என் மலர்
நீங்கள் தேடியது "kattumannarkovil"
ஸ்ரீமுஷ்ணம்:
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வேலம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மகள் ரோபனா (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள கடையில் வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (22) அங்கு வந்தார். அவர் திடீரென ரோபனாவின் கையை பிடித்து மானபங்கம் செய்ய முயற்சி செய்தார். இதில் அதிர்ச்சியடைந்த ரோபனா அங்கிருந்து வேகமாக தப்பி ஓடினார். இது குறித்து வேல்முருகனின் தாயார் ஜெயாவிடம் கூறினார்.ஆனால் ஜெயா தனது மகனை கண்டிக்கவில்லை. அவர் வேல்முருகனுடன் சேர்ந்து கொண்டு, நடந்த விவரங்களை வெளியில் கூறினாள், உன்னை கொலை செய்து விடுவோம் என்று கூறி ரோபனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்த சம்பவத்தால் மனமுடைந்து காணப்பட்ட ரோபனா வீட்டில் தனியாக இருக்கும்போது விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன், ஜெயா ஆகிய 2 பேரையும் கைது செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.