search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையில் திருட்டு"

    • கடையில் மேற்கூரை உடைக்கப் பட்டிருந்தது.
    • மடிக்கணினி, ஒரு செல்போன் ஆகிவை திருட்டு போய் இருந்தது.

    மத்தூர்,

    போச்சம்பள்ளி தாலுகா வடமலம்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 47). இவர் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 10-ந் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். 11-ந் தேதி காலை கடைக்கு சென்று பார்த்த போது அங்கு கடை யில் மேற்கூரை உடைக்கப் பட்டிருந்தது.

    மேலும் கடையில் வைத்தி ருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணம், ஒரு மடிக்கணினி, ஒரு செல்போன் ஆகிவை திருட்டு போய் இருந்தது.

    இது குறித்து மாதேஷ் போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி னார்கள்.

    அதே போல கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கேமரா காட்சிகள் வைத்து விசாரணை
    • ரூ.8 ஆயிரத்தை திருடிச்சென்றார்

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென் னாத்தூர் அடுத்த சிறுநாத் தூர் கிராமத்தை சேர்ந்தவர் அக்பர். இவர் அதே பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அக்பர் வழக் கம்போல் கடையில் விற்பனை முடிந்ததும் பணத்தை கல் லாப்பெட்டியில் வைத் துவிட்டு, கடையை பூட் டிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.

    நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்தார். கடையைத் திறந்து உள்ளே சென்றார்.

    அப்போது கல்லாப்பெட்டி திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச் சியடைந்தார். இதையடுத்து கடை யில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவு களை ஆய்வு செய்தார்.

    அதில், மர்ம நபர் ஒரு வர் கடையில் திருடும் காட்சி பதிவாகி இருந் தது. உடனே இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில், போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினர். பின் னர், சிசிடிவி கேமரா பதி வுகளை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் கடை யின் பின்பக்கம் உள்ள தகர சீட்டை கழற்றிவிட்டு கடைக்குள் புகுந்த மர்ம நபர் கல்லாப்பெட் டியை திறந்து அதிலிருந்த ரூ.8 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

    மேலும், அந்த நபர் கடையில் மாட்டி வைத்திருந்த சாமி படத்தை பார்த்து பக்தியுடன் கும்பிட்டார்.

    பின்னர் திருட்டில் விட்டு ஈடுபட்டார். புகாரின்பேரில் கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிசி டிவி கேமரா பதிவுகளை வைத்து கடையில் கைவ ரிசை காட்டிய மர்ம நபரை வலைவீசி தேடி வரு கின்றனர்.

    • ரூ.40 ஆயிரம், மளிகை பொருட்களை அள்ளி சென்றனர்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு வீட்டு வசதி வாரிய பகுதி 2-ல் வசித்து வருபவர் நாகராஜன் (வயது 62). இவரது மனைவி வாணிஸ்ரீ. இவர்கள் மளிகை கடை நடத்தி வரு கின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்ததும் நாகராஜன் மற்றும் வாணிஸ்ரீ ஆகியோர் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். மீண்டும் நேற்று காலை கடையை திறக்க வந் துள்ளனர்.

    அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது கடை யில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் மளிகை பொருட் கள் திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்து நாகராஜன் ஆற்காடுடவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே சோலூர் ஊராட்சி ராஜகோபால் பகுதியை சேர்ந்த ரவி (வயது 56). மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடையில் மர்ம நபர்கள் புகுந்து ரூ.2 ஆயிரம் மளிகை பொருட்கள் ஆகி நேற்று இரவு கடையில் இருந்து ரூ.2 ஆயிரம், பணம் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றை திருடி சென்றனர். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் ரவி புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×