search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்ருகன்சின்கா"

    பா.ஜனதாவில் இருந்து விலகியபோது அத்வானி கண்ணீர் மல்க எனக்கு விடை கொடுத்தார் என்று சத்ருகன்சின்கா கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    சத்ருகன் சின்கா சமீபத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார்.

    காங்கிரஸ் சார்பில் பாட்னா சாகிப் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அவர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதாவில் நான் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளேன். வாஜ்பாயின் பேச்சைக்கேட்டு மனதை பறிகொடுத்து பா.ஜனதாவில் சேர்ந்தேன். அப்போது கட்சியில் ஜனநாயகம் இருந்தது.

    இப்போது தனிநபர் ஆதிக்கம் வந்துவிட்டது. எனவேதான் பா.ஜனதாவில் இருந்து விலக முடிவு செய்தேன். இதற்காக அத்வானியை சந்தித்து ஆசி பெற்றேன்.



    அப்போது அவர் எனக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தார்.

    பா.ஜனதாவில் இருந்து விலக வேண்டாம் என்று அவர் என்னை தடுக்கவில்லை. அதற்கு பதில் அவர் எனது அன்பு என்றென்றும் உண்டு என்று ஆசீர்வதித்தார்.

    இப்போது நான் சரியான திசைக்கு வந்துள்ளேன். அந்த திசை நல்ல திசையாகவும் உள்ளது.

    அத்வானியை அவர்கள் மிகவும் அவமரியாதை செய்கிறார்கள். அதை தட்டிக்கேட்டதால் என்னை பணிய வைக்க முயற்சி செய்தனர். ஆனால் நான் பணியவில்லை.

    எனவே கடந்த 2 ஆண்டுகளாக எனது தொகுதிக்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை. மோடி மிதமிஞ்சிய நம்பிக்கையில் இருக்கிறார்.

    பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதால் மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்கள் என்று நம்புகிறார். 23-ந்தேதி அவருக்கு உண்மை தெரிந்து விடும்.

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எனது நண்பர்களில் ஒருவர் ஆவார். அவர் இரும்புப் பெண்மணி. அவர் சரியான முடிவு எடுப்பார் என நம்புகிறேன்.

    இவ்வாறு சத்ருகன் சின்கா கூறினார்.
    சத்ருகன்சின்கா அரசியலை விட்டு விலகுவது நல்லது என்று பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி கூறி உள்ளார். #LSPolls #ShatrughanSinha
    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது சத்ருகன்சின்கா எம்.பி.யாக தேர்வானார்.

    ஆனால் அதன் பிறகு அவருக்கும், பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக பிரதமர் மோடியை அவர் மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சத்ருகன்சின்கா பெயர் மீண்டும் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பாட்னா தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து நடிகர் சத்ருகன்சின்கா காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சத்ருகன்சின்காவை பீகார் மாநில காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எதிர்ப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் சத்ருகன்சின்கா தேர்தலில் போட்டியிடுவது கேள்விக்குறியாக உள்ளது.

    இந்த நிலையில் சத்ருகன்சின்காவை கிண்டல் செய்து பீகார் துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    நடிகர் சத்ருகன் சின்கா அரசியலில் உச்சத்துக்கு வந்ததே பா.ஜனதாவை வைத்துதான். ஆனால் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது போல பா.ஜனதாவை மிக கடுமையாக சத்ருகன் சின்கா சேதப்படுத்தி விட்டார். கட்சிக்கு அவர் அப்படி துரோகம் செய்திருக்கக்கூடாது.

    மக்கள் மத்தியில் அவர் மீதான நம்பிக்கை போய் விட்டது. அதோடு அவருக்கு வயதும் அதிகரித்து விட்டது. எனவே சத்ருகன்சின்கா உடனடியாக அரசியலை விட்டு விலகி செல்வது நல்லது.

    பாட்னா தொகுதியில் அவர் களம் இறங்கினால் அவருக்கு ஆதரவாக பூத் ஏஜெண்டுக்கு கூட ஆள் கிடைக்காது. பாட்னா பா.ஜனதாவின் கோட்டையாகும். அங்கு சத்ருகன்சின்காவின் சித்து வேலைகள் எடுபடாது.
     
    இவ்வாறு சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார். #LSPolls #ShatrughanSinha
    எதிர்க்கட்சிகள் மாநாட்டில் பங்கேற்ற சத்ருகன்சின்கா மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது. #ShatrughanSinha

    புதுடெல்லி:

    கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக 22 எதிர்க்கட்சி தலைவர்கள் கைகோர்த்து உள்ளனர்.

    இம்மாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரிகளான பா.ஜனதா கட்சியை சேர்ந்த யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி, மற்றும் சத்ருகன் சின்கா எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர். பா.ஜனதாவில் அதிருப்தியில் இருக்கும் சத்ருகன்சின்கா ஏற்கனவே மோடியையும், மத்திய அரசின் செயல்பாட்டையும் வெளிப்படையாக விமர்சனம் செய்து வந்தார்.

