search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் பொன்னையா"

    தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பொன்னையா கூறினார். #LokSabhaElections2019
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

    2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி முதல் அமலில் உள்ளது.

    சில நாட்களாக கட்சி தலைவர்களின் கூட்டங்கள், 2-ம் கட்ட தலைவர்களின் பிரசாரங்களில் 2-ம் கட்ட தலைவர்களின் சர்ச்சை பேச்சுக்களால் தேர்தல் விதிமீறல் நடந்துள்ளது. காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4122 வாக்குசாவடிகள் உள்ளன. அவற்றில் 236 பதற்றமான வாக்குசாவடிகள். 1357 வாக்குசாவடிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

    வாக்குசாவடிகளில் நடைபெறும் வாக்குபதிவு தொடர்பான நிகழ்வுகள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பாராளுமன்ற தேர்தலில் 20,500 வாக்குசாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். 4122 வாக்குசாவடிகளுக்கும் தலா 4 பேர் வீதம் பணிபுரிவர். இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்போரூரில் மட்டும் கூடுதலாக 6 பேர் பணியில் இருப்பர்.

    அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குசாவடிகளில் மொத்தம் 17,102 வாக்குசாவடி அலுவலர்கள் தேர்தல் நாளன்று பணிபுரிய உள்ளனர். 3298 வாக்குசாவடி அலுவலர்கள் மாற்றாக வைக்கப்படுவர்.

    வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குசாவடிகளுக்கு மண்டல அலுவலர்கள் 578 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

    வெளி மாவட்ட கட்சியினர் அவரவர் ஊர்களுக்கு வெளியேற உத்திரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு செல்லாதவர்கள் மீது தேர்தல் சட்டத்தின் 133 வது பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருமண மண்டபம், தங்கும்விடுதிகளில் வெளியூர் ஆட்கள் அதிக அளவில் தங்கி கட்சிப்பணியில் ஈடுபட்டாலோ, அல்லது வேறு ஏதேனும் பிரச்சாரம் செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019

    செங்கல்பட்டில் நடந்த டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வில் போலீஸ் நிலையம், பழைய தாலுக்கா அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    செங்கல்பட்டு:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்ட கலெக்டர் பொன்னையா மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் பொன்னையா செங்கல்பட்டு பகுதியில் அதிரடி ஆய்வு செய்தார்.

    முதலில் செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட அரசு பொது மருத்துவமனையை பார்வையிட்டு வளாகத்தை சுற்றிப்பார்த்தார்.

    அப்போது அங்கு குப்பைகள், மருத்துவ கழிவுகள் குவிந்து கிடந்தது. இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு தாலுக்கா போலீஸ் நிலையம், போலீஸ் குடியிருப்பு, தாலுக்கா அலுவலகம், பொதுப் பணித்துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களை கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார்.

    இதில் குப்பைகள் தேங்கி சுகாதாரமின்றி காணப்பட்ட செவிலியர் குடியிருப்புக்கு ரூ.5 ஆயிரம், போலீஸ் குடியிருப்புக்கு ரூ.10 ஆயிரம், தாலுக்கா போலீஸ் நிலையம், பழைய தாலுக்கா அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு தலா ரூ.10 ஆயிரம், வட்டார போக்குவரத்துறை அலுவலகத்திற்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.80 ஆயிரம் விதித்தார்.

    இந்த அபராத தொகையை சொந்த பணத்தில் ஒவ்வொரு அரசு துறையும் கட்ட வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

    தண்ணீர் தேங்காமலும், குப்பைகள் சேராமலும், பிளாஸ்டிக், ரப்பர்,தேங்காய் ஓடுகள் போன்றவற்றை தேக்கி வைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    மேலும் தாலுக்கா போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குற்ற வழக்கில் சிக்கிய பழைய வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். இந்த ஆய்வின் கோட்டாட்சியர் முத்து வடிவேலு, தாசில்தார் பாக்கியலட்சுமி, கமி‌ஷனர் மாரிச்செல்வி, சுகாதாரத்துறை அதிகாரி, சித்ரா சேனா மற்றும் நகராட்சி ஊழியர்கள் வருவாய்துறை ஊழியர்கள் உடன் சென்றனர்.
    சுகாதார பணிகளை மேற்கொள்ளாத தனியார் சேவை மையத்திற்கு அரசு விதிகளின் கீழ் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கொசு ஒழிப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறார். சுகாதாரத்தை பராமரிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    சுகாதாரத்தை பேண தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    நேற்று காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி அறிகுறிகள் உள்ளதா என்று ஆய்வுகள் மேற்கொண்டார்.

