search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Court Extends"

    கேரள மாநிலத்தை சேர்ந்த கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான ஜலந்தர் பிஷப் பிராங்கோ முல்லக்கல்லின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. #FrancoMulakkal #Judicialcustody
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கோட்டயம் போலீசார் முன்னிலையில் கடந்த மாதம் 19-ம் தேதி ஆஜராகினார். வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது.
     
    பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக  பிஷப் பொறுப்பில் இருந்து பிராங்கோ முல்லக்கல் தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் நகரில் உள்ள போப் பிரான்சிஸ் அரண்மனை அதிகாரிகள் அறிவித்தனர்.



    தொடர்ந்து மூன்று நாட்களாக பிராங்கோ முல்லக்கலிடம் போலீசார் விசாரணை நடத்திய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் தன்னை ஜாமினில் விடுவிக்குமாறு முல்லக்கல் சார்பில் கேரளா ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்நிலையில், அவரது காவல் முடிவடைந்ததால் போலீசார் இன்று அவரை கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிராங்கோ முல்லக்கல்லின் நீதிமன்ற காவலை (14 நாட்கள்) வரும் 20-ம் தேதிவரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். #FrancoMulakkal #Judicialcustody
    ×