search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜலந்தர் பிஷப்"

    கேரள கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் முக்கிய சாட்சியான பாதிரியாரின் மரணத்தில் மர்மம் உள்ளதால் விசாரணை நடத்தக்கோரி அவரது குடும்பத்தினர் ஆலப்புழா போலீசில் புகார் அளித்துள்ளனர். #FatherKuriakose #FatherKuriakosedeath #Keralanuncase
    சண்டிகர்:

    ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக இருந்தவர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.  இதுதொடர்பாக பிராங்கோ 3 நாள் விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். பின்னர் ஐகோர்ட் மூலம் ஜாமீன் பெற்றார்.
     
    இந்நிலையில், பேராயர் பிராங்கோவுக்கு எதிரான பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஜலந்தரைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் கட்டுதரா (வயது 62) இன்று திடீரென உயிரிழந்தார்.

    பஞ்சாப் மாநிலம்,  ஜலந்தர் நகரின் தசுயா பகுதியில் உள்ள செயின்ட் பால் தேவாலயத்தில் அவர் தங்கியிருந்த அறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாதிரியார் குரியகோஸ் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். பேராயர் பிராங்கோ மூலக்கலுக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது சகோதரர் கூறியதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், பாதிரியார் குரியகோஸ் மரணத்தில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தினர் இந்த சந்தேக மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ஆலப்புழா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  #FatherKuriakose  #FatherKuriakosedeath #Keralanuncase
    கேரள பாதிரியாருக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சியான பாதிரியார் ஒருவர் ஜலந்தரில் இன்று மரணம் அடைந்தார். #KeralaNunCase #FrancoMulakkal
    ஜலந்தர்:

    ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக இருந்தவர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.  இதுதொடர்பாக பிராங்கோ 3 நாள் விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். பின்னர் ஐகோர்ட் மூலம் ஜாமீன் பெற்றார்.

    இந்நிலையில், பேராயர் பிராங்கோவுக்கு எதிரான பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஜலந்தரைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் கட்டுதரா (வயது 62) இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.

    பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் தசுயா பகுதியில் உள்ள செயின்ட் பால் தேவாலயத்தில் அவர் தங்கியிருந்த அறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    இதுபற்றி டிஎஸ்பி ஷர்மா கூறுகையில், “செயின்ட் பால் தேவாலயத்தில் பாதிரியார் குரியகோஸ் வசித்து வந்தார். அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது உடலில் எந்த காயமும் இருந்ததாக தகவல் இல்லை. படுக்கையில் வாந்தி எடுத்திருக்கிறார். ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு தெரிந்தவரை, அவருக்கு எந்த பாதுகாப்பும் வழங்கப்படவில்லை” என்றார்.

    பாதிரியார் குரியகோஸ் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். பேராயர் பிராங்கோ மூலக்கலுக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது சகோதரர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியான பாதிரியார் குரியகோஸ் மரணம் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #KeralaNunCase #FrancoMulakkal 
    கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் கைதான பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு கேரள ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. #FrancoMulakkal #KeralaHC
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட் கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் தன்னை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பி‌ஷப்பாக பணியாற்றிய பிராங்கோ முல்லக்கல் கற்பழித்துவிட்டதாக பரபரப்பு புகார் கூறினார்.

    இந்த புகாரை பிராங்கோ முல்லக்கல் மறுத்தார். அதே சமயம் அவரை கேரளாவுக்கு வரவழைத்து தனிப்படை போலீசார் விசாணை நடத்தினார்கள். பல நாட்கள் தொடர்ந்த விசாரணையின் முடிவில் அவரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிராங்கோ முல்லக்கல் தற்போது கோட்டயத்தில் உள்ள பாலா ஜெயிலில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் கேரள ஐகோர்ட்டில் தனக்கு ஜாமீன் வழங்க கேட்டு பிராங்கோ முல்லக்கல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, பிராங்கோ முல்லக்கல்லுக்கு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    பிராங்கோ முல்லக்கல் கேரளாவுக்குள் நுழையக் கூடாது, அவர் தனது பாஸ்போர்ட்டை ஐகோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும், சாட்சியங்களை கலைக்கக் கூடாது, 2 வாரத்திற்கு ஒரு முறை விசாரணை அதிகாரிகள் முன்பு அவர் ஆஜராக வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது.  #FrancoMulakkal  #KeralaHC

