search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பஸ்சில் இருந்து இளம்பெண்ணை தள்ளிவிட்ட சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
    X

    பஸ்சில் இருந்து இளம்பெண்ணை தள்ளிவிட்ட சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

    • பஸ்சில் சீட் பிடிப்பது சம்பந்தமாக இளம்பெண் ஒருவருக்கும் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • இளம்பெண்ணை பஸ்சிலிருந்து தரதரவென கீழே இழுத்து தள்ளினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்திபேட்டை அருகே உள்ள முக்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அணில்குமார். அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று தனது மனைவியுடன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் பஸ்சில் ஏறும்போது பயணிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பஸ்சில் சீட் பிடிப்பது சம்பந்தமாக இளம்பெண் ஒருவருக்கும் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் பஸ்சை நிறுத்தினார். இளம்பெண்ணை பஸ்சிலிருந்து தரதரவென கீழே இழுத்து தள்ளினார்.

    இதனைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முக்தியால்பேட்டை டி.எஸ்.பி. அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சப்-இன்ஸ்பெக்டர் இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அனில் குமார் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமாரை சஸ்பெண்டு செய்தனர்.

    Next Story
    ×