search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress meeting"

    • திருக்காட்டுப்பள்ளியில் புறவழிச்சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • மாவட்ட தேர்தல் அதிகாரியாக மேலிடப்பார்வையாளர் அபிலேஷ் நாயர் கலந்து கொண்டு விரைவில் நடைபெற உள்ள காங்கிரஸ் உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்த வேண்டும் என்று கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டாரத்தலைவர்கள் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் நடைபெற்றது.

    முன்னதாக மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. பேராவூரணி சிங்காரம், மாநில துணைத்தலைவர் பண்ணவயல் ராஜாதம்பி, மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மகேந்திரன், குணாபரமேஸ்வரி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு ஆர்.கோவிந்தராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரியாக மேலிடப்பார்வையாளர் அபிலேஷ் நாயர் கலந்து கொண்டு விரைவில் நடைபெற உள்ள காங்கிரஸ் உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்த வேண்டும் என்று கூறி தேர்தல் நடத்தும் முறைகளை விளக்கி கூறினார்.

    நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை வைரக்கண்ணு, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபு மண்கொண்டார், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜே.ஆர்.சுரேஷ், மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட விவசாயப்பிரிவு தலைவர் சீனிகருப்பையா, மாவட்ட நிர்வாகிகள் கறம்பேயம் சக்திவேல், முருகையன், ரெங்கநாதன், சம்பத் வாண்டையார், சுவேதா ஞானப்பிரகாசம், பட்டுக்கோட்டை நகரத்தலைவர் ரவிக்குமார், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் நாகூர்கனி, மாவட்ட ஓ.பி.சி தலைவர் பிரபு சந்தோஷ்குமார், மாவட்ட வர்த்தக அணி தலைவர் சுப்புதங்கராஜ், பின்னையூர் ரவிச்சந்திரன், வட்டாரத்தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, ஐயப்பன், முத்து, கோவி.செந்தில், இப்ராஹிம்ஷா, அன்பழகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், வருகிற 2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்க கடுமையாக உழைக்க வேண்டும், திருக்காட்டுப்பள்ளியில் புறவழிச்சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேட்டூர் அணையிலிருந்து தற்பொழுது விவசாயத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் எந்தவிதமான நிபந்தனையுமின்றி விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு உரங்கள் மான்ய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமுலாக்கத்துறையின் மூலம் பொய் வழக்கு தொடுக்கும் மத்திய அரசை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தமிழக பொறுப்பாளர் பங்கேற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கோஷ்டி மோதலில் வட்டார பொது செயலாளர் காயம் அடைந்தார்.

    பல்லடம்:

    காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் நோக்குடன் வீடு தோறும் காங்கிரஸ் என்ற பெயரில் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்றது.

    திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை தாங்கினார். இதில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் எழுந்து வடக்கு மாவட்ட தலைவர் கோபி தன்னிச்சையாக செயல்படுகிறார் என கோ‌ஷம் எழுப்பினார்கள். இதனால் கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத்திடமும் புகார் தெரிவித்தனர். அவர்கள் பல்லடம் பகுதியில் உள்ள பழைய நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை மாவட்ட தலைவர் கோபி நியமித்து உள்ளார்.


    நீண்ட காலமாக கட்சியில் உள்ளவர்களுக்கு பதவி கொடுக்கவில்லை. புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுத்து உள்ளார். புதிதாக பதவி பெற்றவர்கள் பழைய நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிப்பதில்லை. இதனால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்றனர்.

    அவர்களிடம் சஞ்சய் தத் கட்சி மேலிடத்துக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    கூட்டம் முடிந்ததும் சஞ்சய் தத் புறப்பட்டு சென்றார். அவரை வழி அனுப்பி விட்டு வந்த மாவட்ட தலைவர் கோபியிடம் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம் செய்தனர்.அப்போது நிர்வாகிகள் சிலர் நாற்காலிகளை தூக்கி கொண்டு ஒருவர் மீது ஒருவர் தாக்கினர். இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த மோதலில் சென்னிமலை வட்டார காங்கிரஸ் பொது செயலாளர் பழனிசாமி காயம் அடைந்தார். தலையில் அடிபட்ட அவரை மீட்டு பல்லடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த மோதல் குறித்து யாரும் போலீசில் புகார் செய்யவில்லை. இது குறித்து மாவட்ட தலைவர் கோபி கூறும் போது, கட்சி பொறுப்புகளுக்காக மாவட்டம் பிரிக்கப்பட்டதில் சிலருக்கு குறைபாடுகள் இருந்தால் என்னிடம் தெரிவித்து இருக்கலாம். மாநில தலைமையிடம் அதை தெரிவித்து அவர்களது தேவையை பூர்த்தி செய்திருப்பேன். காங்கிரஸ் கட்சியில் உள்ள பலர் த.மா.கா. சென்று வந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

    நன்கு செயல்படுபவர்களை தான் மேலிடத்தில் பரிந்துரை செய்ய முடியும் என்றார்.

    ×