என் மலர்
நீங்கள் தேடியது "2225 liter booze"
நாகை மாவட்டத்தில் 2,225 லிட்டர் சாராயம்- மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 22 பேரை கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் மது மற்றும் சாராயம் விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். இதன்பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பல இடங்களில் சாராயம் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 2,225 லிட்டர் புதுச்சேரி சாராயம், 1 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நாகை மாவட்டத்தில் தொடர் நடவடிக்கையின் பேரில் சாராயம் மற்றும் மது விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்தார்.
நாகை மாவட்டத்தில் மது மற்றும் சாராயம் விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். இதன்பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பல இடங்களில் சாராயம் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 2,225 லிட்டர் புதுச்சேரி சாராயம், 1 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நாகை மாவட்டத்தில் தொடர் நடவடிக்கையின் பேரில் சாராயம் மற்றும் மது விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்தார்.






