search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைசி நாள்"

    • தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங் கள் இயங்கி வருகின்றன.
    • இவற்றில் தற்போது 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங் கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங் கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.

    தொழிற்பயிற்சி நிலையங் களில் அரசு ஒதுக்கீட்டிற் கான இடங்களுக்கு, சேர்க்கை விவரங்கள் ஜூலை 10-ந் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் முன் கூட்டியே கடந்த 4-ந் தேதி வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விண்ணப் பதாரர்களும் தங்களது தற்காலிக ஒதுக் கீட்டிற்கான விவரத்தை மேற்கண்ட வெப்சைட்டில் லாக் இன் செய்து அறிந்து கொள்ளலாம்.

    அதன் பிறகு நாமக்கல், கீரம்பூரில் அமைந்துள்ள, அரசினர் தொழிற்பயிற்சி நிலையதற்திற்கு நேரில் சென்று, தற்காலிக ஒதுக் கீட்டு கடிதத்தை பெற்று, அசல் சான்றிதழ் சரிபார்த்து உரிய கட்டணம் செலுத்தி, சேர்க்கையினை உறுதி செய்து கொள்ளலாம்.

    இதற்கான கடைசி தேதி வரும் 12-ந் தேதி (நாளை) ஆகும். மேலும் விவரங் களுக்கு கீரம்பூர் அரசு ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையத்தை, தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

    • பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந்தேதி வெளியிடப்பட்டது.
    • வருகிற ஜூன் மாதம் 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ள துணைத் தேர்வை எழுதலாம்.

    சேலம்:

    பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந்தேதி வெளி யிடப்பட்டது.

    இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வுக்கு செல்லாதவர்கள் வருகிற ஜூன் மாதம் 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ள துணைத் தேர்வை எழுதலாம். இந்த துணை தேர்வை எழுத மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களிலும் கடந்த 11-ந்தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர்.

    தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து வருகின்றனர்.

    இந்த துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

    நாளை விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் உரிய கூடுதல் கட்டணத்துடன் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் இணை யவழியில் விண்ணப்பிக்க லாம்.

    இந்த தகவலை பள்ளிக்க ல்வித்துைற அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

    • போலீஸ் சூப்பிரண்டு தகவல்
    • ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு 5 அழைப்பு பணி மட்டுமே இருக்கும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    குமரி மாவட்ட ஊர்க்கா வல் படையில் 20 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன. ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப வினியோகம், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று, நாளை (16-ந்தேதி) மாலை 5 மணிக்குள், எஸ்.பி. அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பதாரர் 31.10.22 அன்று 18 வயது முடிவு பெற்றவராக இருக்க வேண்டும்.

    50 வயதுக்கு மேல் இருக்க கூடாது. நல்ல உடல் ஆரோக் கியம் உடையவராகவும், நன்னடத்தை மற்றும் நல் லொழுக்கம் உடையவராக வும் இருக்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் நாட்டை சேர்ந்தவராகவும், தமிழ்நாட் டில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். பொது நலத்தொண்டில் ஆர்வம் உடையவராக இருக்க வேண்டும்.

    குறைந்தது மூன்று வரு டம் பணிபுரிய விருப்பம் உள் ளவராக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழி யராகவோ, சுய வேலை பார்ப்பவர்களாகவோ அல்லது ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்களாகவோ இருத்தல் வேண்டும். ஒரு அழைப்புக்கான ஊதியம் ரூ.560 ஆகும். ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு 5 அழைப்பு பணி மட்டுமே இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் 2023-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந் தேதி வெளியானது.
    • வருகிற 26, 27-ந் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் 2023-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந் தேதி வெளியானது. மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பு பணிக்காக 12, 13-ந் தேதி ஆகிய 2 நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்திருந்தார்.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் நேற்று வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம் பற்றிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த முகாம் கடைசி நாளான இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை நடக்கிறது. கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்தனர். வருகிற 26, 27-ந் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கும்பப்பூ பருவத்தின் நெற்பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டமானது விவசாயி களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாத்தி டவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப ங்களை கடைபிடிப்பதையும் ஊக்குவிக்கிறது.

    குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் கும்பப்பூ பருவத்தின் நெற்பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியி டப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்தின்கீழ் கடன்பெறும் விவசாயிகள் வங்கிகளில் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய ப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமா கவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமா கவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

    கும்பப்பூ பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் டிசம்பர் மாதம் 15-ந் தேதி ஆகும். பயிர் காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் அதாவது நெற்பயி ருக்கு ஏக்கருக்கு ரூ.515 மட்டும் காப்பீட்டு கட்டண மாக செலுத்தினால் போது மானது.

    விவசாயிகள் இத்திட்ட த்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

    கும்பப்பூ நெற்பயி ருக்கான இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.34 ஆயிரத்து 351 ஆகும். மேலும் நடப்பாண்டு அறிவிக்கைப்படி வெள்ளம், புயல் போன்ற இயற்கை சேதங்கள் ஏற்பட்டு விட்டால் அதன் பின்னர் பயிர் காப்பீடு செய்ய இய லாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×