search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள பேராயர் பிராங்கோவின் நீதிமன்ற காவல் அக்டோபர் 6 வரை நீட்டிப்பு
    X

    கேரள பேராயர் பிராங்கோவின் நீதிமன்ற காவல் அக்டோபர் 6 வரை நீட்டிப்பு

    கேரளாவில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு நீதிமன்ற காவலை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டித்து கோட்டயம் பாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. #BishopFrancoMulakkal
    கோட்டயம்:

    கேரள மாநில கன்னியாஸ்திரி கற்பழிப்பு தொடர்பாக பேராயர் பிராங்கோ முல்லக்கல் (வயது 54) கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பாலாவில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். அதேநேரம் பேராயருக்கு ஜாமீன் கேட்டு அவரது வக்கீல்களும் முறையிட்டனர். இதில் பேராயரை ஜாமீனில் விட மறுத்த நீதிபதி, அவரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

    இந்தநிலையில்,  பேராயரின் 2 நாள் போலீஸ் காவல் இன்று  மதியத்துடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிராங்கோவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டித்து  உத்தரவிட்டது. இதையடுத்து பாலா நகரில் உள்ள சிறைச்சலையில் அவர் அடைக்கப்பட உள்ளார்.

    இதற்கிடையே கோட்டயம் நீதிமன்றத்தில் பிராங்கோவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. #BishopFrancoMulakkal
    Next Story
    ×