search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திரகிரகணம்"

    • சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
    • இப்படிப்பட்ட கிரகணம் உல கில் உள்ள சில நாடுகளில் தெரியும் மற்ற நாடுகளில் தெரியாது.

    சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

    இப்படிப்பட்ட கிரகணம் உல கில் உள்ள சில நாடுகளில் தெரியும் மற்ற நாடுகளில் தெரியாது.

    சந்திர கிரக ணம் துவங்கப் போகும் எட்டு மணி நேரத்திற்கு முன்பாகவே உணவு உண்ண வேண்டும்.

    சந்திரன் ஔஷதிகளுக்கு அதிபதியானதால் கிரகண சமயத்தில் நமது வயிற்றில் உணவு இருக்கக் கூடாது.

    அப்படி இருந்தால் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    சந்திர கிரகணம் விட ஆரம்பித்தவுடன் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்குப் பிரம்யஞ்ஜம் கிடையாது.

    கிரகணம் பிடிக்கும் போதும், விட்ட பிறகும் குளிக்க வேண்டும். கிரகண காலத்தில் எல்லா நீர்நிலைகளும் கங்கைக்குச் சமம்.

    இந்தக் காலத்தில் நாம் உடுத்தியிருந்த வஸ்திரங்களை நனைத்து மடியாக வேறு உடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும்.

    முடிந்தவரை எல்லா உணவு பண்டங்களிலும், குடிக்கும் நீரிலும் தர்ப்பை ஒன்றைப் போட்டு வைக்கலாம்.

    சந்திர கிரகணக் காலத்திலேயே சந்திரன் அஸ்தமன மானால் அதை 'கிரஸ்தாஸ் தமனம்' என்பார்கள்.

    அன்று பகல் முழுவதும் விரதமிருந்து மாலை சந்தி ரோதயம் ஆன பிறகு நிலவைப் பார்த்து விட்டு சாப்பிட வேண்டும்.

    கிரகணம் ஆரம்பித்து முடியும் வரை ஜபம் செய்யலாம், இறைவன் நாமாவைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

    இப்படிச் செய்தால் நாம் மிகுந்த பலனை அடையலாம். ஆனால் இந்தச் சமயத்தில் தூங்கக் கூடாது.

    கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது.

    கிரகண காலத்தில் என்ன நட்சத்திரம் உள்ளதோ அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஓர் ஓலையில் கிரகண மந்திரங்களை எழுதி கிரகணம் ஆரம்பிக்கும் சமயத்தில் நெற்றியில் பட்டம் கட்டிக் கொள்ள வேண்டும்.

    விட்டவுடன் குளித்து விட்டு சுலோகம் எழுதியிருந்த ஓலையோடு மட்டைத் தேங்காய் வெற்றிலைப் பாக்கு இவற்றோடு தட்சணையும் வைத்துத் தானம் செய்ய வேண்டும்.

    கிரகணத்தன்று சிரார்த்தம் (தெவசம்) வந்தால் செய்யக் கூடாது.

    அதை மறுநாள் செய்யலாம் அல்லது அடுத்த மாதம் அதே திதியில் செய்யலாம்.

    • பகவதி அம்மன் கோவிலில் இன்று பரிகார பூஜை
    • விக்ரக சிலையை சுற்றி தர்ப்பை புல்லால் கட்டப்பட்டு துணியால் மூடி வைக்கப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலுக்கு சாமி தரிச னம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு சந்திர கிரகணம் நிகழ்ந்தது.

    இந்த நேரத்தில் கோவில்களில் மூலஸ்தான கருவறையில் கிரக ணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி சந்திர கிரகணத்தை யொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று இரவு 1 மணி நேரத்துக்கு முன்னதாக இரவு 7.30 மணிக்கே நடை அடைக்கப்பட்டது.

    அதன்பிறகு கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனு மதிக்கப்படவில்லை. அதன் பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அம்மனை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சந்திர கிரகண நேரத்தில் கிரகணத்தி னுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையை சுற்றி தர்ப்பை புல்லால் கட்டப்பட்டு துணியால் மூடி வைக்கப்பட்டு இருந்தது.

    சந்திர கிரகணத்தினால் பகவதி அம்மன் கோவில் நடை 9 மணி நேரம் அடைக்கப்பட்டு இருந்தது. சந்திர கிரகணம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டு அம்மனுக்கு பரிகாரபூஜைகள் மற்றும் அபிஷேகம் நடத்தப் பட்டது. அதன்பிறகு பகவதி அம்மனுக்கு வழக்கம்போல் உள்ள பூஜைகள் தொடர்ந்து நடத்தப் பட்டது. கோவிலின் வடக்கு பக்கம் உள்ள பிரதான நுழைவு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிச னத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு வந்தனர்.

    இதேபோல் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகா னந்தா கேந்திரா வளாகத்தில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி தேவஸ்தான கோவிலில் சந்திர கிரகணத்தை யொட்டி மாலை 6 மணி முதல் நடை அடைக்கப்பட்டது. இந்த கோவிலில் 2 மணி நேரத்திற்கு முன்னதாக நடை அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நாளைஅதிகாலை பரிகார பூஜைகள் நடத்திய பிறகு திறக்கப்படும்
    • இன்று சந்திரகிரகணம் நடப்பதையொட்டி நடை அடைப்பு

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தின மும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப் பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று இரவு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த சந்திரகிரகண நேரத்தில் கோவில்களில் மூலஸ்தானகருவறையில் கிரகணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருப்ப தற்காக கோவில் நடை அடைக்கப்படும். அதன்படி சூரிய கிரக ணத்தையொட்டி கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று இரவு 1 மணி நேரத்துக்கு முன்னதாக இரவு 7.30 மணிக்கே நடை அடைக்கப்படுகிறது. அதன் பிறகு கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டா ர்கள். அதன்பி ன்னர் நாளை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    சந்திர கிரகண நேரத்தில் கிரகணத்தினுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையை சுற்றி தர்ப்பை புல்லால் கட்டப் பட்டு துணியால் மூடி வைக்கப்படுகிறது.

    சந்திர கிரகணம் முடிந்த பிறகு கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பகவதி அம்மன் விக்ரக சிலைக்கு அபிஷேகம் நடத்தி கோவில் நடை திறக்கப்படுகிறது.

    அதன் பிறகு பக்தர்கள் தரி சனத்தி ற்கு அனுமதிக்கப்ப டுவார்கள். இந்த தகவலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • இரவு 7.45 மணிக்கு பரிகார பூஜைகள் நடத்தி மீண்டும் திறக்கப்படுகிறது
    • இன்று மாலை 5.27 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்ம னை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும். இந்த நிலையில் இன்று மாலை 5.27 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது.

    இந்த சந்திரகிரகண நேரத்தில் கோவில்களில் மூலஸ்தானகருவறையில் கிரகணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருப்ப தற்காக கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று மாலை 4 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது.

    மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுவதற்கு பதிலாக 3¾ மணி நேரம் தாமதமாக இரவு 7.45 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சந்திர கிரகண நேரத்தில் கிரகணத்தினுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையைசுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணி யால் மூடி வைக்கப்படுகிறது.

    சந்திர கிரகணம் முடிந்த பிறகு கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பகவதி அம்மன் விக்ரக சிலைக்கு அபிஷேகம் நடத்தி கோவில் நடை திறக்க ப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    ×