search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது விற்ற தந்தை - மகன் கைது
    X

    மது விற்ற தந்தை - மகன் கைது

    • 5 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதனால் மதுவிற்பனையை தடுக்க திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் மங்கையர்கரசி, சப் - இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தாமலேரிமுத்தூர் பகுதியில் மது விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது . தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது ஊரான் வட்டம் பகுதியை சேர்ந்த குமார் ( வயது 51 ) , இவரது மகன் ராகுல் ( 23 ) ஆகியோர் வீட்டின் பின்புறம் மது மற்றும் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

    அவர் களை போலீசார் கைது செய்து 90 மது பாட்டில்கள், 5 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல அதே பகுதியை சேர்ந்த கதிரேசன் (50) என்பவ ரும் தனது வீட்டின் பின்புறம் மது, சாராயம் விற்றுக்கொண் டிருந்தார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    Next Story
    ×