search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்திர பிரதேசம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1981-ம் ஆண்டு சத்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் பத்து பேர் கொல்லப்பட்டனர்.
    • நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    90 வயது முதியவருக்கு ஃபிரோசாபாத் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. 1981-ம் ஆண்டு பத்து பேரை கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதுதவிர குற்றவாளிக்கு ரூ. 55 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. 42 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கொலை சம்பவம், நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    1981-ம் ஆண்டு சத்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் பத்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. வன்முறை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பத்து பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதன்படி இந்திய தண்டனை சட்டம் 302 மற்றும் 307 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் விசாரணை முதற்கட்டமாக மெயின்பூரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பிறகு ஃபிரோசாபாத் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை ஃபிரோசாபாத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    பத்து பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில், சிறை தண்டனை மேலும் 13 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    • இவ்வாறு செய்த போது ஸ்மார்ட்போனில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு இருக்கிறது.
    • வெடித்த ஸ்மார்ட்போன் பேட்டரியில் ஏதேனும் பிழை இருந்ததா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறும் சம்பவங்கள் மிகவும் அபாயகரமானவை ஆகும். ஸ்மார்ட்போன்கள் வெடிப்பது, தீப்பிடித்து எரிவது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த வரிசையில், உத்திர பிரதேச மாநிலத்தின் படௌன் மாவட்டத்தில் ஏற்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    இதில் ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் படௌன் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்த போது உயிரிழந்தார் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     

    ஸ்மார்ட்போனை சார்ஜ் ஏற்றிக் கொண்டிருக்கும் போதே, சிறுவன் அழைப்பில் பேசியிருக்கிறார். இவ்வாறு செய்த போது ஸ்மார்ட்போனில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு இருக்கிறது. மின்சாரம் சிறுவன் மீது பாய்ந்ததை அடுத்து திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். உடனே சிறுவனின் பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவத்தில் வெடித்துச் சிதறிய ஸ்மார்ட்போன் எந்த பிராண்டு மற்றும் மாடல் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. மாறாக அது பெரிய பிராண்டு ஒன்றின் ஸ்மார்ட்போன் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் சிறுவன் இந்த ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் என இரண்டிற்கும் சேர்த்து ரூ. 20 ஆயிரம் கொடுத்து வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஸ்மார்ட்போன் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஒன்று ஆகும்.

     

    வெடித்துச் சிதறிய ஸ்மார்ட்போனின் பேட்டரியில் ஏதேனும் பிழை ஏற்பட்டு இருந்ததா அல்லது வேறு ஏதேனும் ஹார்டுவேர் கோளாறு ஏற்பட்டு இருந்ததா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும், மின்கசிவு காரணமாகவே சிறுவன் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஸ்மார்ட்போன் பழைய மாடல் என்பதில், அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என தெரிகிறது.

    பாதுகாப்பாக இருப்பது எப்படி?

    ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்த நிலையில், பயன்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும். சார்ஜ் செய்யும் போது பயன்படுத்தினால், ஸ்மார்ட்போன்கள் அதிகளவில் சூடாகலாம். இதன் காரணமாக அவை வெடித்துச் சிதறும் அபாயம் உண்டு.

    பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களில், சாதனம் அதிக சூடாவதை எச்சரிக்கை செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற சமயங்களில் ஐபோன்கள் வெப்பத்தை குறைத்து, சாதாரன நிலைக்கு மாற சற்று நேரம் எடுத்துக் கொள்கின்றன. 

    ×