search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்திரி வெயிலால் வெப்பம் அதிகரிப்பு - பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுகோள்
    X

    கத்திரி வெயிலால் வெப்பம் அதிகரிப்பு - பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுகோள்

    கத்திரி வெயில் வழக்கமான வெப்பநிலையைவிட கூடுதலாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமென கலெக்டர் விஜயலட்சுமி கூறியுள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் வருகிற 28-ந் தேதி வரையிலான கத்திரி வெயில் காலத்தில் வழக்கமான வெப்பநிலையைவிட கூடுதலாக வெப்பநிலை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை கூடுமானவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்படும் சூழ்நிலையில் வெளியில் செல்லும்போது, உடன் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் எனவும் தாகம் இல்லாவிடினும், அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும்.

    மேலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது கடுமையான பணிகளை செய்யாமல் இருக்கவும், மது, தேநீர் மற்றும் காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவும் வேண்டும். பொதுமக்கள் வெளியில் செல்லும்போது வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள லேசான, வெளிரிய, தளர்வான முழுக்கை உடைகள் மற்றும் பருத்தி நூல் ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். குடை மற்றும் தொப்பி முதலியவற்றை பயன்படுத்த வேண்டும். தண்ணீர், நீர்மோர், இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, எலுமிச்சை சாறு, கரும்பு சாறு, பழச்சாறு மற்றும் ஓ.ஆர்.எஸ், உப்பு சர்க்கரை கரைசல் போன்றவற்றினை உட்கொள்ள வேண்டும். கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான பகுதியில் கட்டிவைத்து, அதற்கு போதிய அளவு குடிநீர் மற்றும் தீவனம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 
    Next Story
    ×