search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிட்டுக்குருவி"

    • சிட்டுக்குருவிகள் ஓடு, குடிசை வீடுகளின் விட்டங்களிலும், தாழ்வாரங்களிலும் கூடு கட்டி வசிக்கும்.
    • 13 ஆண்டுகள் ஆயுளை கொண்ட சிட்டுக்குருவிகள் தற்போது 5 ஆண்டுகளுக்குள் தன் வாழ்நாளை முடித்துக் கொள்கிறது

    உலக சிட்டுக் குருவிகள் தினம் 2010 -ம் ஆண்டு முதல் மார்ச் 20 - ந்தேதி அன்று ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.பறவை இனமான சிட்டுக்குருவிகள் தற்போது அழியும் நிலையில் உள்ளது.

    பொது மக்களிடம் இதுகுறித்துசுற்றுச் சூழலியலாளர்கள்,மற்றும் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    "சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேன்'….,

    "சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு"..

    என்ற வரிகளில் தொடங்கும் சினிமா பாடல்கள் அனைவரது காதிலும் ஒலிக்கும் வகையில் சிட்டுக்குருவிகள் குறித்து கவிஞர்கள் பாடல் எழுதி உள்ளனர்.





    சிட்டுக்குருவிகள் வீட்டு வாசல்களில் கட்டித்தொங்க விடப்பட்டிருக்கும் நெற்கதிர்களை கொத்திவிட்டு, ஆள் அரவம் கேட்வுடன் பறந்து செல்லும் ஒரு சிறிய பறவைதான் இந்த சிட்டுக்குருவி. 

    சிட்டுக்குருவிகள் ஓடு, குடிசை வீடுகளின் விட்டங்களிலும், தாழ்வாரங்களிலும் கூடு கட்டி வசிக்கும். அவை எழுப்பும் சிறிய 'கீச்'ஒலி அனைவரையும் சிலிர்க்க செய்யும்.

    தற்போது நாகரீக காலத்தில் வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், குளிர் சாதன வசதி செய்யட்டப்பட்டு உள்ளது. இதனால் வீடுகளில், சிட்டுக்குருவிகள் கூடு கட்டி குடியிருக்க முடியாமல் போய் விட்டது.


     


    இன்று (மார்ச் - 20) உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் 160 கோடி சிட்டுக் குருவி இனங்கள் உள்ளன. இந்தியாவில் லட்சக்கணக்கான சிட்டுக்குருவிகள் உள்ளன.

    "உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. அதனால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வழிவகை செய்திடல் வேண்டும் "ராமலிங்க அடிகளார் கூறி உள்ளார்.

    தினந்தோறும் சிட்டுக்குருவிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக 2010 -ம் ஆண்டு முதல் சிட்டுக் குருவிகள் தினம் மார்ச் 20ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

    பலசரக்குகடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்குப் பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு நெகிழிப் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.




     

    வீட்டுத்தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. மேலும் டிராக்டர்கள் பயன்படுத்தி வயல்களில் உழவுப்பணிகள் நடைபெறுவதாலும் மண்ணில் உள்ள சிறுசிறு உயிரினங்கள் கொல்லப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால் குருவிகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சுகளால் குருவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.சிட்டுக்குருவிகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வியப்பை தருகின்றன.

    மனிதனோடு மனிதனாக பின்னி பிணைந்து குடும்பத்தில் ஒருவராக வாழ்கிற பறவை இனமாக சிட்டுக்குருவிகள் உள்ளன. மேலும் மனித இனத்னோடு அடைக்கலம் ஆவதால், அவற்றை அடைக்கலாங் கூருவி என்றும் கூறுவர்.

    சிட்டுக்குருவி வீடுகளில் கூடுகட்டினால், அக்குடும்பத்தில் தலைமுறைகள் வாழையடி வாழையாக தழைத்தோங்கும் என்கிற அசாத்திய நம்பிக்கை இன்றளவும் கிராம மக்களின் நம்பிக்கையாக அமைந்து இருக்கிறது.சிட்டுக்குருவிகள் வீடுகளில் உள்ள பரண், மாடம், விட்டம் மற்றும் ஓடுகளின் இடுக்குகளில் உள்ள இடைவெளிகளில் கூடு கட்டி வசிக்கும் தன்மை கொண்டது.




