search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூப்பிரண்டு"

    • தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கேரளாவையொட்டியுள்ள குமரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளாவையொட்டியுள்ள குமரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

    ஆன்லைன் லாட்டரி விற்பனை மட்டுமின்றி கேரளா லாட்டரி சீட்டுகளும் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் அதிரடி சோ தனை மேற்கொண்டனர். அப்போது லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.55 ஆயிரம் மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். விசாரணையில் லாட்டரி சீட்டு விற்பனை குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. லாட்டரிசீட்டு விற்பனை நடைபெற்று வரும் கடையில் வேலை பார்த்த பெண்க ளுக்கு தனியாக செல்போன் வாங்கி கொடுத்து உள்ளனர். அந்த செல்போன் மூலமாக லாட்டரி சீட்டு வாங்கு பவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

    லாட்டரி சீட்டு வாங்கு பவர்கள் தினமும் வந்து லாட்டரி சீட்டு வாங்காத பட்சத்தில் பெண்களே தொடர்பு கொண்டு பேசி லாட்டரி சீட்டுகளை வாங்கு மாறு தெரிவித்துள்ளனர். செல்போன் மூலமாக அதிகளவு லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று உள்ளது.

    குறிப்பிட்ட அளவு லாட்டரி சீட்டு விற்பனை செய்தால் விற்பனை செய்தவர்களுக்கும் கமிஷன் வழங்கப்பட்டு உள்ளது. லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறும் பகுதிக்கு புதிதாக நபர்கள் வரும் பட்சத்தில் அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் வகையில் ரகசிய குறியீட்டு எண்களும் பயன் பத்தப்பட்டுள்ளது. அலாரம் உள்பட சிவப்பு பச்சை லைட்டுகளும் பொருத்தப்பட்டு உள்ளது.

    லாட்டரி சீட்டு விற்பனையின் பின்னணியில் உள்ள வர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். லாட்டரி சீட்டு விற்பனை செய்த பகுதியில் சோதனை நடத்தி 2 நாட்களே ஆன நிலையில் மீண்டும் நாகர்கோவில் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெறுவதாக சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ஆனால் போலீசார் இதை கண்டு கொள்ளாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனி கவனம் செலுத்தி அனுமதி இன்றி லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • 20-க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • சமூக விரோத செயல்களை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலை யத்தில் உள்ள பொது நாட்குறிப்புகள், பாரா மாற்றும் புத்தகம், வழக்கு சுற்று பதிவேடு, 7 ஆண்டுகள் நிலுவையில் உள்ள வழக்கு களின் கோப்பு உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்குகளை புலன் விசாரணை முடித்து குற்றப் பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும். பிடி வாரணட் நிலுவையில் உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். பொது மக்கள் அளிக்கும் புகாருக்கு உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் நிலைய சரகத் திற்கு உட்பட்ட பகுதியில் மது, கஞ்சா, புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களை முற்றி லும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள், பாலியல் குற்றங்கள், குழந்தை திரு மணங்கள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இதே போல் சாலை பாது காப்பு விதிமுறைகள், போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட வற்றை மேற் கொள்ள வேண்டும் என போலீசாரிடம் அறிவு றுத்தி னார். முன்ன தாக தமிழ்நாடு காவல் துறை சார்பில் தியாகதுருகம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள பல் பொருள் அங்காடியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பன்னீர் செல்வம், நிலைய எழுத்தர் சீனிவாசன், தனிப் பிரிவு போலீசார் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பணமோசடி குறித்து 796 வழக்குகளும், நிலஅபகரிப்பு தொடர்பாக 400 வழக்குகள்
    • அடிதடி மற்றும் அரிவாள் வெட்டு வழக்குகள் 580 பதிவாகி உள்ளது.

    நாகர்கோவில், ஏப்.9-

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 5 வகையான வழக்குகள் பதிவாகின்றன. வேலை வாய்ப்பு மோசடி, வெளிநாட்டில் வேலை என கூறி ஏமாற்றுதல் தொடர்பாக 400 புகார்களும், பணமோசடி குறித்து 796 வழக்குகளும், நிலஅபகரிப்பு தொடர்பாக 400 வழக்குகளும், வரதட்சணை கொடுமை மற்றும் அது சம்பந்தமான வழக்குகள் 100, அடிதடி மற்றும் அரிவாள் வெட்டு வழக்குகள் 580 பதிவாகி உள்ளது.

    இதில் தக்கலை சப்-டிவிஷனில் 200 வழக்குகளும் குளச்சல் சப்-டிவிஷனில் 150 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். குற்றங்கள் நடைபெறும் முன்பே தடுப்பது என முடிவு செய்து இதற்கு தனி குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    வேலைவாய்ப்பு குறித்த விளம்பரங்கள் வந்தால் அதன் உண்மை தன்மையை அறிய விளம்பரம் வந்த அன்று போலீசார் நேரில் விசாரித்து மோசடியென தெரிந்தால் உடனே நடவடிக்கை மேற்கொள்வார்கள். குமரி மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

    13 ஆயிரத்து 900 வழக்குகளில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளோம். இதில் 9,700 வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன. மேலும் 4000 வழக்குகள் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு வந்துவிடும். பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் புதன்கிழமை தோறும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 10,716 புகார்கள் பெறப்பட்டுள்ளது.

