search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் இன்று ஓசானா பாடல் பாடிய படி கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி
    X

    குமரி மாவட்டத்தில் இன்று ஓசானா பாடல் பாடிய படி கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி

    • கிறிஸ்தவர்கள் கைளில் குருத்தோலை ஏந்தி இந்த நாளில் பவனி வருவது வழக்கம்.
    • குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து இந்த வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

    நாகர்கோவில் :

    இயேசு கிறிஸ்து சிலுவை யில் அறையப்படுவதற்கு முன்பு மக்கள் அவரை அரசராக பாவித்து கோவேறு கழுதையின் மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

    இதனை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் கைளில் குருத்தோலை ஏந்தி இந்த நாளில் பவனி வருவது வழக்கம். உலகம் முழுவதும் ஆண்டு தோறும் நடைபெறும் குருத்தோலை ஞாயிறு இந்த ஆண்டு இன்று நடைபெற்றது.

    இதையொட்டி கத் தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ. ஆல யங்களில் கிறிஸ்தவர்கள் இன்று காலை திரண்டனர். பின்னர் அவர்கள் குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசானா பாடல் பாடிய படி வீதிகளில் வலம் வந்தனர்.

    தமிழகம் முழுவதும் இன்று அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் திரண்ட கிறிஸ்தவ மக்கள் குருத் தோலை பவனியில் பங்கேற்றனர். குமரி மாவட்டத்தை பொறுத்த வரை காலையிலேயே அனைத்து கிறிஸ்தவ ஆலய ங்களிலும் ஏராளமானோர் திரண்டனர்.

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரி யார் பேரா லயத்தில் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை யில் காலை 6.30 மணிக்கு குருத்தோலை பவனி நடை பெற்றது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது.

    கோட்டார் மறை மாவட்ட செயலாளர் இம்மானுவேல், பொருளாளர் அலோசியஸ் பென்சிகர், ஆயரின் செய லாளர் சகாய ஆண்டனி, கோட்டார் மறை மாவட்ட முதல்வர் சகாய ஆனந்த், பங்கு தந்தை ஸ்டான்லி சகாயசீலன், இணை பங்கு தந்தை ஆன்ேறா ஜெரால்டு, அருட்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் அசிசி ஆலயம், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், கன்னியாகுமரி புனித உபகார மாதா ஆலயம் உள்பட மாவட்டடத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை பவனி நடை பெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் திரளாக பங்கேற்றனர்.

    குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து இந்த வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி வருகிற3,4 மற்றும் 5-ந் தேதிகளில் இயேசுவின் சிலுவை மரணம், பாடுகள் குறித்து அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    6-ந் தேதி பெரிய வியாழன் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. 7-ந் தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாக அனுச ரிக்கப்படுகிறது. தொடர்ந்து 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டா டப்படுகிறது.

    குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்த லம் சார்பில் மரமடி குருசடி யிலிருந்து குருத்தோலை பவனி தொடங்கி பீச் சந்திப்பு வழியாக காணிக்கை அன்னை திருத்த லம் சென்றது. இதில் சிறுவர்கள், பெண்கள் உள்பட திரளா னோர் கலந்து கொண்டு 'தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா' என்று பாடல் பாடி சென்றனர்.

    தொடர்ந்து காணிக்கை அன்னை திருத்தலத்தில் கோட்டார் ஆயர் இல்ல அருட்பணியாளர் பென்சிகர் திருப்பலி நடத்தினார். பங்கு மக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தென்தாமரைகுளம் சி.எஸ்.ஐ. சேகர கஸ்பா ஆலயத்தில் குருத் தோலை ஞாயிறு கடை பிடிக்கப்பட்டது. அப்போது அந்த ஆலயத்தை சேர்ந்த வர் 200-க்கும் மேற்பட் டோர் வெள்ளை ஆடை களை அணிந்தபடி குருத் தோலைகளை கையில் பிடித்தபடி ஓசன்னா பாடல் களை பாடி அந்த பகுதியின் ஊர்களை பவனியாக சுற்றி வந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சேக ரத்து போதகர் கிறிஸ்டோ பர், சேகர கஸ்பா ஆலய செயலாளர் கால்வின், திருப் பணியாளர் அருள் சீலன், பொருளாளர் பால் துரை, கணக்கர் பெனி ஜோசப், நிர்வாகிகள் அனிதா, அருள் ஞான பெல், போஸ், கிறிஸ்டோ யாபேஸ், ஜாண்ஸ்பர்ஜன், ஜெயக்குமார், டேவிட் மோசஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×