     

    மேலும் நகர் புறங்களில் கான்கிரீட் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரிக்கத் தொடங்கியதால் வெளிக்காற்று வீட்டுக்குள் வராத வகையில் குளிர்சாதன வசதியை பயன்படுத்துவதால், சிட்டுக்குருவிகள் கூடுகட்டி குஞ்சு பொரிக்க போதிய வசதிகள் இல்லாமல் போய்விட்டது.

    கடந்த 20ஆண்டுகளில் சிட்டுக்குருவிகள் 60சதவிகிதம் அழிந்துவிட்டது என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவர தகவல் வெளியாகி உள்ளது.2010- ம் ஆண்டு மார்ச் 20- ம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக ஐ.நா. அங்கீகரித்தது.

    13 ஆண்டுகள் ஆயுளை கொண்ட சிட்டுக்குருவிகள் தற்போது 5 ஆண்டுகளுக்குள் தன் வாழ்நாளை முடித்துக் கொள்கிறது. எனவே சிட்டுக்குருவிகளை அழிவுப்பாதையில் இருந்து மீட்டெடுக்க உலக சிட்டுக்குருவி நாளில் நாம் அனைவரும் ஒன்று இணைந்து உறுதியேற்போம்.

    • பெரும்பாலும் கூடுகட்டும் பணியை ஆண் பறவைகள்தான் மேற்கொள்கின்றன.
    • சிட்டுக்குருவிகள், கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து புழுதியில் அரை வட்டவடிவில் பள்ளம் அமைத்து அதில் மண்குளியல் நடத்தும்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காலை நேரத்தில் வீடுகளிலும் சிட்டுக்குருவிகளின் சத்தத்தை கடந்த தலைமுறை வரை கேட்டு இருப்பார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் குறிப்பாக நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் சிட்டுக்குருவிகளை பார்ப்பதே அரிதாகி விட்டது. இந்த சிட்டுக்குருவிகள் தற்போது நகர்ப்புறங்களில் மறைந்தே போய்விட்டன என்றே கூறலாம்.

    ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் குருவி இனங்கள் உள்ளன. இவை எங்கும் காணப்படுபவை. சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன. இவற்றின் கூடுகள் கிண்ண வடிவில் இருக்கும். இவை குளிர் காலத்தில் கூட்டமாக ஒரு புதரில் ஒன்று சேர்ந்து இரவைக் கழிக்கின்றன.

    மனிதன் வாழும் வாழ்விடத்தையே தன் வாழ்விடமாக மாற்றி, மனிதனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து, வாழும் ஒரு பறவை சிட்டுக்குருவி. பறவைகளைப்போல் சிட்டுக்குருவிகளை அடர்ந்த காட்டுப் பகுதியிலோ அல்லது பாலைவனத்திலோ காண முடியாது. அவைகள் மனிதனின் வாழ்விடங்கள், வீடுகள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள வயல்வெளிகளில்தான் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும். கிராமங்களில் உள்ள ஓட்டு வீடுகளின் இடுக்குகளில், வைக்கோல் மற்றும் காய்ந்த புற்களைக்கொண்டு இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு வாழும்.

    பெரும்பாலும் கூடுகட்டும் பணியை ஆண் பறவைகள்தான் மேற்கொள்கின்றன. குளிர்காலங்களில், தெருவோரம் உள்ள மின் விளக்குகளில் கூடுகட்டி இருப்பதைக் கிராமங்களில் காணலாம். ஏனெனில், கடும் குளிரிலும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தங்கள் கூடுகளை மின்விளக்குகளில் கட்டும். இந்தக் குருவிகள் 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு தானியங்களின் விதைகள் மற்றும் புற்கள் ஆகும்.

    முன்பு உணவு சமைக்கும் முன் அரிசியை முறத்தில் வைத்து வீட்டு வாசற்படியின் முன் அமர்ந்து கல் நீக்கி, புடைத்து உணவு சமைக்க உதவுவார், அன்றைய பாட்டி. இன்று முறமும் இல்லை. தானியங்களும் அதிகம் சிந்துவதில்லை. சிட்டுக்குருவிகளுக்கு உணவும் இல்லை. இதனால் சிட்டுக் குருவி இனத்தை அழியாமல் காக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டி வருகிறார்கள். எனவே மார்ச் மாதம் 20-ந் தேதியை உலக சிட்டுக்குருவிகள் தினமாகக் கொண்டாடி அவற்றைக் காக்கப் போராடி வருகின்றனர்.

