search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சக்சேனா"

    ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சக்சேனா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஒரு வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. #AgustaWestlandCase #RajivSaxena
    புதுடெல்லி:

    முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடாக ரூ.3,600 கோடி பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக துபாய் வர்த்தக பிரமுகர் ராஜீவ் சக்சேனா கைது செய்யப்பட்டார்.

    அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரித்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. இதில் அவருக்கு இருதய கோளாறும், ரத்த புற்றுநோயும் இருப்பது தெரிந்தது. சிகிச்சை பெறுவதற்காக ராஜீவ் சக்சேனா ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதனை அமலாக்கத்துறையும் ஆதரித்தது. எனவே அவருக்கு ஒரு வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. அவரது உடல்நிலை பற்றிய விரிவான அறிக்கை தாக்கல் செய்ய எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு உத்தரவிட்டு, வழக்கை 22-ந்தேதிக்கு கோர்ட்டு ஒத்திவைத்தது. #AgustaWestlandCase #RajivSaxena

     
    நர்மதா நதியை தூய்மைப்படுத்தும் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு நல்ல நோக்கங்களுக்காக போராடிவரும் சமூக சேவகி மேதா பட்கர் மீது டெல்லி கோர்ட்டில் அவமதிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #MedhaPatkar
    புதுடெல்லி :

    சமூக சேவகி மேதா பட்கர் நர்மதா நதியை தூய்மைப்படுத்தும் இயக்கத்தை நடத்திவருவதோடு, பல்வேறு நல்ல நோக்கங்களுக்காக போராட்டங்களை நடத்தியவராவார். இவருக்கும், காதி கிராமத் தொழில் ஆணைய தலைவராக இருந்த சக்சேனாவிற்கும் கடந்த 2000-ம் ஆண்டு முதல் மோதல்போக்கு நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் கோர்ட்டில் அவதூறு வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தன்னை மேதா பட்கர் அவமதித்து பேசியதாக சக்சேனா டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனடிப்படையில், பிரிவு 499/500-ன் கீழ் மேதா பட்கர் மீது இரண்டு அவமதிப்பு வழக்குகளை பதிவு செய்த நீதிபதி, இதுகுறித்து விளக்கம் அளிக்கக்கோரி மேதா பட்கருக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். #MedhaPatkar
    நான்கு முறை உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடியதற்கு விருது கிடைத்தும், இந்திய ‘ஏ’ அணியல் இடம் கிடைக்காத வீரர். #BCCI
    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 1986-ம் ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி பிறந்தவர் ஜலாஜ் சக்சேனா. தற்போது 31 வயதாகும் இவர் கேரளா அணிக்காக விளையாடி வருகிறார். 12 வருடத்திற்கு முன் தனது 19 வயதில் கேரளா அணியில் அறிமுகம் ஆனார். சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இவர் 99 முதல்தர போட்டிகளில் விளையாடி 12 சதம், 28 அரைசதங்களுடன் 5418 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 37.62 ஆகும். பந்து வீச்சில் 262 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். 5 முறை 10 விக்கெட்டும், 15 முறை 5 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.

    ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடியதற்காக நான்கு முறை பிசிசிஐ-யின் விருதை பெற்ற இவருக்கு இந்தியா ‘ஏ’ அணியில் கூட இடம்கிடைக்கவில்லை. இது சக்சேனாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



    இதுகுறித்து சக்சேனா கூறுகையில் ‘‘நீங்கள் விருதுகள் வழங்கி கொண்டிருக்கிறீர்கள். ஆனால், அதற்கு எந்தவித வெகுமதியும் இல்லை. கடந்த நான்கு வருடங்கள் நான் விருதுகள் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய ‘ஏ’ அணியில் கூட என்னை எடுக்காகது பற்றி பிசிசிஐ-யிடம் கேள்வி கேட்கவில்லை என்றால், அதில் எந்தவித பயனும் இல்லை. இந்த விஷயம் என்னை மிகவும் அவமதிக்குள்ளாக்கியுள்ளது. நான் மிகவும் மன ஆழுத்தத்துடன் உள்ளேன்.

    கடந்த நான்கு வருடமாக பிசிசிஐ உங்களுக்கு தொடர்ந்து விருது வழங்கி வருகிறது. ஆனால், உங்களை இதைவிட உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல அவர்கள் பார்க்கவில்லை என்று ஒவ்வொருவரும் கேள்வி கேட்கிறார்கள். இது அவமானத்திற்குரியதாக நினைக்கிறேன்’’ என்றார்.



    2017-18 சீசனில் 49 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு மாதவ்ராவ் சிந்தியா விருது வழங்க இருக்கிறது. இந்த விருது பெங்களூருவில் அடுத்த வாரம் வழங்கப்பட இருக்கிறது. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறை சிறந்த ஆல் ரவுண்டருக்கான லாலா அமர்நாத் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×