    சிலி நாட்டில் சிறார்களுக்கு எதிரான பாலியல் புகாரில் சிக்கிய இரு பிஷப்புகளின் பதவியை பறித்து போப் பிரான்சிஸ் இன்று உத்தரவிட்டுள்ளார். #PopeFrancis #Chileanbishops #bishopsdefrocked
    வாட்டிகன் சிட்டி:

    கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் பல பிஷப்புகளுக்கு எதிராக சமீபகாலமாக பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்த புகார்கள் தொடர்பாக விசாரித்துவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் அவ்வப்போது உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    அவ்வகையில், கேரள மாநிலத்தில் ஒரு கன்னியாஸ்திரியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பிராங்கோ முல்லக்கல் என்பவரை ஜலந்தர் பிஷப் பதவியில்  இருந்து நீக்கம் செய்து வாட்டிகன் அரண்மனை சமீபத்தில் உத்தரவிட்டது.

    இதேபோல், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் உள்ள சில பிஷப்களும், சிறார்-சிறுமிகளிடம் தகாத வகையில் பாலுறவு வைத்துகொண்டதாக புகார்கள் எழும்பின.

    இதுதொடர்பாக, விசாரணை நடத்திய போப் பிரான்சிஸ் பெர்னான்டோ கரோடிமா(88) என்பவரை கடந்த மாதம் பிஷப் பதவியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    மற்ற சம்பவங்கள் தொடர்பால தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் சிலி நாட்டில் உள்ள லா செரெனா நகர ஆர்ச்பிஷப் பிரான்சிஸ்க்கோ ஜோஸ் கோக்ஸ் ஹுனீயூஸ் மற்றும் இக்குவிகியூ நகர ஆர்ச்பிஷப் மார்க்கோ அன்ட்டோனியோ பெர்னான்டஸ் ஆகியோரை போப் பதவி நீக்கம் செய்துள்ளதாக வாட்டிகன் அரண்மனை இன்று வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.

    வாட்டிகன் அரண்மனையின் சட்டங்களின்படி, போப்பின் இந்த முடிவு உறுதியானது, இறுதியானது. இதை எதிர்த்து யாரும் முறையீடு செய்ய முடியாது எனவும் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PopeFrancis  #Chileanbishops #bishopsdefrocked
    கேரள மாநிலத்தை சேர்ந்த கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான ஜலந்தர் பிஷப் பிராங்கோ முல்லக்கல்லின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. #FrancoMulakkal #Judicialcustody
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கோட்டயம் போலீசார் முன்னிலையில் கடந்த மாதம் 19-ம் தேதி ஆஜராகினார். வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது.
     
    பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக  பிஷப் பொறுப்பில் இருந்து பிராங்கோ முல்லக்கல் தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் நகரில் உள்ள போப் பிரான்சிஸ் அரண்மனை அதிகாரிகள் அறிவித்தனர்.



    தொடர்ந்து மூன்று நாட்களாக பிராங்கோ முல்லக்கலிடம் போலீசார் விசாரணை நடத்திய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் தன்னை ஜாமினில் விடுவிக்குமாறு முல்லக்கல் சார்பில் கேரளா ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்நிலையில், அவரது காவல் முடிவடைந்ததால் போலீசார் இன்று அவரை கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிராங்கோ முல்லக்கல்லின் நீதிமன்ற காவலை (14 நாட்கள்) வரும் 20-ம் தேதிவரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். #FrancoMulakkal #Judicialcustody
    கேரள கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக தடை செய்யப்பட்ட பகுதியில் ஊர்வலம் நடத்திய மலையாள நடிகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #KeralaNun #JoyMathew
    கேரள மாநிலம் கோட்டயம் குருவிலங்காட்டில் உள்ள கன்னியாஸ்திரிகள் மடத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து ஜலந்தரில் பி‌ஷப்பாக பணியாற்றி வந்த பிராங்கோ முல்லக்கல் கைது செய்யப்பட்டார்.