    சிட்டுக்குருவிகள், கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து புழுதியில் அரை வட்டவடிவில் பள்ளம் அமைத்து அதில் மண்குளியல் நடத்தும். மழைக்காலங்களில் தெருவில் தேங்கும் தண்ணீரில் அல்லது தண்ணீர் கிடைக்கும்போதெல்லாம் அவை கூட்டம் கூட்டமாக நீராடுவது வழக்கம். அதன் பிறகு இறகுகளைக் கோதிக் கொள்வதும், அதை உலர்த்திக் கொள்வதும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், அதன் இறகுகளில் ஏதாவது ஒட்டுண்ணிகள் இருந்தால் அதை வெளியேற்றவும் தன் இறகைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்தான் அவைகள் இவ்வாறு செய்கின்றன. சிதறும் தானியங்கள்தான் சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு.

    தானியங்கள், விதைகள்தான் இவைகளின் முக்கிய உணவாக இருந்தாலும் சிட்டுக்குருவிகளின் குஞ்சுகளுக்கு உணவுக்கு அவைகள் தோட்டத்துச் சிறு பூச்சிகள், புழுக்களையே முழுவதும் நம்பி உள்ளன. முட்டையில் இருந்து வெளிவந்த குஞ்சுகளுக்கு முதல் உணவு இந்தத் தோட்டத்துப் புழுக்களும், பூச்சிகளும்தான். நமது கிராமத்து வீடுகளில் தாய்ப்பறவை அடிக்கடி வெளியில் பறந்துபோய் குஞ்சுகளுக்குப் பூச்சிகளைப் பிடித்து உணவாகக் கொடுத்துக் கொண்டிருக்கும். தற்போது தாவரங்களும், புற்களும் குறைந்ததால் அதை நம்பி வாழும் புழுக்கள், பூச்சிகள் அரிதாகிவிட்டன.

    சிட்டுக்குருவிகள் அனைத்துண்ணிகள் தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். சில வகைக் குருவிகள் பூ மொட்டுகளையும் உண்ணும். விவசாயத்தில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகளின் விளைவாக, நன்மை செய்யும் பூச்சிகளை மட்டும் கொல்லவில்லை. மாறாக, சிட்டுக்குருவிகளின் சந்ததிகளையும் சேர்த்துத்தான் அழித்துவிட்டோம்.

    செல்போன் கோபுரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதன் விளைவு அதில் இருந்து வெளியாகும் மின்காந்த அதிர்வலைகளால் பறவைகள் மற்றும் தேனீக்களின் எண்ணிக்கை பெருமளவு குறையத் தொடங்கி உள்ளது என அறியப்படுகிறது.

    சிட்டுக்குருவிகள் உணவுச் சங்கிலியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சிட்டுக்குருவிகள் போன்ற பறவைகள் உதவியுடன் எந்தச் செலவுமில்லாமல் இயற்கையான முறையில் பூச்சிகள் பெருகி பயிர்களுக்குச் சேதம் ஏற்படுத்தாத வகையில், பூச்சிகளின் பெருக்கத்தை இயற்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சிட்டுக் குருவிகளின் அழிவு மனிதகுலத்தின் அழிவுக்கு அடித்தளமாகும். எனவே மனித குலத்தை பாதுகாக்க சிட்டுக்குருவிகளை அழிவில் இருந்து காப்போம்....

    • சிட்டுக்குருவியானது தன் இனப்பெருக்கத்துக்கான வாழ்வியல் சூழலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.
    • சிறந்த படம் வரைந்த மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் உதவிபெறும் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர் வசந்தா தலைமை தாங்கி மாணவர்களுக்கு சிட்டுக்குருவியின் முக்கியத்துவம் குறித்து பேசுகையில்:-

    மனிதனோடு மனிதனாய் குடும்பத்தில் ஒருவராக வாழ்கிற பறவை இனம்தான் இந்த சிட்டுக்குருவி.சிட்டுக்குருவி வீடுகளில் கூடுகட்டினால், அக்குடும்பத்தில் தலைமுறைகள் வாழையடி வாழையாக தழைத்தோங்கும் என்கிற நம்பிக்கை இன்றும் கிராமமக்களின் மனதில் உள்ளன.

