்தை மாணவர்கள் மத்தியில் விதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    விசாரணை முடிவில், மனுதாரர் புகார் குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, விளாத்திகுளம் போலீஸ் டி.எஸ்.பி. ஆகியோர் மேற்பார்வையில் குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் 2 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    ×