    இதில் 8000 வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளது. 2000 மனுக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்தால் உரிமையா ளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கந்துவட்டி கொடுமை தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நேரில் புகார் அளிக்கலாம். இது வரை குமரி மாவட்டத்தில் 3 கந்து வட்டி வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. குமரி மாவட்டத்தில் அங்கீ காரம் இல்லாமல் செயல் படும் இயற்கை மையங்கள், மசாஜ் கிளப்புகள் குறித்து பொது மக்கள் புகார் அளிக்கலாம். அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்ப டும். இதற்காக பொது சுகாதாரதுறை இணை இயக்குனர் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஆகியோருடன் இணைந்து போலீசார் நடவடிக்கை மேற்கொள்வார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள 33 போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அந்த மனுக்கள் மீது உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கன்னியாகுமரியில் கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

    கன்னியாகுமரி :

    கேரளாவில் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை மறுநாள் (18-ந்தேதி) கன்னியாகுமரி வருகிறார்.

    பகல் 12 மணிக்கு திருவனந் தபுரத்தில்இருந்துஹெலி காப்டர் மூலம் புறப்படும் அவர் 12.30 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனிப்படகில் சென்று பார்வையிடும் அவர், விவேகானந்தபு ரத்தில் உள்ள விவேகானந்த கேந்திராவுக்கும் செல்கிறார்.

    அங்கு உள்ள ராமா யண தரிசன சித்திர கண் காட்சி கூடம் மற்றும் பாரத மாதா சிலையை பார்வையிடுகிறார்.பின்னர் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சியை பார்வை யிடும் அவர் பகவதி அம்மன் கோவிலுக்கும் செல்கிறார்.

    ஜனாதிபதி வருகை யொட்டி கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுஉள்ளன. அரசு விருந்தினர் மாளிகை, ஹெலிகாப்டர் இறங்கு தளம், விவேகானந்தர் நினைவு மண்டபம் பகுதி களில் போலீசார் தற்போது முதலே பாதுகாப்பு நட வடிக்கைகளை தொடங்கி விட்டனர்.இதனை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன், மாவட்ட சிறப்பு வருவாய்அதிகாரி ரேவதி, நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் மற்றும் அதிகாரிகள்நேரில்சென்று ஆய்வு செய்தனர்.

    அவர்கள் விவகோனந்தர் நினைவு மண்டபம் உள் ளிட்ட பகுதிகளை பார்வை யிட்டனர். ஜனாதிபதி வருகை யொட்டி ஹெலி காப்டர் ஒத்திகை நிகழ்ச்சி யும் நடத்தப்பட்டது.

    • வாரத்தில் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • குறிப்பாக பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை தொடர்பாக அதிக மனுக்கள் வந்துள்ளது. போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் தினமும் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

    இன்ஸ்பெக்டர் அடங்கிய குழுவினர் இந்த மனுக்களை பெற்று அதனை போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வாரத்தில் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதையடுத்து மனுக்கள் அளிப்பதற்காக புதன் கிழமை தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து மனுக்களை கொடுத்து செல்கிறார்கள்.

    இன்றும் மனுக்கள் அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.சுமார் 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது மனுக்களை அளித்தனர். அதன் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் விசாரணை மேற் கொண்டார்.

    குறிப்பாக பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை தொடர்பாக அதிக அளவு மனுக்கள் வந்துள்ளது. மேலும் போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் மனு அளித்தனர்.

    இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுறுத்தினார். மனு அளிப்பதற்காக இன்று வந்த 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து அவருக்கு போலீசார் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.சிறிது நேரத்துக்கு பிறகு அந்த பெண் சகஜநிலைக்கு திரும்பினார்.பின்னர் அந்த பெண்ணை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.மனு கொடுக்க வந்த இடத்தில் பெண் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்
    • வாகனங்களை மெதுவாக ஓட்டிச் செல்ல அறிவுறுத்த வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்தார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் நில புரோக்கர் சேவியர் பாபு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளி சுபின் என்பவரை கைது செய்தனர். அவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும், உணவு கொண்டு செல்லும் பையில் கத்தி வைத்திருந்த தும் தெரிய வந்தது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இது தொடர்பாக அவர்களை வரவழைத்து அறிவுரையும் வழங்கினார்.

    உணவு விநியோகிக்கும் பணியை செய்பவர்கள், மக்களுடன் நேரடி தொடர்பு வைக்கிறார்கள். எனவே பொறுப்புடன் செயல்பட வேண்டும். வேலைக்கு சேர்க்கும் போது நன்னடத்தை சான்றி தழ்களை நிறுவனங்கள் பெற வேண்டும். வாகனங்களை மெதுவாக ஓட்டிச் செல்ல அறிவுறுத்த வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்தார். இதேபோல் உணவு விநியோகிக்கும் ஊழியர்கள், தங்களுக்கு உள்ள பிரச்சினைகளை போலீசாரிடம் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

    • மதுரை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • கடைக்கான உரிமம் ரத்து செய்து சீல் வைக்கப்படும் என்று மதுரை போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் குட்கா புகையிலை விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சமயநல்லூர் பஜாரில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு டீக்கடை நடத்தி வரும் ஊர்மெச்சிகுளம் மீனாட்சிசுந்தரம், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அந்த டீக்கடை மற்றும் பூக்கடைக்கு சீல் வைத்தனர்.

    மதுரை மாவட்டத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 54 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.85ஆயிரம் மதிப்பு உள்ள 44. 397 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    7 கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை, பதுக்கல் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் சம்பந்தப்பட்டவரின் கடைக்கான உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டு சீல் வைக்கப்படும் என்று மதுைர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் எச்சரித்தார்.

    ×