search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவியருவி"

    • ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு சென்றனர்.
    • ஒரே நாளில் 3,500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவியில் மழை இருக்கும் காலகட்டத்தில் தண்ணீர் அதிகளவு வருவது மட்டுமின்றி அந்த நேரத்தில் அங்கு குளிக்க உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகமாக இருக்கும்.

    கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்ததன் காரணமாக கவியருவியில் கடந்த சில வாரமாக தண்ணீர் வரத்து சற்று குறைந்தது.

    இருப்பினும் ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு சென்றனர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக கவியருவிக்கு உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.

    காணும்பொங்கலையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ஒரே நாளில் 3,500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

    சுற்றுலா பயணிகள், கவியருவியில் தங்கள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனர். வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் குளிப்பதற்கு போதிய இடமின்றி சுற்றுலா பயணிகள் தவித்தனர். இருந்த போதிலும் பலரும் வெகுநேரம் காத்திருந்து குளித்து சென்றனர்.

    சில சுற்றுலா பயணிகள் அருவியில் ஒரு பகுதியில் ஆங்காங்கே வழிந்தோடும் தண்ணீரிலும், குட்டை போல் தேங்கிய தண்ணீரிலும் குளித்து மகிழ்ந்தனர்.

    பொங்கல் விடுமுறை காரணமாக கடந்த 5 நாட்களில் மட்டும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கவியருவிக்கு வந்துள்ளனர்.

    • கவியருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் அங்கு சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறை தற்காலிகமாக தடை விதித்து உள்ளது.
    • ஆழியார் திருக்கோவில் சோதனைச்சாவடியில் இருந்து கவியருவிக்கு செல்லும் வழி மூடப்பட்டு உள்ளது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே வனத்துறை கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் கவியருவி உள்ளது. இங்கு ஆண்டின் ஒருசில மாதங்களில் தண்ணீர் ரம்மியமாக கொட்டும். அப்போது பொதுமக்கள் திரண்டுவந்து அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்வர்.

    இந்தநிலையில் ஆனைமலை வனப்பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. எனவே அருவிக்கு வரும் நீரோடைகளில் தண்ணீர்வரத்து அதிகமாக உள்ளது.

    இதன்காரணமாக கவியருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பு வேலியையும் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    கவியருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் அங்கு சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறை தற்காலிகமாக தடை விதித்து உள்ளது.

    எனவே ஆழியார் திருக்கோவில் சோதனைச்சாவடியில் இருந்து கவியருவிக்கு செல்லும் வழி மூடப்பட்டு உள்ளது. அங்கு வனத்துறை ஊழியர்கள் தற்போது தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கவியருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்து உள்ளதால், அங்கு குளிப்பதற்காக ஆர்வமாக திரண்டு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆனைமலை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. எனவே கவியருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பு வேலியையும் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே கவியருவியில் குளிக்க தடை விதித்து உள்ளோம். வனப்பகுதியில் கனமழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியதும், அங்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்து உள்ளனர்.

    • பொள்ளாச்சி, வால்பாறையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது.
    • வால்பாறை, பொள்ளாச்சியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது கனமழை குறைந்து உள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் கவியருவி உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பெரிய அளவில் தண்ணீர் வரத்து இல்லை. எனவே கவியருவி வறண்டு காட்சி அளித்தது. இதனை தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி முதல் தடை விதித்து இருந்தனர்.

    இந்தநிலையில் பொள்ளாச்சி, வால்பாறையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு வேலியையும் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அங்கு சென்று சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது.

    இந்தநிலையில் வால்பாறை, பொள்ளாச்சியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது கனமழை குறைந்து உள்ளது. இதனால் கவியருவியில் தண்ணீர் வரத்து ஓரளவு குறைந்து சுற்றுலா பயணிகள் குளிக்க ஏதுவாக உகந்த சூழ்நிலை நிலவுகிறது. எனவே பொள்ளாச்சி கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான வனத்துறையின் தடை இன்று முதல் நீக்கப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இன்று காலை வாகனங்களில் கவியருவிக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் இதமாக விழும் நீர்வீழ்ச்சியில் ஆனந்தமாக குளித்து, மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றதை பார்க்க முடிந்தது.

    • பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை குறையவில்லை.
    • கவியருவியில் வெள்ளத்தின் வேகமும் தண்ணீரின் அளவும் அதிகரித்து வருகிறது.

    வால்பாறை:

    கோவை ஆழியாறு அடுத்த வில்லோணி வனப்பகுதியில் கவியருவி நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு சோத்துப்பாறை ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் அருவியாக கொட்டுகிறது.

    தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சோத்துப்பாறை ஆற்றில் பெரியஅளவில் தண்ணீர் வரத்து இல்லை. எனவே கடந்த 6 மாதங்களாக கவியருவி வறண்டு காணப்பட்டது.

    கோவையில் தற்போது பொள்ளாச்சி, வால்பாறை, ஆழியாறு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. எனவே கவியருவியில் மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. எனவே சுற்றுலாப்பயணிகள் திரளாக வந்திருந்து, கவியருவியில் குளித்து மகிழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில் பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் கவியருவில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே அங்கு பாதுகாப்பு கம்பியையும் தாண்டி வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    எனவே வனத்துறையினர் கடந்த 4 நாட்களாக கவியருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதித்து உள்ளனர். பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை குறையவில்லை.

    இதற்கிடையே கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலாப்பயணிகள் நேற்று குளிப்பதற்காக கவியருவிக்கு சென்றிருந்தனர். ஆனால் அருவியில் தண்ணீர் வரத்து இயல்பு நிலைக்கு வரவில்லை.

    எனவே சுற்றுலாப்பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு வனத்துறையினர் எவரையும் அருவியில் குளிக்க அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு குளிக்க ஆர்வமாக வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

    வால்பாறை கவியருவில் குளிப்பதற்காக வனத்துறையின் தடை, 6-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையளவு குறையவில்லை. கவியருவியில் வெள்ளத்தின் வேகமும் தண்ணீரின் அளவும் அதிகரித்து வருகிறது.

    எனவே சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கவியருவியில் தண்ணீரின் அளவு குறைந்ததும், அங்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிப்பதற்காக அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்து உள்ளனர்.

    ×