    அப்போது சுகாதார பணிகளை மேற்கொள்ளாத தனியார் சேவை மையத்திற்கு அரசு விதிகளின் கீழ் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். டெங்கு உற்பத்தி அறிகுறிகளை அழிக்கவும் உத்தரவிட்டார். மாவட்ட கலெக்டருடன் சுகாதார அதிகாரிகள் சென்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் வரும் 28-ந் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் வரும் 28-ந் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் வேளாண்மைதுறை சம்மந்தபட்ட குறைகளை விவசாயிகள் நேரடியாகவோ அல்லது மனுவாகாவோ தெரிவிக்கலாம். மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் பெரும் அளவில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலையால் வீடு இழந்த 16 பேருக்கு வீட்டுமனை பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.
    காஞ்சீபுரம்:

    சென்னை - சேலம் இடையே ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிட்டப்பட்டு உள்ளது. இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலம் வரை 274 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதற்காக 5 மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்தும் பணி விரைந்து நடந்து வருகிறது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 வழி பசுமை வழிச்சாலைக் காக 59.100 கிலோ மீட் டர் நீளத்துக்கு சாலை அமைப் பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அளவீடு முடிவடைந்துள்ளது.

    இந்த அளவீட்டின்படி 26 வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன. இவற்றில் வளையக் காரணை கிராமத்தில் கையகப்படுத்தப்பட உள்ள 7 வீடுகளில் 6 வீடுகளுக்கு ஏற்கனவே வீட்டுமனை பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டித்தருவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பசுமை வழிச்சாலைக்காக வீடுகளை இழந்த உத்திரமேரூர் வட்டம், வெங்காரம் கிராமத் தைச் சேர்ந்த 9 பேருக்கும், மானாம்பதி கிராமத்தை சேர்ந்த 7 பேருக்கும் என மொத்தம் 16 பேருக்கு வீட்டு மனை பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

    அப்போது கலெக்டர் பொன்னையா கூறும்போது, மீதமுள்ள 4 பேருக்கு அருகில் நிலம் இல்லாததால் நில எடுப்பு பிரிவின் மூலம் வேறு இடத்தல் நிலம் கையகப்படுத்தப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த 22 பேருக்கும் 3 மாதத்திற்குள் வீடு கட்டி முடிக்கப்பட்டு புதிய வீட்டில் குடியேறியபின் அவர்கள் வீடு கையகப்படுத்தப்படும்.

    உத்தேச மதிப்பீடு அடிப்படையில் தென்னை மரத்திற்கு ரூ. 40 ஆயிரம், மாமரத்திற்கு ரூ. 16 ஆயிரத்து 600, கொய்யா மரத்துக்கு ரூ. 10 ஆயிரத்து 20, தைல மரத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 500, தேக்கு மரம் வனத்துறை மூலம் அளவீடு செய்யப்பட்டு அவர்கள் மதிப்பீட்டின்படி இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நூர் முகம்மது, தேசிய நெடுஞ்சாலை மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியர் ராஜூ கலந்து கொண்டனர்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பசுமைவழி சாலைக்கு 80 வீடுகள் மட்டுமே இடிக்கப்படுகிறது என்று கலெக்டர் பொன்னையா நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Greenwayroad


    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 வழிச்சாலைக்கு நிலம் கையப்படுத்தப்படுவது தொடர்பாக கலெக்டர் பொன்னையா நிரூபர்களிடம் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்தில் 27 கிராமங்கள், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 10 கிராமங்கள், செங்கல்பட்டு வட்டத்தில் 5 கிராமங்கள் என 42 கிராமங்கள் வழியாக 8 வழிச் சாலை அமைய உள்ளது.

    இது சம்மந்தமாக கடந்த 10 நாட்களாக வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர், கிராமங்கள் தோறும் சென்று விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் 8 வழிச்சாலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த சாலை 59.1 கிலோ மீட்ர் தூரத்தில் 110 மீட்டர் அகலத்தில் அமைய உள்ளது. இதற்காக மாவட்டத்தில் 80 வீடுகள் மட்டுமே காலி செய்யப்பட இருக்கிறது. அவர்களுக்கு உடனடியாக அதே கிராமத்தில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு பசுமை வீடு கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் விவசாய நிலங்கள் இரண்டாக பிரியும் பகுதிகளில் உள்ள விசவாயிகள் ஒன்று சேர்ந்து மனு அளித்தால் அந்த இடத்தில் சுரங்கப்பாதை அல்லது பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.

    நேரடியாக அளவீடு செய்யும் போது தான் எத்தனை கிணறுகள், மரங்கள் பாதிக்கப்படுகின்றன என்பதை கணக்கீடு செய்ய முடியும். வனத்துறை வழியாக இந்த பாதை செல்வதால் வனத்துறை வழங்கும் இடத்திற்கு மாற்றாக இருமடங்கு இடம் வனத்துறைக்கு வழங்கப்படும். வெட்டப்படும் ஒரு மரத்திற்கு ஈடாக 10 மரக்கன்றுகள் நடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே கலெக்டர் பொன்னையாவிடம் அரும்புலியூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

    அரும்புலியூர் கிராமத்தின் வழியாக சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் காரணமாக அவ்வழியே 20 வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.

    இதனால் நாங்கள் எங்கள் உடமைகளை இழக்க நேரிடும், இழப்பீடு மற்றும் மாற்று இடம் எங்களுக்கு தேவையில்லை. இத்திட்டத்தை எங்கள் பகுதியில் செயல் படுத்த வேண்டாம். எங்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Greenwayroad

    ×