ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

போலீஸ் சூப்பிரண்டு தகவல்ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு 5 அழைப்பு பணி மட்டுமே இருக்கும்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

குமரி மாவட்ட ஊர்க்கா வல் படையில் 20 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன. ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப வினியோகம், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று, நாளை (16-ந்தேதி) மாலை 5 மணிக்குள், எஸ்.பி. அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பதாரர் 31.10.22 அன்று 18 வயது முடிவு பெற்றவராக இருக்க வேண்டும்.

50 வயதுக்கு மேல் இருக்க கூடாது. நல்ல உடல் ஆரோக் கியம் உடையவராகவும், நன்னடத்தை மற்றும் நல் லொழுக்கம் உடையவராக வும் இருக்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் நாட்டை சேர்ந்தவராகவும், தமிழ்நாட் டில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். பொது நலத்தொண்டில் ஆர்வம் உடையவராக இருக்க வேண்டும்.

குறைந்தது மூன்று வரு டம் பணிபுரிய விருப்பம் உள் ளவராக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழி யராகவோ, சுய வேலை பார்ப்பவர்களாகவோ அல்லது ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்களாகவோ இருத்தல் வேண்டும். ஒரு அழைப்புக்கான ஊதியம் ரூ.560 ஆகும். ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு 5 அழைப்பு பணி மட்டுமே இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com