search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்கவுன்ட்டர்"

    • போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றார் ரவுடி விஷ்வா.
    • ரவுடி நடத்திய தாக்குதலில் உதவி ஆய்வாளர் முரளிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், சுங்கவார்சத்திரத்தில் ரவுடி மீது போலீசார் என்கவுண்டர் நடத்தினர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார் சத்திரம் என்ற பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடி விஷ்வா என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

    பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி விஷ்வாவை போலீசார் என்கவுன்ட்டர் செய்தனர்.

    ரவுடி நடத்திய தாக்குதலில் உதவி ஆய்வாளர் முரளிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    • துப்பாக்கிகள், கியாஸ் சிலிண்டர்கள், வெடிகுண்டுகள் பறிமுதல்
    • 20 முதல் 30 கொள்ளையர்கள் பதுங்கி உள்ளதால் தேடுதல் வேட்டை நீடித்து வருகிறது

    பீகார் மாநிலம் சம்பாரன் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் இன்று காலை போலீசார் கொள்ளையர்களை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு கொள்ளையர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மூன்று போலீசார் காயம் அடைந்தனர். காயம் அடைந்த போலீசார் சதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கொள்ளையர்களிடம் இருந்து துப்பாக்கி, கியாஸ் சிலிண்டர், செயல் இழக்காத வெடிகுண்டு, கியாஸ் கட்டர் போன்றவை கைப்பற்றப்பட்டதாக மோடிகாரி எஸ்.பி. கந்தேஷ் குமார் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

    மேலும், ''வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் குழுவிற்கு தகவல் அனுப்பியுள்ளோம். இன்னும் பல குண்டுகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. 25 முதல் 30 கொள்ளையர்கள் அந்தப் பகுதியில் உள்ளனர். அவர்களை தேடிவருகிறோம்.

    உயிரிழந்த கொள்ளையர்களின் உடல்கள் உடல்பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். உள்ளூர் காவல் நிலையங்களுக்கு அவர்களது போட்டோவை அனுப்பி வைத்துள்ளோம். நேபாள எல்லையில் சம்பவம் நடைபெற்றதால் அங்குள்ள காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்துள்ளோம்.

    ×