search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்ஜினீயரிங் பட்டதாரி சிறையில் அடைப்பு
    X

    என்ஜினீயரிங் பட்டதாரி சிறையில் அடைப்பு

    • மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார்.
    • இதையடுத்து போலீசார் கார்த்தியை கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி, கருப்பகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சக்திவேல், இவரது மனைவி விஜயலட்சுமி (50).

    கடந்த 18-ந்தேதி அன்று சக்திவேல் தனது தோட்டத்து வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மதியம் சுமார் 2 மணியளவில் விஜயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    மதியம் டிவி பார்த்துக் கொண்டிருந்த விஜயலட்சுமி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.

    இச்சம்பவம் குறித்து விஜயலட்சுமி ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஆப்பக்கூடல் போலீசார், அத்தாணி சாலையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்தனர். அப்போது நீல நிற சட்டை அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார் என்பதை கண்டறிந்தனர்.

    தொடர்ந்து போலீசார் அத்தாணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார். அப்போது அவரை பிடித்து விசாரணை செய்தனர்.

    இதில் அவர் கோபிசெட்டிபாளையம், கள்ளிப்பட்டி அருகேயுள்ள வளையபாளையம், கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்தி (29) என்பது தெரியவந்தது. இவர்தான் கருப்பகவுண்டர் புதூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமியிடம் தங்க சங்கிலியை கொள்ளை அடித்து விட்டு தப்பியோடி–யது தெரிந்தது.

    தொடர்ந்து கார்த்திக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பொறியியல் பட்டதாரியான கார்த்திக் திருமணமானவர், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது.

    அப்போது ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து கடனாளி ஆனதால் கம்பெனிக்கு செல்லாமல் கடந்த 3 மாதமாக சுற்றி திரிந்தது தெரிந்தது.

    அப்போது கடன் கொடுத்தவர்கள் கடனைக் கேட்டு நெருக்கடி செய்யவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முடிவு செய்து தனியாக இருந்த பெண்ணி–டம் தங்க செயினை கொள்ளை அடித்து சென்று தெரிய வந்தது.

    மேலும் அந்த செயினை கோபியில் உள்ள தனியார் அடகு கடையில் அடமானம் வைத்து பணத்தை பெற்ற–தும் போலீசார் விசாரணை–யில் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் கார்த்தியை கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி–னர். பின்னர் அவர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×