    இந்தநிலையில் கோழிக்கோட்டில் கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக நடந்த ஊர்வலத்தில் மலையாள நடிகர் ஜாய்மேத்யூ என்பவர் பங்கேற்றார். அவர்கள் ஊர்வலம் அந்த பகுதியில் உள்ள மிட்டாய் தெரு வழியாக சென்றது. அந்த பகுதியில் ஊர்வலம் நடத்த ஏற்கனவே போலீஸ் தடை உள்ளது.

    இந்த நிலையில் அந்த பகுதி வழியாக ஊர்வலம் சென்றதால் நடிகர் ஜாய் மேத்யூ உள்பட 24 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இது பற்றி நடிகர் ஜாய்மேத்யூ கூறும்போது, என்னை மிரட்ட போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். நாங்கள் ஊர்வலம் நடத்திய பாதை போலீஸ் தடை விதிக்கப்பட்ட இடம் என்பதை யாரும் தெரிவிக்கவில்லை என்றார். #KeralaNun #JoyMathew
    கேரளாவில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு நீதிமன்ற காவலை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டித்து கோட்டயம் பாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. #BishopFrancoMulakkal
    கோட்டயம்:

    கேரள மாநில கன்னியாஸ்திரி கற்பழிப்பு தொடர்பாக பேராயர் பிராங்கோ முல்லக்கல் (வயது 54) கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பாலாவில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். அதேநேரம் பேராயருக்கு ஜாமீன் கேட்டு அவரது வக்கீல்களும் முறையிட்டனர். இதில் பேராயரை ஜாமீனில் விட மறுத்த நீதிபதி, அவரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

    இந்தநிலையில்,  பேராயரின் 2 நாள் போலீஸ் காவல் இன்று  மதியத்துடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிராங்கோவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டித்து  உத்தரவிட்டது. இதையடுத்து பாலா நகரில் உள்ள சிறைச்சலையில் அவர் அடைக்கப்பட உள்ளார்.

    இதற்கிடையே கோட்டயம் நீதிமன்றத்தில் பிராங்கோவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. #BishopFrancoMulakkal
    கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார புகாரில் கைதான பிராங்கோ முல்லக்கல் திடீர் நெஞ்சுவலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். #KeralaNun #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கோட்டயம் போலீசார் முன்னிலையில், 19-ம் தேதி ஆஜராகினார். வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது. 

    பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை நேற்று முன்தினம் அறிவித்தது. 

    தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று பிராங்கோ முல்லக்கலிடம் போலீசார் விசாரணை நடத்திய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். எர்னாகுளாத்தில் கைது செய்யப்பட்ட அவர், கோட்டயம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது பிராங்கோ முல்லக்கல் தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக போலீசாரிம் கூறினார்.

    இதைத்தொடர்ந்து, எட்டுமானூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ஈ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில மணி நேர சிகிச்சைக்கு பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கோட்டயம் அழைத்துச் செல்லப்பட்டார்.

    இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவரை, விசாரணைக்காவலில் எடுக்க திட்டமிட்டுள்ள போலீசார், அது தொடர்பான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். #KeralaNun #FrancoMulakkal
    கன்னியாஸ்திரி அளித்த பாலியல் புகாரினால் கைது செய்யப்பட்ட பிஷப் பிராங்கோ முல்லக்கலுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். #KeralaNun #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு பிராங்கோ முல்லக்கல் நேரில் ஆஜரானார்.

    வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது.

    பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை நேற்று முன்தினம் அறிவித்தது.

