search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டுமன்னார்கோவில்"

    காட்டுமன்னார்கோவில் அருகே போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் அரசு மணல் குவாரி யாடு உள்ளது. அங்கு தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது கண்டமங்கலத்தை சேர்ந்த பால முருகன் (வயது 37) மற்றும் பாலச்சந்திரன் (36) ஆகிய 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை ஆபாசமாக பேசி, தகராறில் ஈடுபட்டனர். பணியில் இருந்த காட்டு மன்னார்கோவில் தலைமை காவலர் சண்முக சுந்தரம், ஏன் இங்கு நின்று கொண்டு தகராறில் ஈடுபடுகிறீர்கள் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றார்.

    இதை கேட்டு ஆத்திரமடைந்த பாலமுருகன், பால சந்திரன் ஆகியோர் சேர்ந்து தலைமை காவலர் சண்முகசுந்தரத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து காட்டு மன்னார் கோவில் போலீசில் சண்முகசுந்தரம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் வழக்குபதிவு செய்து போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாலமுருகன், பாலசந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
    காட்டுமன்னார் கோவில் அருகே 2 மகள்களின் தாய் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார் கோவிலை அடுத்த ருத்திரசோலை கிராமத்தை சேர்ந்தவர் அருலரசு (வயது 39). இவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (33). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் 2 மகள்களுடன் விஜயலட்சுமி ருத்திரசோலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் வீட்டில் இருந்து விஜயலட்சுமி திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த அவரது மகள்கள், உறவினர்கள் பல இடங்களில் விஜயலட்சுமியை தேடினர். எங்கும் அவர் இல்லை.

    இதுகுறித்து காட்டு மன்னார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குபதிவு செய்து மாயமான விஜயலட்சுமியை தேடி வருகிறார். 2 மகள்களின் தாய் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்ற நர்சு மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீரானந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகள் திவ்யா(வயது22).

    இவர் நர்சிங் படித்துவிட்டு காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலைபார்த்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை.

    நேற்று காலை திவ்யா வழக்கம்போல் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை.

    இதனைதொடர்ந்து காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் திவ்யாவின் தாய் சுமித்ரா புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் திவ்யா எங்கு சென்றார் என தேடிவருகிறார்.
    காட்டுமன்னார்கோவில் அருகே கடைக்கு சென்ற இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயன்று கொலை மிரட்டல் விடுத்த தாய்-மகன் கைது செய்யப்பட்டனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வேலம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மகள் ரோபனா (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள கடையில் வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (22) அங்கு வந்தார். அவர் திடீரென ரோபனாவின் கையை பிடித்து மானபங்கம் செய்ய முயற்சி செய்தார். இதில் அதிர்ச்சியடைந்த ரோபனா அங்கிருந்து வேகமாக தப்பி ஓடினார். இது குறித்து வேல்முருகனின் தாயார் ஜெயாவிடம் கூறினார்.ஆனால் ஜெயா தனது மகனை கண்டிக்கவில்லை. அவர் வேல்முருகனுடன் சேர்ந்து கொண்டு, நடந்த விவரங்களை வெளியில் கூறினாள், உன்னை கொலை செய்து விடுவோம் என்று கூறி ரோபனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இந்த சம்பவத்தால் மனமுடைந்து காணப்பட்ட ரோபனா வீட்டில் தனியாக இருக்கும்போது வி‌ஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன், ஜெயா ஆகிய 2 பேரையும் கைது செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காட்டுமன்னார்கோவிலில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை கைது செய்தனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அளிஞ்சமங்கலம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது 34) என்பவர் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டு இருந்தார். 

    இதையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×