search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்திரி வெயில்"

    • தமிழகத்தில் நேற்றும் மிக கடுமையான வெயில் வாட்டியது.
    • சென்னை உள்பட 15 நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.

    சென்னை:

    தமிழகம், புதுச்சேரியில் இந்த ஆண்டு வெயில் தாக்கம் அதிகளவில் உள்ளது.

    பொதுவாக அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் கொளுத்தும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து அதிக அளவில் வெயில் தாக்கி வருகிறது.

    தமிழகத்தில் நேற்றும் மிக கடுமையான வெயில் வாட்டியது. சென்னை உள்பட 15 நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.

    அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 108.68 டிகிரி வெயில் சுட்டெரித்தது. சென்னை நுங்கம்பாக்கம்-107.78, திருத்தணி-106.66, வேலூர்-106.34, புதுச்சேரி-105.26, மதுரை விமான நிலையம்-104.9, மதுரை நகரம்-104.36, கடலூர்-104, நாகை-104, பரமத்திவேலூர்-103.1, சேலம்-102.38, திருச்சி-102.38, ஈரோடு-102.2, தஞ்சாவூர்-102.2, பரங்கிபேட்டை-101.84, காரைக்கால்-101.3, பாளையங்கோட்டை-101.12 வெயில் கொளுத்தியது.

    பைக்கில் சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். முக்கிய சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மின்விசிறிகள் அனல் காற்றை கக்கியது. இதனால் முதியவர்கள், சிறுவர்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.

    சென்னையில் கடந்த 4 ஆண்டுக்கு பிறகு அக்னி முடிந்த பின்னர் ஜூன் மாதத்தில் 108.68 டிகிரி வெயில் கொளுத்தி உள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்துள்ளனர். இன்று காலையிலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.

    அக்னி முடிந்தும் வெயில் தாக்கம் குறையவில்லையே என்று மக்கள் புலம்பிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    தமிழகம் புதுவையில் சுட்டெரிக்கும் வெயிலால் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ந்தேதி திறக்க வேண்டிய பள்ளிக்கூடங்கள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வெயிலின் தாக்கம் குறையாததால் கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

    மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஜூன் 7-ந்தேதி புதன்கிழமை வரை 4 நாட்கள் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணம்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்ற பின், வெயிலின் தாக்கம் குறையும்.
    • நடப்பாண்டு மழை இல்லாமல் வறண்ட வானிலையே காணப்படுகிறது.கோடை வெயில், கத்திரி வெயில்

    சேலம்:

    சேலத்தில் கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்து, கடந்த ஏப்ரல் 2-வது வாரத்தில் சேலத்தில் அதிகபட்சமாக 106 டிகிரி வெப்ப நிலை பதிவானது.

    மே 1-ந்தேதி காலகட்டத்தில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயின் தாக்கம் குறைந்தது.

    கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த மே 4-ந்தேதி தொடங்கியது. இந்த காலக்கட்டத்தில் மே 8-ம் தேதிக்கு மேல் மழை இல்லாமல் வறண்ட வானிலையே காணப்பட்டது. சராசரியாக சேலத்தில் 100 முதல் 102 டிகிரி வரை வெப்பநிலை பதிவானது. அக்னி நட்சத்திரம் கடந்த 29-ம் தேதி நிறைவு பெற்றது.

    அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்ற பின், வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் நடப்பாண்டு மழை இல்லாமல் வறண்ட வானிலையே காணப்படுகிறது. மேலும் வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. நேற்று காலையில் வெயில் அதிகமாக இருந்தது. 102.4 டிகிரி வெப்பநிலை பதிவானது. இன்றும் வெயில் வாட்டி எடுத்தது.

    கத்திரி வெயில் வழக்கமான வெப்பநிலையைவிட கூடுதலாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமென கலெக்டர் விஜயலட்சுமி கூறியுள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் வருகிற 28-ந் தேதி வரையிலான கத்திரி வெயில் காலத்தில் வழக்கமான வெப்பநிலையைவிட கூடுதலாக வெப்பநிலை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை கூடுமானவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்படும் சூழ்நிலையில் வெளியில் செல்லும்போது, உடன் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் எனவும் தாகம் இல்லாவிடினும், அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும்.

    மேலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது கடுமையான பணிகளை செய்யாமல் இருக்கவும், மது, தேநீர் மற்றும் காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவும் வேண்டும். பொதுமக்கள் வெளியில் செல்லும்போது வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள லேசான, வெளிரிய, தளர்வான முழுக்கை உடைகள் மற்றும் பருத்தி நூல் ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். குடை மற்றும் தொப்பி முதலியவற்றை பயன்படுத்த வேண்டும். தண்ணீர், நீர்மோர், இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, எலுமிச்சை சாறு, கரும்பு சாறு, பழச்சாறு மற்றும் ஓ.ஆர்.எஸ், உப்பு சர்க்கரை கரைசல் போன்றவற்றினை உட்கொள்ள வேண்டும். கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான பகுதியில் கட்டிவைத்து, அதற்கு போதிய அளவு குடிநீர் மற்றும் தீவனம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 
    ×