    இதற்கிடையே, தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று பிராங்கோ முல்லக்கலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் அவரை கொச்சி போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், எர்னாகுளாத்தில் கைது செய்யப்பட்ட அவர், கோட்டயம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். செல்லும் வழியில் பிராங்கோ முல்லக்கல் தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக போலீசாரிம் கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, எட்டுமானூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ஈ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். #KeralaNun #FrancoMulakkal
    கன்னியாஸ்திரி பாலியல் புகாரில் சிக்கிய பிராங்கோ முல்லக்கலை போலீசார் இன்று கொச்சியில் கைது செய்துள்ளனர். #KeralaNun #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பி‌ஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு பிராங்கோ முல்லக்கல் நேரில் ஆஜரானார்.



    வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது. 

    பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை நேற்று அறிவித்தது. 

    இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் பிராங்கோ முல்லக்கலிடம்  போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் அவரை கொச்சி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். #KeralaNun #FrancoMulakkal
    பாலியல் புகாரில் சிக்கிய பிராங்கோ முல்லக்கல், பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை இன்று அறிவித்துள்ளது. #KeralaNun #FrancoMulakkal #Vatican
    வாடிகன்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பி‌ஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு பிராங்கோ முல்லக்கல் நேற்று நேரில் ஆஜரானார்.



    வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையே, இன்றும் இரண்டாவது நாளாக பிராங்கோ முல்லக்கலிடம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை இன்று அறிவித்துள்ளது.  #KeralaNun #FrancoMulakkal #Vatican
    கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகாரை தொடர்ந்து கேரள ஐகோர்ட்டில் பிஷப்-க்கு முன்ஜாமீன் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக வக்கீல் தெரிவித்தார். #BishopFranco #keralanun
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், ஜலந்தரில் பி‌ஷப்பாக பணியாற்றி வரும் பிராங்கோ முல்லக்கல் மீது கற்பழிப்பு புகார் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் போப் ஆண்டவருக்கும் கடிதம் எழுதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி கோட்டயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லை நாளை (19-ந்தேதி) போலீசார் முன்பு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று சம்மனும் அனுப்பி இருந்தனர்.

    இதை ஏற்று விசாரணைக்கு ஆஜராவதாக பி‌ஷப்பும் கூறி உள்ளார். மேலும் தனது பி‌ஷப் பொறுப்புகளையும் அவர் மூத்த பாதிரியார் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நிலையில் பிராங்கோ முல்லக்கல்லின் வக்கீல் விஜயாபானு கூறியதாவது:-

    பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் சார்பில் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அதேசமயம் போலீஸ் விசாரணைக்கு பி‌ஷப் ஆஜராக எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. திட்டமிட்டபடி நாளை அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பி‌ஷப் மீதான புகார் பற்றி விசாரணை நடத்தி வரும் கோட்டயம் போலீஸ் அதிகாரி ஹரிசங்கர் கூறியதாவது:-

    பஞ்சாப் போலீஸ் மூலம் நாளை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு ஏற்கனவே தகவல் கொடுத்து விட்டோம். அவர் கைது செய்யப்படுவாரா? என்பது பற்றி அவருக்கு எதிரான ஆதாரங்களை விஞ்ஞானப் பூர்வமாக ஆய்வு செய்த பின்னர்தான் முடிவு செய்ய முடியும். நாளை அவரிடம் நடைபெறும் விசாரணையின் இறுதியில்தான் இது தொடர்பான நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    இதற்கிடையில் பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரிக்கு ஆதரவாகவும் பி‌ஷப்பை கைது செய்ய கோரியும் கொச்சியில் 5 கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இன்று 10-வது நாளாக இந்த போராட்டம் தொடர்கிறது.

    இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரி நேற்று பங்கேற்றார். அவர் பி‌ஷப்பை கைது செய்யும் வரை தான் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

    போராட்டம் நடைபெறும் இடத்தில் அவர் படுத்த நிலையில் தொடர்ந்து போராடி வருகிறார். அவரை நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அன்னா மல்கோத்ரா (வயது 92) சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இன்றும் பல்வேறு அமைப்பினரும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். #BishopFranco #keralanun
    ×