search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு  ஆயுள் தண்டனை திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு
    X
    கோப்பு படம்

    தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு

    • தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளாா்.
    • மதுபோதையில் இருந்த மணிகண்டன் செல்வராஜை மண்வெட்டியால் தலையில் தாக்கியது

    திருப்பூர்,ஜூன்.28-

    பல்லடம் அண்ணா நகா் பகுதியை சோ்ந்தவா் ஜெய் கௌதம்(வயது 31). இவா், கடந்த 2018 ம் ஆண்டு புதிதாக வீடுகட்ட முடிவு செய்து, ஆனந்த் என்ற பொறியாளரிடம் கட்டட வேலையை ஒப்படைத்துள்ளாா். கட்டுமான வேலைக்கு வந்த நீலகிரி மாவட்டம், கூடலூா் தேவா்சோலை பகுதியைச் சோ்ந்த சிவன் மகன் செல்வராஜ் (40), கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (33) ஆகியோரை தனது அலுவலக தொழிலாளா்கள் குடியிருப்பிலேயே ஜெய் கௌதம் தங்க வைத்துள்ளாா்.

    செல்வராஜ், மணிகண்டன் இருவரும் அடிக்கடி மது போதையில் தகராறில் ஈடுபட்டு வந்ததால் இருவரையும் ஊருக்கு செல்லும்படி ஜெய் கௌதம் தெரிவித்துள்ளாா். இந்நிலையில் மறுநாள் (மாா்ச் 3, 2018) மணிகண்டன் மட்டும் வேலைக்கு சென்றுள்ளாா். அப்போது செல்வராஜ் குறித்து கேட்டபோது தெரியாது என்று மணிகண்டன் தெரிவித்துள்ளாா்.

    சந்தேகமடைந்த ஜெய் கௌதம், அவா்கள் தங்கியிருந்த அறையில் சென்று பாா்த்தபோது செல்வராஜ் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளாா். அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி 2018, மாா்ச் 4-ந்தேதி செல்வராஜ் உயிரிழந்தாா். இது தொடா்பாக பல்லடம் காவல் நிலையத்தில் ஜெய் கௌதம் அளித்த புகாா் அடிப்படையில் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

    விசாரணையில் மதுபோதையில் இருந்த மணிகண்டன் செல்வராஜை மண்வெட்டியால் தலையில் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து மணிகண்டனை போலீசாா் கைது செய்தனா்.

    இந்த வழக்கின் விசாரணை திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சாட்சிகள் மற்றும் விசாரணையின் அடிப்படையில் மணிகண்டன் (33) குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொா்ணம் நடராஜன் உத்தரவிட்டாா்.

    Next Story
    ×