search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராயம் பறிமுதல்"

    • கம்பம் மெட்டு ராஜகுமாரி பகுதியில் ரகசியமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக இடுக்கி கலால்துறை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • தப்பி ஓடிய சஜீவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையான கம்பம் அருகே கம்பம் மெட்டு ராஜகுமாரி பகுதியில் ரகசியமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக இடுக்கி கலால்துறை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது அறிவுறுத்தலின் பேரில் கலால் சிறப்பு படை உதவி கலால் ஆய்வாளர் தாமஸ்ஜான், தலைமை நிர்வாக அதிகாரி மரியாஆல்பின் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதியில் தொடர்ந்து ரகசிய விசாரணை நடத்தினர். அதில் ராஜாக்காடு, கச்சிரபாலம், சஜீவன் என்பவர் சாராயம் காய்ச்சி அப்பகுதியில் உள்ள ரிசார்ட்ஸ் மற்றும் சிறு வியாபாரிகள் மூலம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரது தோட்டத்து வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பண்ணை வீட்டு கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த 400 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 17 லிட்டர் சாராயம், இதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் கலால்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய சஜீவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • 780 லிட்டர் தரையில் கொட்டி அழித்தனர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகிறார்கள்

    அணைக்கட்டு:

    வேலூர் மதுவிலக்கு. அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அல்லேரி மற்றும் அதனையொட்டிய மலைப்பகுதியில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கூனம்பட்டி மலைப்பகுதியில் ஓடையோரம் 26 லாரி டியூப்பில் தலா 30 லிட்டர் வீதம் 780 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடி க்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து தரையில் கொட்டி அழித்தனர்.

    போலீசார் விசாரணையில் கூனம்பட்டி மலைப்பகுதியை சேர்ந்தவர்கள் சாராயத்தை லாரி டியூப்பில் பதுக்கி வைத்தது தெரிய வந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

    • கடலூர் மாவட்டத்திற்கு மதுபானங்கள் கடத்த ப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • 188 லிட்டர் சாராயம், 1465 மது பாட்டில்களும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. இதனையொட்டி புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு மதுபானங்கள் கடத்த ப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் மது கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க புதுவை மாநில எல்லையோரங்களில் உள்ள 8 சோதனை சாவடிகளில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும், மாவட்டம் முழுவதும் மது விலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். இதில் போகிப் பண்டிகை முதல் காணும் பொங்கல் வரை அதாவது 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை மது கடத்தல், மது விற்பனை செயலில் ஈடுபட்ட 127 நபர்கள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 188 லிட்டர் சாராயம், 1465 மது பாட்டில்களும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. ஆற்று திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு புதுவை மாநிலத்திலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு மதுக்கடத்தலை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • குமுளி பத்துமுறி என்ற பகுதியில் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சப்படுவதாக இன்ஸ்பெக்டர் ராஜேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அந்தோணியை கைது செய்து ஊறலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளியில் பண்டிகை நாட்களில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க இருமாநில போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இடுக்கி கலால் துணை ஆணையர் ஆபரகாம் அறிவுறுத்தலின்பேரில் எல்லைப்பகுதியில் ரோந்து பணி நடைபெற்றது.

    அப்போது குமுளி பத்துமுறி என்ற பகுதியில் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சப்படுவதாக இன்ஸ்பெக்டர் ராஜேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர். அந்தோணி(46) என்பவர் வீட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர். மேலும் அந்தோணியை கைது செய்து ஊறலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டது.

    • கல்லானத்தம் கிராமத்தில் சாராயம் விற்று வரு வதாக சின்னசேலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பதிவு இல்லா இருசக்கர வாகனமும் 60 லிட்டர் பிடிக்கக்கூடிய 2 லாரி டியூப் சாராயத்தை கைப்பற்றியது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கல்லானத்தம் கிராமத்தில் சாராயம் விற்று வரு வதாக சின்னசேலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீ ஸ்சப்-இன்ஸ்பெக்டர் மணி கண்டன் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    கல்லாநத்தம் கிராம த்தில் நாச்சியப்பன் கோவில் பின்புறம் உள்ள ஓடையில் சாராயம் விற்பனை செய்த வந்த ராமச்சந்திரன் மற்றும் அருளை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து பதிவு இல்லா இருசக்கர வாகனமும் 60 லிட்டர் பிடிக்கக்கூடிய 2 லாரி டியூப் சாராயத்தை கைப்பற்றி இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
    • அவர்களிடம் இருந்து மொத்தம் 500 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக சாராயம் விற்றதாக மூலக்காடு கிராமத்தை சேர்ந்த குமார் (வயது49), ஆனைமடுவு ஆனந்தன் (28), புளியங்கோட்டைபிரபு (31), ஏழுமலை (34) மற்றும் கொடியனூர் வெள்ளையன் (40) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 500 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • 5 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதனால் மதுவிற்பனையை தடுக்க திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் மங்கையர்கரசி, சப் - இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தாமலேரிமுத்தூர் பகுதியில் மது விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது . தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது ஊரான் வட்டம் பகுதியை சேர்ந்த குமார் ( வயது 51 ) , இவரது மகன் ராகுல் ( 23 ) ஆகியோர் வீட்டின் பின்புறம் மது மற்றும் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

    அவர் களை போலீசார் கைது செய்து 90 மது பாட்டில்கள், 5 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல அதே பகுதியை சேர்ந்த கதிரேசன் (50) என்பவ ரும் தனது வீட்டின் பின்புறம் மது, சாராயம் விற்றுக்கொண் டிருந்தார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த 370 லிட்டர் சாராயம் மற்றும் சாராய ஊறல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
    • ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு முத்துக்குமாரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அங்கன்விடுதியில் சாராய ஊரல்கள் இருப்பதாக ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்துசென்ற மதுவிலக்கு காவல் ஆய்வாளர் குணமதி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் முகா மிட்டனர்.

    அப்போது கந்தர்வகோட்டை தாலுகா மோகனூர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 37), நீண்டகாலமாக இத்தொழிலை செய்து வருவதும், விற்பனை செய்ததும் தெரிந்தது.

    அதன் பேரில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயம் 120 லிட்டர் மற்றும் ஊரல் 250 லிட்டர் என மொத்தம் 370 லிட்டர் சாராயத்தை காட்டுப் பகுதியில் வைத்து பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அதனை அதே பகுதியில் கொட்டி அழித்தனர். பின்னர் முத்துக்குமாரை கைது செய்து ஆலங்குடி மதுவிலக்கு காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் சாராயம் எரிப்பதற்கு உண்டான காலி குடங்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுளையும் பறிமுதல் செய்தனர்.

    இதுெதாடர்பாக மதுவிலக்கு காவல் ஆய்வாளர் குணமதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு முத்துக்குமாரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    நாகை மாவட்டத்தில் 2,225 லிட்டர் சாராயம்- மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 22 பேரை கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மது மற்றும் சாராயம் விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். இதன்பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பல இடங்களில் சாராயம் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், அவர்களிடம் இருந்து 2,225 லிட்டர் புதுச்சேரி சாராயம், 1 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நாகை மாவட்டத்தில் தொடர் நடவடிக்கையின் பேரில் சாராயம் மற்றும் மது விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்தார். 
    ×