    அதனால் தான், வீடுகளில் சிட்டுக்குருவி கூடு கட்டினால் அதை கலைக்க மாட்டார்கள்.அதனால்,இன்றைய கால ங்களில் சிட்டுக்குருவியானது தன் இனப்பெருக்கத்துக்கான வாழ்வியல் சூழலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது என்றார்.

    மேலும், மாணவர்கள் சிட்டுக்குருவி வளர்க்க கூண்டுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். மாணவர்கள் சிட்டுக்குருவியின் படத்தை வரைந்து வண்ணம் தீட்டினார். சிறந்த படம் வரைந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    விழாவில் பள்ளி செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் வசந்தா, சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, திவ்யா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • சிட்டுக்குருவிகளுக்காக கூண்டு அமைக்கும் முறையயை கடைப்பிடித்து வருகிறோம்.
    • பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு மண் பாத்திரங்களை கட்டணம் இல்லாமல் வழங்க இருக்கிறோம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஆறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளை ஜி.ராஜ சரவணன் இந்த சின்னஞ்சிறு குருவியை மீட்டெடுப்போம் எனக் கூறி இலவசமாக சிட்டுக்குருவிக் கூண்டை அனைவருக்கும் வழங்கி வருகிறார்.

    ஆண்டு தோறும் மார்ச் 20 ஆம் தேதி சிட்டுக்குருவி தினமாக உலகம் எங்கிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த இனத்திற்குப் பிறகு இந்த குருவிகள் ஆனது தனது இனத்தை பெருக்கும் கால சூழலுக்கு வருகிறது.

    அதனால் இந்த தேதியை தொடங்கி நம் சிட்டுக்குருவி தினமாக நாம் கடைபிடித்து வருகிறோம்.

    இந்த சின்னஞ்சிறு சிட்டுக்குருவியை மீட்டெடுப்பதற்கான ஒரு முறையை கண்டுபிடித்து அந்த முறையில் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த முறையே இந்த சின்னஞ்சிறு குருவிக்கு கூடு அமைத்து கொடுக்கும் முறையாகும்.

    இந்த முறையை பயன்படுத்தி கடந்த ஓராண்டாக ஸ்ரீ ஆறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளை மூலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகளுக்கான கூண்டு அமைத்து அதில் அந்த குருவி இனங்கள் குடியேறி தனது இனத்தை பெருக்கிக் கொண்டது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

    நாகப்பட்டினத்தில் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீ ஆறுவடை தர்ம சிந்தனை அறக்கட்டளை இதன் இயற்கை சார்ந்த விஷயங்களுக்காக ஸ்ரீ அறுபடை பசுமைச் சிறகுகள் என்ற அமைப்பினை செயல்படுத்தி வருகிறோம்.

    இந்த அமைப்பின் மூலமாக சிட்டுக்குருவிகளுக்காக கூண்டு அமைக்கும் முறையயை கடைப்பிடித்து வருகிறோம்.

    இதில் 60% க்கு மேலான கூண்டுகளில் இந்த குருவிகள் குடியேறிய தன் இனத்தை பெருக்கிக் கொண்டு உள்ளது.

    தன்னார்வலர்கள் எங்களை அணுகி கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக இந்த சின்னஞ்சிறு குருவிக்கான கூட்டினை பெற்று செல்லலாம். 10 ஆயிரம் கூண்டுகள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எங்கள் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

    வரும் கோடை காலத்தை மனதில் கொண்டு சிட்டுக்குருவிகளுக்கும் பறவைகளுக்கும் தண்ணீர் வைப்பதற்கு என மண் பாத்திரங்களை கட்டணம் இல்லாமல் வழங்க இருக்கிறோம்.

    இந்த பாத்திரம் வழங்குவதில் மூன்று விதமான உள்நோக்கம் எங்களுடன் உள்ளது ஒன்று பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்தல். குருவி இனங்கள் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் ஏதுவாக இந்த பாத்திரங்களை அமைத்தல்.

    அழிந்து வரும் ஒரு தொழிலான மண்பானை செய்யும் தொழிலே ஊக்கப்படுத்துதல் என்ற மூன்று விதமான கருத்துக்களை மனதில் கொண்டு இந்த திட்டத்தினை தொடங்கி இருக்கிறோம்.

