search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறைவாசம்"

    • பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் சகஜம்
    • குற்றவாளியின் கொடூர செயலால் அவரது ஒரு மகள் கர்ப்பமடைந்தார்

    தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கிரிமினல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. அதிலும் பாலியல் குற்றங்களுக்கு பிரம்படியுடன் கூடிய பல வருட சிறை தண்டனை அங்கு வழக்கமான ஒன்று.

    மலேசியாவின் ஜொஹோர் மாவட்டத்தில் உள்ளது முவார்.

    இங்குள்ள 53 வயதான சுகாதார பணியாளர் ஒருவருக்கு 12 மற்றும் 15 வயது நிரம்பிய இரு மகள்கள் இருக்கின்றனர். இவர் 2018-ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு ஜூலை வரை, தனது சொந்த மகள்களை முவார் பகுதியிலுள்ள பக்ரி மற்றும் ஜலன் ஜெரம் டெபி எனும் இரு பகுதியிலுள்ள வீடுகளில் கொண்டு சென்று பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார்.

    இவரது இந்த கொடூர செயலால் 2 மகள்களில் ஒரு மகள் கர்ப்பமடைந்திருக்கிறார். இதனையடுத்து இந்த பணியாளர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டது.

    காவல்துறை சார்பாக ஆஜரான துணை அரசு வழக்கறிஞர் இவருக்கு மிக கடுமையான தண்டனை வழங்குமாறு கோரிக்கை வைத்தார். ஆனால் குற்றவாளியான அவரது தந்தை, தனக்கென வக்கீல் வைத்து கொள்ளாமல், குற்றத்தை ஒப்பு கொண்டு, தான் மனம் வருந்துவதாகவும் அதனால் தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறும் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.

    இதனை ஏற்க மறுத்த நீதிபதி அபு பக்கர் மனத், குற்றவாளி தனது கொடுமையான குற்றத்திற்காக உண்மையிலேயே வருந்தும் வகையில் அவருக்கு 702 வருட சிறைத்தண்டனையும், இத்துடன் 234 பிரம்படியும் கொடுக்கப்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

    சமீபத்தில் இதே போல், தனது 15 வயது மகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக ஜொஹோரில் ஒருவருக்கு 218 வருட சிறைத்தண்டனையும், 75 பிரம்படியும் தண்டனையாக வழங்கப்பட்டது.

    மலேசியாவில் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது போல் இந்தியாவிலும் கொண்டு வரப்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 4 முக்கிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது
    • எதிர்த்து போரிட எனக்கு முழு உரிமை உள்ளது

    குற்றச்சாட்டு உறுதியானால் தண்டனையாக நீண்ட சிறைவாசம் அனுபவிக்கக் கூடிய குற்றச்சாட்டுக்களை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அந்நாட்டு மத்திய நீதிமன்றம் பதிவு செய்திருக்கிறது.

    2020 அதிபர் தேர்தல் முடிவை மாற்ற முயற்சித்ததாக கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டிரம்ப் இந்த வழக்கிற்காக வியாழனன்று வாஷிங்டனிலுள்ள மத்திய நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

    இது சம்பந்தமாக 5-வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான அமெரிக்காவை ஏமாற்றும் நோக்கில் சதி செய்தல், 20 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தல், உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை தடுக்க சதி செய்தல் மற்றும் 10 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட உரிமைகளை ஒருவர் நிறைவேற்ற முயலுவதை தடுக்க சதி செய்தல் என 4 முக்கிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கிடைக்கவிருந்த வாக்குகளை தனதாக்கி கொள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க ஒரு வார காலம் இந்த சதிக்கான திட்டம் தீட்டப்பட்டதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிரம்புடன் சதி செய்ததாக பெயர் வெளியிடப்படாத 6 பேர்களும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் தற்போது அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவாகவில்லை. ஒருவேளை பின்னர் அவர்கள் பெயர்களும் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.

    ஆனால் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள டிரம்ப், 2024 தேர்தல் பிரசாரத்திற்கு தான் செல்வதை தடுக்கும் விதமாக சிறப்பு வழக்கறிஞர் ஜேக் ஸ்மித் தீய எண்ணத்துடன் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

    சமீபத்திய சமூக வலைதள பதிவில், "2016 தேர்தலில் நான் வென்றதை எதிர்த்து ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்தியதைபோல், ஒரு தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என தெரிந்தால் அதனை எதிர்த்து போரிட எனக்கு முழு உரிமை உள்ளது" என டிரம்ப் கூறியுள்ளார்.

    • தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளாா்.
    • மதுபோதையில் இருந்த மணிகண்டன் செல்வராஜை மண்வெட்டியால் தலையில் தாக்கியது

    திருப்பூர்,ஜூன்.28-

    பல்லடம் அண்ணா நகா் பகுதியை சோ்ந்தவா் ஜெய் கௌதம்(வயது 31). இவா், கடந்த 2018 ம் ஆண்டு புதிதாக வீடுகட்ட முடிவு செய்து, ஆனந்த் என்ற பொறியாளரிடம் கட்டட வேலையை ஒப்படைத்துள்ளாா். கட்டுமான வேலைக்கு வந்த நீலகிரி மாவட்டம், கூடலூா் தேவா்சோலை பகுதியைச் சோ்ந்த சிவன் மகன் செல்வராஜ் (40), கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (33) ஆகியோரை தனது அலுவலக தொழிலாளா்கள் குடியிருப்பிலேயே ஜெய் கௌதம் தங்க வைத்துள்ளாா்.

    செல்வராஜ், மணிகண்டன் இருவரும் அடிக்கடி மது போதையில் தகராறில் ஈடுபட்டு வந்ததால் இருவரையும் ஊருக்கு செல்லும்படி ஜெய் கௌதம் தெரிவித்துள்ளாா். இந்நிலையில் மறுநாள் (மாா்ச் 3, 2018) மணிகண்டன் மட்டும் வேலைக்கு சென்றுள்ளாா். அப்போது செல்வராஜ் குறித்து கேட்டபோது தெரியாது என்று மணிகண்டன் தெரிவித்துள்ளாா்.

    சந்தேகமடைந்த ஜெய் கௌதம், அவா்கள் தங்கியிருந்த அறையில் சென்று பாா்த்தபோது செல்வராஜ் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளாா். அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி 2018, மாா்ச் 4-ந்தேதி செல்வராஜ் உயிரிழந்தாா். இது தொடா்பாக பல்லடம் காவல் நிலையத்தில் ஜெய் கௌதம் அளித்த புகாா் அடிப்படையில் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

    விசாரணையில் மதுபோதையில் இருந்த மணிகண்டன் செல்வராஜை மண்வெட்டியால் தலையில் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து மணிகண்டனை போலீசாா் கைது செய்தனா்.

    இந்த வழக்கின் விசாரணை திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சாட்சிகள் மற்றும் விசாரணையின் அடிப்படையில் மணிகண்டன் (33) குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொா்ணம் நடராஜன் உத்தரவிட்டாா்.

    ×