search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு"

    • பஸ்சில் சீட் பிடிப்பது சம்பந்தமாக இளம்பெண் ஒருவருக்கும் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • இளம்பெண்ணை பஸ்சிலிருந்து தரதரவென கீழே இழுத்து தள்ளினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்திபேட்டை அருகே உள்ள முக்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அணில்குமார். அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று தனது மனைவியுடன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் பஸ்சில் ஏறும்போது பயணிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பஸ்சில் சீட் பிடிப்பது சம்பந்தமாக இளம்பெண் ஒருவருக்கும் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் பஸ்சை நிறுத்தினார். இளம்பெண்ணை பஸ்சிலிருந்து தரதரவென கீழே இழுத்து தள்ளினார்.

    இதனைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முக்தியால்பேட்டை டி.எஸ்.பி. அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சப்-இன்ஸ்பெக்டர் இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அனில் குமார் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமாரை சஸ்பெண்டு செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாம்பரம் ரெயில்வே சுரங்கப் பாதையில் சென்ற இளம்பெண் ஒருவரை பின்தொடர்ந்து சென்று பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
    • இளம்பெண் தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

    தாம்பரம்:

    தாம்பரம் ரெயில்வே பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சீனிவாஸ் நாயக் (32).

    இவர் நேற்று இரவு தாம்பரம் ரெயில்வே சுரங்கப் பாதையில் சென்ற இளம்பெண் ஒருவரை பின்தொடர்ந்து சென்று பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    இதனை கண்டித்த அவ்வழியாக வந்த வாலிபர்களையும் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் நாயக் தாக்கியதாக தெரிகிறது. இதில் ஒரு வாலிபரின் கை விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து அந்த இளம்பெண் தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த இளம்பெண்ணின் கணவர் மற்றும் நண்பர்கள் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் நாயக்கை மடக்கி பிடித்தனர்.

    அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை தாம்பரம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சப்-இன்பெக்டர் சீனிவாஸ் நாயக்கை சஸ்பெண்டு செய்து ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் ராஜையா உத்தரவிட்டார்.

    ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் நாயக் இதுபோல் பல பெண்களிடம் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    • புகார் கொடுக்க வந்த பெண்ணிடம், தாமரைச்செல்வன் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
    • அதிர்ச்சி அடைந்த பெண், சேலம் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் தாமரைச்செல்வன் மீது புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தாமரைச்செல்வன். இவரிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் புகார் கொடுக்க சென்றார்.

    அந்த பெண்ணிடம், தாமரைச்செல்வன் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், சேலம் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் தாமரைச்செல்வன் மீது புகார் கொடுத்தார்.

    இதை அடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதன்பேரில் விசாரணை நடத்தி நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதை அடுத்து தாமரைச்செல்வனை மாநகர போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் சேலம் மாநகர போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அமுதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.
    • ஜெயகுமாருக்கும், அமுதாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கம்பம் போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்த கம்பம் மெட்டு காலனி பகுதியை சேர்ந்த அமுதாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் 2 பேரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். அமுதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ளார். ஜெயகுமாருக்கும், அமுதாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதில் அவர் அமுதாவை தாக்கியதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    பின்னர் அமுதா வழக்கை திரும்ப பெற்றதால் ஜெயக்குமார் மீண்டும் பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் அமுதாவுடன் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் அமுதாவை அடித்து, உதைத்து கழுத்தை நெரித்து கொன்றார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.

    • தவறு செய்யும் போலீசார் மீது சஸ்பெண்டு போன்ற நடவடிக்கை அவசியமானது.
    • மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் முண்டக்காயம் பகுதியைச் சேர்ந்தவர் ஷிகாப் (வயது 38).

    இவர் இடுக்கி மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு பணி முடித்த அவர், அதிகாலை 4 மணிக்கு பணியை முடித்து விட்டு, வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

    பரதோடு பகுதியில் அவர் சென்றபோது, மாம்பழம் வாசனை வந்துள்ளது. இதனால் வாகனத்தை அங்கு நிறுத்திய ஷிகாப், கீழே இறங்கி பார்த்தார். அப்போது அங்கு ஒரு கடை வாசலில் கூடை கூடையாக மாம்பழங்கள் வைக்கப்பட்டு இருந்ததை கண்டார்.

    ஆனால் அதன் அருகில் யாரும் இல்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஷிகாப், மெதுவாக கூடைக்குள் கையை விட்டு மாம்பழங்களை எடுத்துள்ளார்.

    தான் செய்வது திருட்டு என தெரிந்திருந்தும், மாம்பழ ஆசையில் அவர் இந்த செயலில் ஈடுபட்டார். இப்படியாக சுமார் 10 கிலோ மாம்பழங்களை திருடிய அவர், தனது வாகனத்தில் பதுக்கிக் கொண்டு அங்கிருந்து நைசாக நகர்ந்து விட்டார்.

    இந்த நிலையில் காலையில் கடைக்கு வந்த வியாபாரி, கூடையில் இருந்த மாம்பழங்கள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் போலீசிலும் புகார் செய்தார். போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, சப்-இன்ஸ்பெக்டர் ஷிகாப் மாம்பழங்களை திருடுவது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை பணியிடை நீக்கம் செய்து இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையில் மாம்பழம் திருட்டு காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது.

    இந்த சூழலில் மாம்பழம் தொடர்பாக கொடுத்த புகாரை, சம்பந்தப்பட்ட வியாபாரி வாபஸ் பெற்றார். இதனைத் தொடர்ந்து ஷிகாப் பணியில் சேர்ந்தார். இனி பிரச்சினை இல்லை என அவர் நிம்மதி அடைந்த நேரத்தில், கேரள அரசு அதிரடியாக ஷிகாப்பை சஸ்பெண்டு செய்து நேற்று உத்தரவிட்டது.

    அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். தவறு செய்யும் போலீசார் மீது இது போன்ற நடவடிக்கை அவசியமானது. இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் என்பவர் சேரில் அமர்ந்தபடியே செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்.
    • நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில் தற்போது பணியாற்றி வந்த நிலையில் மீண்டும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் கடந்த 28-ந் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொம்மை குட்டை மேட்டில் நடந்தது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

    இந்த விழாவில் கலெக்டர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    விழா நிறைவு பெற்றதும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் என்பவர் சேரில் அமர்ந்தபடியே செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதனை பார்த்த சக போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலை செல்வன் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    மேலும் சிவப்பிரகாசத்தை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின்னர் தேசிய கீதத்திற்கு அவமரியாதை செய்ததாக கூறி சிவப்பிரகாசத்தை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டார்.

    சஸ்பெண்டான சிவப்பிரகாசம் ஏற்கனவே வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில் தற்போது பணியாற்றி வந்த நிலையில் மீண்டும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×