search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் ஆபாச பேச்சு: சேலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
    X

    புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் ஆபாச பேச்சு: சேலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

    • புகார் கொடுக்க வந்த பெண்ணிடம், தாமரைச்செல்வன் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
    • அதிர்ச்சி அடைந்த பெண், சேலம் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் தாமரைச்செல்வன் மீது புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தாமரைச்செல்வன். இவரிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் புகார் கொடுக்க சென்றார்.

    அந்த பெண்ணிடம், தாமரைச்செல்வன் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், சேலம் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் தாமரைச்செல்வன் மீது புகார் கொடுத்தார்.

    இதை அடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதன்பேரில் விசாரணை நடத்தி நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதை அடுத்து தாமரைச்செல்வனை மாநகர போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் சேலம் மாநகர போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×