search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் கூட்டம்"

    • திருக்காட்டுப்பள்ளியில் புறவழிச்சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • மாவட்ட தேர்தல் அதிகாரியாக மேலிடப்பார்வையாளர் அபிலேஷ் நாயர் கலந்து கொண்டு விரைவில் நடைபெற உள்ள காங்கிரஸ் உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்த வேண்டும் என்று கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டாரத்தலைவர்கள் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் நடைபெற்றது.

    முன்னதாக மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. பேராவூரணி சிங்காரம், மாநில துணைத்தலைவர் பண்ணவயல் ராஜாதம்பி, மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மகேந்திரன், குணாபரமேஸ்வரி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு ஆர்.கோவிந்தராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரியாக மேலிடப்பார்வையாளர் அபிலேஷ் நாயர் கலந்து கொண்டு விரைவில் நடைபெற உள்ள காங்கிரஸ் உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்த வேண்டும் என்று கூறி தேர்தல் நடத்தும் முறைகளை விளக்கி கூறினார்.

    நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை வைரக்கண்ணு, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபு மண்கொண்டார், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜே.ஆர்.சுரேஷ், மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட விவசாயப்பிரிவு தலைவர் சீனிகருப்பையா, மாவட்ட நிர்வாகிகள் கறம்பேயம் சக்திவேல், முருகையன், ரெங்கநாதன், சம்பத் வாண்டையார், சுவேதா ஞானப்பிரகாசம், பட்டுக்கோட்டை நகரத்தலைவர் ரவிக்குமார், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் நாகூர்கனி, மாவட்ட ஓ.பி.சி தலைவர் பிரபு சந்தோஷ்குமார், மாவட்ட வர்த்தக அணி தலைவர் சுப்புதங்கராஜ், பின்னையூர் ரவிச்சந்திரன், வட்டாரத்தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, ஐயப்பன், முத்து, கோவி.செந்தில், இப்ராஹிம்ஷா, அன்பழகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், வருகிற 2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்க கடுமையாக உழைக்க வேண்டும், திருக்காட்டுப்பள்ளியில் புறவழிச்சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேட்டூர் அணையிலிருந்து தற்பொழுது விவசாயத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் எந்தவிதமான நிபந்தனையுமின்றி விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு உரங்கள் மான்ய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமுலாக்கத்துறையின் மூலம் பொய் வழக்கு தொடுக்கும் மத்திய அரசை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை ஆகிய மாவட்டகளை சேர்ந்த மகிளா காங்கிரஸ் மண்டல கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
    திருச்சி:

    திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை ஆகிய மாவட்டகளை சேர்ந்த மகிளா காங்கிரஸ் மண்டல கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணை தலைவி ரேவதி பார்சியாலா தலைமை தாங்கினார். மாநில பொதுசெயலாளர் ஜெகதீஸ்வரி வரவேற்றார். மாநில மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி, திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    திருச்சி மாவட்ட பொருளாளர் ராஜாநசீர், மகிளாகாங்கிரஸ் மாவட்ட தலைவிகள் திருச்சி வடக்கு லோகாம்பாள், திருச்சி தெற்கு சரோஜாதேவி மற்றும் அரியலூர் மாரியம்மாள், பெரம்பலூர் இந்திராணி, நாகை ராணி மற்றும்  மாநில மகிளா காங்கிரஸ் ஜெயப்பிரபா, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் அரவானூர் விச்சு, சேவாதளம்  முரளி, உறந்தை செல்வம், அப்துல் குத்தூஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில்  முன்னாள் எம்.எல்.ஏ. லோகாம்பாள் , திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கலை ஆகியோர் பேசும் போது,  காங்கிரசில்  தற்போது அதிக அளவில் பெண்கள் சேர்ந்து வருகின்றனர். ராஜீவ்காந்தி கொண்டு வந்த திட்டத்தின் மூலம் பெண்கள் உள்ளாட்சிகளில் பதவிகளை வகித்தார்கள். பெண்கள் முன்னேற காங்கிரஸ் தான் காரணம். வரும் சட்டமன்ற , பாராளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டு எம்.பி., எம்.எல்.ஏ. வாக வருவார்கள். எனவே அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×