search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருத்தோலை"

    • சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி ஆலயம் சார்பில் குருத்தோலை பவனி நடந்தது.
    • பெண்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக வந்து அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தை வந்தடைந்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி ஆலயம் சார்பில் குருத்தோலை பவனி நடந்தது. பாதிரியார் பாஸ்கர் டேவிட் தலைமை தாங்கினார். தொன்போஸ்கோ பள்ளி தாளாளர் ஆரோக்கியம், முதல்வர் ஆல்பிரட், நிர்வாகிகள் சார்லஸ், பிரபு, ரோஷன் முன்னிலை வகித்தனர். வி.வி.ஆர்.நகரில் இருந்து பெண்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக தூத்துக்குடி- ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வந்து அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தை வந்தடைந்தனர். பின்பு மாதா கோவிலில் ஜெபம் செய்யப்பட்டது. இதில் மாதா கோவில் தலைவர் அந்தோணிராஜ், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் பரலோக ராஜ், முன்னாள் தலைவர் ஜெயராஜ், முன்னாள் செயலாளர் காமராஜ், நிர்வாகி அருள் பால்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று குருத்தோலை ஞாயிறு கிறிஸ்தவ மக்களால் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
    • குருத்தோலை பவனி நடைபெற்றது.

    ஆத்தூர்:

    கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான குருத்தோலை ஞாயிறு இன்று கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்களின் தவக்காலம் 40 நாட்கள் சாம்பல் புதனில் தொடங்கி வரும் ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகையோடு முடிவடைகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று குருத்தோலை ஞாயிறு கிறிஸ்தவ மக்களால் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

    ஜெருசலேம் நகரில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசுவை கோவேறு கழுதையில் ஏற்றி சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்து பெரியோர்களும் சேர்ந்து ஒலிவ மரக்கிளைகளைக் கையில் ஏந்தி தாவிது மகனுக்கு ஓசன்னா, ஆண்டவர் பேரால் வருபவர் ஆசி பெற்றவர் என ஆர்ப்பரித்துக் கூறி பவனி வந்தனர்.

    அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இந்த குருத்தோலை பவனி ஆனது கொண்டாடப்படுகிறது. இந்த குருத்தோலை ஞாயிறு திருப்பலியின் மூலம் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட புனித வாரம் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. இதையொட்டி சேலம் மாவட்டம் ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை கிரகோரிராஜன் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

    • இதை நினைவுகூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.
    • ஓசன்னா வாழ்த்து பாடல்களை பாடியபடி குருத்தோலைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.

    கடலூர்:

    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேம் நகரு க்குள் கழுதை மேல் அமர்ந்துவரும்போது மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை பிடித்து வாழ்த்து பா டல்களை பாடினர். இதை நினைவுகூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி குருத்தோ லை பவனி நடைபெறும். அதன்படி குருத்தோலை ஞாயிறான இன்று காலை கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. பின்னர் குருத் தோலைகளை ஏந்தியபடி கிறிஸ்தவர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் தேவாயலத்தை வந்தடைந்தனர். இதில் ஏ ராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கடலூர் ஆற்காடுலுத்தரன் திருச்சபை மற்றும் கடலூர் செம்மண்டலம், திருதிரிப்புலியூர், முதுநகர், நெல்லிக்குப்பம் மேல்ப ட்டாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை, ஆராதனை நடந்தது. தொடர்ந்து கிறிஸ்த வர்கள் ஓசன்னா வாழ்த்து பாடல்களை பாடியபடி குருத்தோலைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.

    • கிறிஸ்தவர்கள் கைளில் குருத்தோலை ஏந்தி இந்த நாளில் பவனி வருவது வழக்கம்.
    • குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து இந்த வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

    நாகர்கோவில் :

    இயேசு கிறிஸ்து சிலுவை யில் அறையப்படுவதற்கு முன்பு மக்கள் அவரை அரசராக பாவித்து கோவேறு கழுதையின் மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

    இதனை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் கைளில் குருத்தோலை ஏந்தி இந்த நாளில் பவனி வருவது வழக்கம். உலகம் முழுவதும் ஆண்டு தோறும் நடைபெறும் குருத்தோலை ஞாயிறு இந்த ஆண்டு இன்று நடைபெற்றது.

    இதையொட்டி கத் தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ. ஆல யங்களில் கிறிஸ்தவர்கள் இன்று காலை திரண்டனர். பின்னர் அவர்கள் குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசானா பாடல் பாடிய படி வீதிகளில் வலம் வந்தனர்.

    தமிழகம் முழுவதும் இன்று அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் திரண்ட கிறிஸ்தவ மக்கள் குருத் தோலை பவனியில் பங்கேற்றனர். குமரி மாவட்டத்தை பொறுத்த வரை காலையிலேயே அனைத்து கிறிஸ்தவ ஆலய ங்களிலும் ஏராளமானோர் திரண்டனர்.

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரி யார் பேரா லயத்தில் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை யில் காலை 6.30 மணிக்கு குருத்தோலை பவனி நடை பெற்றது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது.

    கோட்டார் மறை மாவட்ட செயலாளர் இம்மானுவேல், பொருளாளர் அலோசியஸ் பென்சிகர், ஆயரின் செய லாளர் சகாய ஆண்டனி, கோட்டார் மறை மாவட்ட முதல்வர் சகாய ஆனந்த், பங்கு தந்தை ஸ்டான்லி சகாயசீலன், இணை பங்கு தந்தை ஆன்ேறா ஜெரால்டு, அருட்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் அசிசி ஆலயம், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், கன்னியாகுமரி புனித உபகார மாதா ஆலயம் உள்பட மாவட்டடத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை பவனி நடை பெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் திரளாக பங்கேற்றனர்.

    குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து இந்த வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி வருகிற3,4 மற்றும் 5-ந் தேதிகளில் இயேசுவின் சிலுவை மரணம், பாடுகள் குறித்து அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    6-ந் தேதி பெரிய வியாழன் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. 7-ந் தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாக அனுச ரிக்கப்படுகிறது. தொடர்ந்து 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டா டப்படுகிறது.

    குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்த லம் சார்பில் மரமடி குருசடி யிலிருந்து குருத்தோலை பவனி தொடங்கி பீச் சந்திப்பு வழியாக காணிக்கை அன்னை திருத்த லம் சென்றது. இதில் சிறுவர்கள், பெண்கள் உள்பட திரளா னோர் கலந்து கொண்டு 'தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா' என்று பாடல் பாடி சென்றனர்.

    தொடர்ந்து காணிக்கை அன்னை திருத்தலத்தில் கோட்டார் ஆயர் இல்ல அருட்பணியாளர் பென்சிகர் திருப்பலி நடத்தினார். பங்கு மக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தென்தாமரைகுளம் சி.எஸ்.ஐ. சேகர கஸ்பா ஆலயத்தில் குருத் தோலை ஞாயிறு கடை பிடிக்கப்பட்டது. அப்போது அந்த ஆலயத்தை சேர்ந்த வர் 200-க்கும் மேற்பட் டோர் வெள்ளை ஆடை களை அணிந்தபடி குருத் தோலைகளை கையில் பிடித்தபடி ஓசன்னா பாடல் களை பாடி அந்த பகுதியின் ஊர்களை பவனியாக சுற்றி வந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சேக ரத்து போதகர் கிறிஸ்டோ பர், சேகர கஸ்பா ஆலய செயலாளர் கால்வின், திருப் பணியாளர் அருள் சீலன், பொருளாளர் பால் துரை, கணக்கர் பெனி ஜோசப், நிர்வாகிகள் அனிதா, அருள் ஞான பெல், போஸ், கிறிஸ்டோ யாபேஸ், ஜாண்ஸ்பர்ஜன், ஜெயக்குமார், டேவிட் மோசஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாட்களை லெந்து நாட்களாக கிறிஸ்த வர்கள் அனுசரிக்கிறார்கள். இதில் சாம்பல் புதன், குருத்தோலை ஞாயிறு, புனித வெள்ளி, ஈஸ்டர் ஆகிய 4 நாட்கள் முக்கிய தினங்களாக அனுசரிக்கப்பட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

    இந்நிலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப் படுவதற்கு முன்னதாக எருசலேமில் அவருக்கு கொடுத்த வரவேற்பை நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிறு நேற்று நாடு முழுவதும் அனுசரிக் கப்பட்டது. இதையொட்டி திருப்பூர் பங்களா ஸ்டாப்பில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி சென்றனர். ஆலயத்தில் இருந்து தொடங்கி அவினாசி ரோடு சிக்னல் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தனர். இந்த குருத்தோலை பவனியில் சிறப்பு செய்தியாளர் ஜோஸ்வா கரம் சந்தர், ஆயர் வில்சன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    இதுபோல் குமரன் ரோட்டில் உள்ள புனித கேத்தரீன் ஆலயம், முத்தணம் பாளையம் நற்கருணை நாதர் ஆலயம், ஆஷர்நகர் சி.எஸ்.ஐ. தூய லூக் ஆலயம், சபாபதிபுரம் டி.இ.எல்.சி. அருள்நாதர் ஆலயம் உள்பட திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு நேற்று அனுசரிக்கப்பட்டது. கிறிஸ்தவர்களும் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி சென்றனர். இதில் திரளானவர்கள் பங்கேற்றனர். 
    ஆண்டுதோறும் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை பவனி நடக்கிறது.
    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை ஒரு கழுதைக்குட்டியின் மேல் அமர்த்தி எருசலேம் நகரின் வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது வழிநெடுக நின்ற மக்கள் ஒலிவ மரக்கிளைகளை கைகளில் பிடித்தபடி ‘தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, உன்னதங்களில் ஓசன்னா’ என்று பாடி மகிழ்ந்தனர்.

    இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு குருத்தோலை பவனி வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இது ஆண்டுதோறும் ஞாயிற்றுக்கிழமை வருவதால், அந்த நாள் ‘குருத்தோலை ஞாயிறு’ என்றும் அழைக்கப்படுகிறது.

    அன்றைய தினம் கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்தவர்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட குருத்தோலைகள் வழங்கப்படும். அவற்றை அவர்கள் கைகளில் ஏந்தியபடி அந்தந்த ஊர்களில் தெருக்களின் வழியாக ஓசன்னா பாடல் பாடி பவனியாக வருவார்கள். அதைத் தொடர்ந்து திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும். குருத்தோலை பவனிக்கான குருத்தோலைகளை, மக்கள் நேர்ச்சையாகவும், காணிக்கையாகவும் ஆலயங்களுக்கு வழங்குவார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் வருகிற 14-ந் தேதி குருத்தோலை பவனி நடைபெறுகிறது.

    அதைத் தொடர்ந்து ஈஸ்டர் வரை உள்ள 7 நாட்களும் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த புனித வாரத்தில் பெரிய வியாழன், புனித வெள்ளி போன்ற தினங்கள் அனுசரிக்கப்படும். 
    ×