search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை சிறை"

    • தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

    ஆலந்தூர்:

    ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 64 மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த அக்டோபர் மாதத்தில் 6 முறை அடுத்தடுத்து கைது செய்தது.

    இலங்கை சிறையில் இருந்த அவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

    இதைத்தொடர்ந்த இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து ஒரு மீனவரை தவிர மற்ற 63 மீனவர்களை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது. ஒரு மீனவர் மட்டும், தற்போது இரண்டாவது முறையாக கைதாகி இருப்பதாக கூறி, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை சிறையில் அடைத்தனர்.

    விடுவிக்கப்பட்ட 63 மீனவர்களில் 3 கடந்த 21-ந் தேதி 15 மீனவர்கள், 22 -ந்தேதி 15 மீனவர்கள், 24-ந் தேதி 12 மீனவர்கள் என்று மூன்று தடவையாக 42 மீனவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று கடைசி கட்டமாக மேலும் 21 தமிழக மீனவர்களும் விமானம் பயணிகள் சென்னை திரும்பினர். அதிகாலை 4:15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அரசு சார்பில் ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம், அவர்களுடைய சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் மீனவர்களின் உறவினர்கள் மகிழ்ச்ச அடைந்து உள்ளனர்.

    • இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சிறுவன் உள்பட 15 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது.

    அதனை தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சிறுவன் உள்பட 15 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கான நீதிமன்ற காவல் இன்று முடிவ டைந்தது. இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, 15 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் விடுவிக்கப்பட்ட 15 பேரும் மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடிக்க வந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதி, படகின் உரிமையாளர் 6 மாதத்திற்குள் கோர்ட்டில் ஆஜராகுமாறு தெரிவித்தார்.

    விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ஒரு சில தினங்களில் நாடு திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளனர்.

    ×