search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்ப்பரேட் நிறுவனங்கள்"

    • கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • தூய்மை பணியாளர்கள் கூடுதலாக நியமிக்க கோரிக்கை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியின் நகர மன்ற அவசரக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமை தாங்கினார்.

    நகராட்சி துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி. சிசில்தாமஸ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் பேசும்போது குடியாத்தம் நகராட்சியில் 4 நாட்கள் முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை காவேரி கூட்டுக் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    குடியாத்தம் நகராட்சியில் அனைத்து பகுதிக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் ர் வழங்கும் வகையில் கடந்த இரண்டு மாதங்களாக நகராட்சி அதிகாரிகள் கடுமையாக பணி செய்து குடிநீர் வழங்க திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி உள்ளனர்.

    அதனால் மத்திய மாநில அரசுகள் நிதி உதவியுடன் அம்ருத் திட்டத்தின் கீழ் 12 கோடியே 92 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பசுமத்தூரில் இருந்து குடியாத்தம் நகருக்கு கூடுதலாக குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதற்காக பல இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படும் செதுக்கரை பயணியர் விடுதி அருகே தரைத்தள ராட்சத குடிநீர் தொட்டி கட்டப்படும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் இதற்காக கடுமையாக பாடுபட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நகராட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து பேசிய கவுன்சிலர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களால் நுகர்பொருள் விநியோகிஸ்தர்கள் சிலரை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது அதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் குடியாத்தம் பகுதியில் வணிகம் மேற்கொள்ள தடை விதிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்ள வேண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

    குடியாத்தம் நகராட்சி பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ள போதுமான பணியாளர்கள் இல்லை கூடுதலாக பணியாளர்கள் நியமிக்க வேண்டும் பலமுறை கூட்டத்தில் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உறுப்பினர்கள் பேசினார்கள் தொடர்ந்து மழை காலம் வருவதால் அனைத்து கால்வாய்களில் தூர்வார வேண்டும், கழிவு நீர் மற்றும் மழை நீர் சீராக செல்ல செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் ஆட்டோ மோகன் ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், நவீன்சங்கர், ஜாவித்அகமது, நளினி, லாவண்யா உள்பட உறுப்பினர்கள் பலர் பேசினார்கள்.

    கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து கமி‌ஷன் வாங்குவதற்கு 8 வழி பசுமை சாலையை போடுகிறார்கள் என்று முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். #mutharasan #chennaisalemgreenexpressway

    சேலம்:

    சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு, மாநில அரசு சேர்ந்து கொண்டு சேலத்திற்கும் சென்னைக்கும் விரைவாக செல்லக்கூடிய 8 வழிச்சாலை என்ற பெயரில் 5 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளுடைய நிலங்களை அபகரித்து 10 ஆயிரம் ரூபாய் கோடி செலவில் சாலை அமைக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு திட்டத்தை அறிவிக்கிறபோது, சம்பந்தப்பட்ட விவசாயிகளுடைய, பொதுமக்களுடைய கருத்தறிந்து அதற்கு பிறகு செயல்படுத்த முன்வர வேண்டும். அல்லது அறிவித்த பிறகு மக்கள் கூறிய கருத்துக்களுக்கு செவி கொடுத்து கேட்க வேண்டும்.

    அதற்கு மாறான முறையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மிக கடுமையான அடக்குமுறைகளை மேற்கொண்டு விவசாயிகளை அச்சுறுத்தி பெண்களை அச்சுறுத்தி நிலங்களை கையகப்படுத்தி கல் ஊன்றுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்கிறார்கள்.

    கல் ஊன்றுகின்ற இடத்தில் அனைத்திலும் பெண்களே முன்னின்று கல்களை அகற்றுகின்ற போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

    இந்த 8 வழிச்சாலை திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாங்கள் திரும்ப, திரும்ப வலியுறுத்தி கூறிகின்றோம். அதற்கான முறையில் தான் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நடைபெறுகிறது.

    அரசு இந்த திட்டத்தை கைவிடவில்லை என்று சொன்னால் 5 மாவடங்களிலும் இந்த போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் மற்றும் ஒரே கருத்துக்கள் உடைய அரசியல் கட்சிகள், அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பிரமாண்டமான போராட்டங்கள் நடத்துவதற்கு ஆயத்த ஆவோம்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையிலும் சரி, வெளியிலும் சரி பொய் சொல்கிறார். நேற்று வரை விவசாயிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். சிலர் ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார்கள்.

    ஆகவே தானாகவே விவசாயிகள் முன்வந்து 90 சதவீத நிலத்தை கொடுத்து விட்டார்கள் என்று முதல்-அமைச்சர் கூறுவது அப்பட்டமான பொய்.

    8 வழி பசுமைச்சாலையில் 7, 8 மலைகள் பறிபோகிறது. இந்த மலைகளை உடைத்து அதில் இருக்கிற விலை மதிக்க முடியாத கனிம வள செல்வங்களை கொள்ளையடிப்பதற்காக தான் இந்த சாலையே போடப்படுகிறது என்பதை பகிரங்கமாக தெரிவிக்கிறோம்.

    கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து இவர்கள் கமி‌ஷன் வாங்குவதற்கு இந்த சாலையை போடுகிறார்கள். பொதுமக்களுக்காக அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார். #mutharasan #chennaisalemgreenexpressway

    ×