search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு நாளை கடைசி நாள்
    X

    நாமக்கல் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு நாளை கடைசி நாள்

    • தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங் கள் இயங்கி வருகின்றன.
    • இவற்றில் தற்போது 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங் கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங் கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.

    தொழிற்பயிற்சி நிலையங் களில் அரசு ஒதுக்கீட்டிற் கான இடங்களுக்கு, சேர்க்கை விவரங்கள் ஜூலை 10-ந் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் முன் கூட்டியே கடந்த 4-ந் தேதி வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விண்ணப் பதாரர்களும் தங்களது தற்காலிக ஒதுக் கீட்டிற்கான விவரத்தை மேற்கண்ட வெப்சைட்டில் லாக் இன் செய்து அறிந்து கொள்ளலாம்.

    அதன் பிறகு நாமக்கல், கீரம்பூரில் அமைந்துள்ள, அரசினர் தொழிற்பயிற்சி நிலையதற்திற்கு நேரில் சென்று, தற்காலிக ஒதுக் கீட்டு கடிதத்தை பெற்று, அசல் சான்றிதழ் சரிபார்த்து உரிய கட்டணம் செலுத்தி, சேர்க்கையினை உறுதி செய்து கொள்ளலாம்.

    இதற்கான கடைசி தேதி வரும் 12-ந் தேதி (நாளை) ஆகும். மேலும் விவரங் களுக்கு கீரம்பூர் அரசு ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையத்தை, தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×