search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயரிங் பட்டதாரி"

    • உடல் தகுதி தேர்வில் தோல்வியால் என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை செய்தார்.
    • விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக மேலூர் அரசு மருத்து–வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள புலி–மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி–யன் மகன் விஜய் (வயது 27). சிவில் என்ஜினீயரிங் பட்ட–தாரியான இவர் படிப்பை முடித்துவிட்டு தகுதியான வேலையை தேடிக்கொண்டு இருந்தார். இதற்காக அவர் பல்வேறு நேர்முகத்தேர்வு–களையும் சந்தித்துள்ளார்.

    ஆனாலும் உரிய வேலை கிடைக்கவில்லை. இதற்கி–டையே அவர் தனது நண்பர் களின் ஆலோசனைப்படி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்பினார்.

    இதற் காக அவர் விண்ணப் பித்து இருந்தார். கடந்த சில மாதங்க–ளுக்கு முன்பு விஜய்க்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது.

    அதற்காக தகுந்த சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கான உடல் தகுதி தேர்வினை தனியார் நிறுவனம் நடத்தி–யுள்ளது. இதில் அவர் தோல்வி அடைந்தார்.

    இத–னால் மிகுந்த மன விரக்திக்கு ஆளான விஜய் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெ–டுத்தார்.

    இதையடுத்து இன்று காலை வீட்டில் இருந்த அவர் தனி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து–கொண்டார். வெளியில் சென்றிருந்த அவரது பெற் றோர் மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறித்துடித்தனர். இதுபற்றி அவர்கள் கீழவளவு போலீ–சாருக்கும் தகவல் தெரிவித்த–னர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மேலூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் மன்னவன், கீழவ–ளவு சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் மற்றும் போலீ–சார் தற்கொலை செய்து–கொண்ட விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக மேலூர் அரசு மருத்து–வமனைக்கு அனுப்பி வைத் தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி–றார்கள்.

    • என்ஜினீயரிங் பட்டதாரியிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாதாங்கோவில் தெருைவ சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது 28), என்ஜினீயரிங் பட்டதாரி. இவரது நண்பர் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலையை சேர்ந்த பிரபுகண்ணன். இவர் மூலமாக அய்யப்பன் என்பவர் கார்த்திக்குமாருக்கு அறிமுகம் ஆனார்.அவர் மின்வாரியத்தில் அரசு வேலை பெற்றுத்தருவதாக கார்த்திக்குமாைர நம்பவைத்து ரூ.20 லட்சம் கேட்டுள்ளார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டில் 2 தவணையாக ரூ.14 லட்சம் கார்த்திக்குமார் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கார்த்திக்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் அய்யப்பன், பிரபுகண்ணன் உள்பட 5 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார்.
    • இதையடுத்து போலீசார் கார்த்தியை கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி, கருப்பகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சக்திவேல், இவரது மனைவி விஜயலட்சுமி (50).

    கடந்த 18-ந்தேதி அன்று சக்திவேல் தனது தோட்டத்து வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மதியம் சுமார் 2 மணியளவில் விஜயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    மதியம் டிவி பார்த்துக் கொண்டிருந்த விஜயலட்சுமி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.

    இச்சம்பவம் குறித்து விஜயலட்சுமி ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஆப்பக்கூடல் போலீசார், அத்தாணி சாலையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்தனர். அப்போது நீல நிற சட்டை அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார் என்பதை கண்டறிந்தனர்.

    தொடர்ந்து போலீசார் அத்தாணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார். அப்போது அவரை பிடித்து விசாரணை செய்தனர்.

    இதில் அவர் கோபிசெட்டிபாளையம், கள்ளிப்பட்டி அருகேயுள்ள வளையபாளையம், கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்தி (29) என்பது தெரியவந்தது. இவர்தான் கருப்பகவுண்டர் புதூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமியிடம் தங்க சங்கிலியை கொள்ளை அடித்து விட்டு தப்பியோடி–யது தெரிந்தது.

    தொடர்ந்து கார்த்திக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பொறியியல் பட்டதாரியான கார்த்திக் திருமணமானவர், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது.

    அப்போது ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து கடனாளி ஆனதால் கம்பெனிக்கு செல்லாமல் கடந்த 3 மாதமாக சுற்றி திரிந்தது தெரிந்தது.

    அப்போது கடன் கொடுத்தவர்கள் கடனைக் கேட்டு நெருக்கடி செய்யவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முடிவு செய்து தனியாக இருந்த பெண்ணி–டம் தங்க செயினை கொள்ளை அடித்து சென்று தெரிய வந்தது.

    மேலும் அந்த செயினை கோபியில் உள்ள தனியார் அடகு கடையில் அடமானம் வைத்து பணத்தை பெற்ற–தும் போலீசார் விசாரணை–யில் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் கார்த்தியை கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி–னர். பின்னர் அவர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×