    இயற்கை ஆர்வலர்கள் தங்களுக்கு சிட்டுக்குருவிக்கான கூண்டு, பறவைகளுக்கான நீர் வைக்கும் பாத்திரம் தேவையெனில் எங்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களது முகவரியினை பதிவு செய்து இந்த இரண்டு பொருட்களையும் கட்டணம் இல்லாமல் இலவசமாக பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கிறோம்.

    இந்த சின்னஞ்சிறு குருவினை மீட்டெடுப்போம்.

    • 2008ல் தேசிய விருது பெற்ற கன்னட திரைப்படம் குப்பாச்சிகலு இம்மாதம் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான படங்கள் மாதந்தோறும் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர்:

    பள்ளிகளில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் தேசிய, சர்வதேச விருது பெற்ற, திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இப்படங்கள் பார்ப்பதன் வாயிலாக மாணவர்களின் கற்பனைத்திறனுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.படம் முடிந்ததும், மாணவர்களின் பின்னோட்டம் பெறப்படும். கதைக்களம், கதாநாயகர்கள், கதைக்கரு, தொழில்நுட்ப யுக்திகள் குறித்து ஆசிரியர்களுடன் மாணவர்கள் விவாதிக்க வேண்டும்.

    2008ல் தேசிய விருது பெற்ற கன்னட திரைப்படம் குப்பாச்சிகலு இம்மாதம் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.பெரும்பாலான பள்ளிகளில் இத்திரைப்படம் குழந்தைகள் தினம் முதல் திரையிடப்பட்டு வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பகுதி வாரியாக பிரித்து இந்த வார இறுதி வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.காணாமல் போன சிட்டுக்குருவியை, இரு குழந்தைகள் தேடும் போது அவர்களின் பயணத்தில் சந்தித்த மனிதர்கள், சம்பவங்கள், அனுபவங்கள் குறித்து இப்படம் விளக்குவதாக உள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான படங்கள் மாதந்தோறும் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • உலக உணவு தினத்தினை முன்னிட்டு சிட்டுக்குருவிகள் அடைகாக்கும் பெட்டிகளை மக்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.
    • வ. உ .சி. விலங்கியல் பூங்கா முன்னாள் இயக்குனர் பறவை விலங்கியல் தொடர்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்

    பல்லடம் : 

    பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் அமைந்துள்ள மகிழ்வனம் தாவரவியல் பூங்காவில் உலக உணவு தினத்தினை முன்னிட்டு சிட்டுக்குருவிகள் அடைகாக்கும் பெட்டிகளை மக்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கா.வீ. பழனிச்சாமி தலைமை வகித்து இலவசமாக சிட்டுக்குருவிகள் அடைகாக்கும் பெட்டிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்..மகிழ் வனம் செயலாளர் சோமு என்ற பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். விழாவில் தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் மாரப்பன், தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியம், தனியார் நிறுவன தலைவர் செல்வராஜ், கலங்கல் வனம் ஒருங்கிணைப்பாளர் பாபு, தாவரவியல் நிபுணர் மாணிக்கம், பூங்கா பொருளாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதில் வ. உ .சி. விலங்கியல் பூங்கா முன்னாள் இயக்குனர் மருத்துவர் கிரிஷ் அசோகன் தனது பறவை விலங்கியல் தொடர்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மகிழ் வனம் பொருளாளர் பூபதி நன்றி கூறினார்.

    கூண்டுகள் பொருத்தும் நிகழ்ச்சியை நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி தொடங்கி வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சிக்கு சொந்தமான நாகூர் நுண்ணுயிர் உர கிடங்கில் சிட்டுக்குருவி களுக்கான 25 கூண்டுகள் பொருத்தப்பட்டன. இந்த கூண்டுகள் பொருத்தும் நிகழ்ச்சியை நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாகூர் நகர்மன்ற உறுப்பினர் தியாகு செய்திருந்தார்.

    இந்நிகழ்வில் தேசிய பசுமைப் படையின் மாவட்ட தலைவர் முத்தமிழ் ஆனந்தன், நாகூர் சித்திக் , ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் அமைப்பைச் சார்ந்த ராஜசரவணன், பண்டரிநாதன், அழகேசன், சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×