என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்"
- நவீன தொழில் நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயணிக்க வேண்டும்.
- வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில் நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும்.
சென்னை:
இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில் நுட்பம் நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
சமீபத்தில் ஒடிசா தனியார் டெலிவிஷன் சேனல் ஒன்று செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்தது. பல்வேறு துறைகளில் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை செயல்படுத்த உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் இதை தெரிவித்தார். இது தொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது:-
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை சுப்ரீம் கோர்ட்டில் செயல்படுத்த உள்ளோம். நவீன தொழில் நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயணிக்க வேண்டும்.
வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில் நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும்.
காணொலி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழ்நாட்டில் முதல் முறையாக இம்மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
- மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை அளிக்கவும், நோயாளிகள் ஆபத்தான நிலைக்கு செல்வதை தவிர்க்க உதவும்.
சென்னை:
காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனையில் தமிழ் நாட்டில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் நோயாளிகள் கண்காணிப்பு முறை தொடங்கப்பட்டு உள்ளது. இது குறித்து எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் இணைவேந்தர் முனைவர் பா.சத்தியநாராயணன் கூறியதாவது:
சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் உலக தரத்தில் புதியதாக எஸ்.ஆர்.எம். குளோபல் என்ற மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடங்கப்பட்டு உள்ளது.
நோயாளிகளுக்கு அழுத்தம் இல்லாமல் நல்ல சூழ்நிலையுடன் சிகிச்சை அளிக்கும் வகையில் தற்போது 120 படுக்கை வசதியுடன் நவீன மருத்துவ சாதனங்களுடன், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், நோயாளிகளின் தேவை மற்றும் பாதுகாப்புக்கு உகந்த வகையில் அமைக்கபட்டுள்ள இம்மருத்துவ மனையில் உள்நோயாளிகள், வெளி நோயாளிகளுக்கு என்று தனித்தனி பிரிவுகளுடன் உயர் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய நவீன ஆய்வக வசதி உள்ளது.
இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 'தொடர் பில்லா நோயாளிகள் கண்காணிப்பு திட்டம்' தமிழ்நாட்டில் முதல் முறையாக இம்மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புரட்சிகரமான இத்திட்டம் மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை அளிக்கவும், நோயாளிகள் ஆபத்தான நிலைக்கு செல்வதை தவிர்க்க உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்