    இந்தநிலையில் எதிர்க்கட்சிகள் நடத்திய மாநாட்டில் அவர் பங்கேற்றது பா.ஜனதா தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதையடுத்து சத்ருகன்சின்கா மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதொடர்பாக பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியதாவது:-

    பா.ஜனதா வழங்கிய எம்.பி.பதவியில் இருந்து சத்ருகன்சின்கா சலுகைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் அதே வேளையில் கட்சிக்கு எதிராக பேசிவருகிறார். இது போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பா.ஜனதாவுக்கு எப்போதுமே முக்கியமானது.

    இதுதொடர்பாக கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும். சில பேர் கட்சி பின்னால் இருக்க விரும்புகிறார்கள். இதனால் கட்சியில் இருந்து விலகாமல் உள்ளனர். அதேநேரத்தில் அவர்கள் சந்தர்ப்பவாதிகளாக உள்ளனர் என்றார். #ShatrughanSinha

    பாரதிய ஜனதாவில் தனி மனித ஆதிக்கத்தை எதிர்ப்பதாக நடிகர் சத்ருகன்சின்கா பேசினார். #ShatrughanSinha #Modi #BJP
    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், பிரதமர் மோடியை பற்றி தனியாக புத்தகம் ஒன்று எழுதி இருந்தார்.

    ‘முரண்பாடான பிரதமர். மோடியும் அவரது இந்தியாவும்’ என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

    இதன் வெளியீட்டு விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில், பாரதிய ஜனதா எம்.பி.யும், அதிருப்தி தலைவருமான நடிகர் சத்ருகன்சின்கா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

    நான் சுயநலத்துக்காக செயல்படுபவன் அல்ல. நான் என் சார்பிலோ அல்லது எனது நலனுக்காகவோ யாரிடமும் எதுவும் கேட்பதுமில்லை. விரும்புவதுமில்லை.

    என்னை பொறுத்த வரை தனிப்பட்ட நபரை விட கட்சி முக்கியம். கட்சியின் நலனை விட நாட்டின் நலன் முக்கியம்.

    பாரதிய ஜனதாவை பொறுத்த வரை இப்போது தனி மனித ஆதிக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. 2 பேர் கொண்ட படை மட்டும் செயல்படுகிறது. அங்கு ஜனநாயகம் செயல்படவில்லை.

    தனி மனிதரின் ஆதிக்கமும், 2 பேர் படையும்தான் நாட்டை நடத்தி கொண்டு இருக்கிறது. இது, என்ன வகையான காட்சி என்று தெரியவில்லை.

    தனிப்பட்ட முறையில் நான் மோடியை எதிர்க்கவில்லை. இந்த செயல்பாட்டைத்தான் எதிர்க்கிறேன்.

    மோடி ரூ.15 லட்சம் தருவதாக வாக்குறுதி அளித்ததை பற்றி மட்டும் நான் பேசவில்லை. மக்கள் வெற்று வாக்குறுதிகளை விரும்பவில்லை. வேலை வாய்ப்பு, இப்போது இருப்பதை விட சிறப்பான வசதி வாய்ப்புகள் ஆகியவற்றைத்தான் விரும்புகிறார்கள்.

    இவ்வாறு சத்ருகன்சின்கா பேசினார்.

    விழாவில் பேசிய சசிதரூர், சத்ருகன்சின்கா போன்ற ஹீரோக்கள் காங்கிரசுக்கு வர வேண்டும். அவர்களுக்கு நல்ல இடம் காத்திருக்கிறது என்று கூறினார். #ShatrughanSinha #Modi #BJP
    வருகிற 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று சத்ருகன்சின்கா பேசினார். #BJP #ShatrughanSinha
    முசாபர்நகர்:

    நடிகர் சத்ருகன்சின்கா பாட்னா தொகுதியில் பா.ஜனதா சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பிரதமராக மோடி பதவி ஏற்றது முதல் அவ்வப்போது அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

    பீகார் சட்டசபை தேர்தலில் தன்னை முதல்- மந்திரி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். அவரது கோரிக்கை ஏற்கப்படாததால் அதிருப்தியில் இருந்து வருகிறார்.

    மோடியை தாக்கிப் பேசி வந்த சத்ருகன்சின்கா இப்போது பா.ஜனதாவையே வீழ்த்த வேண்டும் என்று பேசியிருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் அருகில் உள்ள தாவ்லி கிராமத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் சத்ருகன் சின்கா பேசியதாவது:-

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசு வற்புறுத்தலால்தான் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலண்ட் கூறியதாக பிரான்ஸ் நாட்டு பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.

    பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல்.-ஐ புறக்கணித்து விட்டு ரிலையன்ஸ் ஏன் சேர்த்துக் கொள்ளப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    வருகிற 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினர்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்காவும் கலந்து கொண்டார். அவரும் பிரதமர் மோடியையும் பா. ஜனதாவையும் தாக்கிப் பேசி வந்ததால் பா.ஜனதாவில் இருந்து ஓரங்கப்பட்டப்பட்டு பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவர் புதிய அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். #BJP #ShatrughanSinha #ParliamentElection
    ×