search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாத்திர கடையில் சாமி கும்பிட்டு திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்
    X

    திருடுவதற்கு முன்பு மர்ம நபர் சாமி கும்பிட்ட காட்சி.

    பாத்திர கடையில் சாமி கும்பிட்டு திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்

    • கேமரா காட்சிகள் வைத்து விசாரணை
    • ரூ.8 ஆயிரத்தை திருடிச்சென்றார்

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென் னாத்தூர் அடுத்த சிறுநாத் தூர் கிராமத்தை சேர்ந்தவர் அக்பர். இவர் அதே பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அக்பர் வழக் கம்போல் கடையில் விற்பனை முடிந்ததும் பணத்தை கல் லாப்பெட்டியில் வைத் துவிட்டு, கடையை பூட் டிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.

    நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்தார். கடையைத் திறந்து உள்ளே சென்றார்.

    அப்போது கல்லாப்பெட்டி திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச் சியடைந்தார். இதையடுத்து கடை யில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவு களை ஆய்வு செய்தார்.

    அதில், மர்ம நபர் ஒரு வர் கடையில் திருடும் காட்சி பதிவாகி இருந் தது. உடனே இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில், போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினர். பின் னர், சிசிடிவி கேமரா பதி வுகளை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் கடை யின் பின்பக்கம் உள்ள தகர சீட்டை கழற்றிவிட்டு கடைக்குள் புகுந்த மர்ம நபர் கல்லாப்பெட் டியை திறந்து அதிலிருந்த ரூ.8 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

    மேலும், அந்த நபர் கடையில் மாட்டி வைத்திருந்த சாமி படத்தை பார்த்து பக்தியுடன் கும்பிட்டார்.

    பின்னர் திருட்டில் விட்டு ஈடுபட்டார். புகாரின்பேரில் கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிசி டிவி கேமரா பதிவுகளை வைத்து கடையில் கைவ ரிசை காட்டிய மர்ம நபரை வலைவீசி தேடி வரு கின்றனர்.

    Next Story
    ×