search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்எஸ்எஸ் ஊர்வலம்"

    • அனைத்து இடங்களிலும் மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் ஊர்வலம் தொடங்குகிறது.
    • ஊர்வலம் புறப்படும் இடங்களில் இருந்து குறைந்தபட்சம் 3 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுத்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்கினார்கள். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் 53 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடக்கிறது. இதில் வட தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வாழப்பாடி, நாமக்கல், ஈரோடு, கோபி, கள்ளக்குறிச்சி, திண்டிவனம், கடலூர், சென்னை உள்பட 31 இடங்களில் நடக்கிறது.

    தென் தமிழ்நாட்டில் கருங்கல் தக்கலை, செங்கோட்டை, திசையன்விளை உடன்குடி, கோவில்பட்டி, ராஜபாளையம், மதுரை மேலூர், கம்பம், கொடைக்கானல், மதுரை, பரமக்குடி, காரைக்குடி, அறந்தாங்கி, திருமயம், நாகப்பட்டினம், மன்னார்குடி, பேராவூரணி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, ஜெயங்கொண்டம், துறையூர், திருச்சி, கரூர், மடத்துக்குளம், திருப்பூர், கோத்தகிரி, எருமாடு, கோவில்பாளையம் ஆகிய 22 இடங்களில் நடக்கிறது.

    சென்னையில் கொரட்டூரில் உள்ள டாக்டர் நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் காலேஜ், மணலி, குரோம்பேட்டை விவேகானந்தா பள்ளி ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. அனைத்து இடங்களிலும் மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் ஊர்வலம் தொடங்குகிறது. ஊர்வலத்தின் முன்பு ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் படம் எடுத்துச் செல்லப்படும். அதையடுத்து பேன்ட் வாத்திய இசையும் அதன் பிறகு தொண்டர்கள் சீருடையுடன் அணிவகுப்பார்கள்.

    அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஏற்ப பேன்ட் இசைக்கும். ஊர்வலம் புறப்படும் இடங்களில் இருந்து குறைந்தபட்சம் 3 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும். ஊர்வலம் நிறைவடைந்ததும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    சேலத்தில் இன்று மாலை 4 மணியளவில் ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வலம் மரவனேரி மாதவம் வளாகத்தில் இருந்து நடக்கிறது. இந்த ஊர்வலம் அம்பேத்கார் சிலை வழியாக சங்கர் நகர், தமிழ்சங்கம் சாலை வழியாக மீண்டும் மரவனேரி மாதவம் வளாகத்திற்கு வந்து அடைகிறது.

    பின்னர் மரவனேரி பிரதான சாலையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி பஸ்நிலையம், சேலம் சாலை சந்திப்பு, பாவடி வீதி, கிழக்கு ரதவீதி சந்திப்பு, பூக்கடை சந்திப்பு, ஆறுமுகசாமி கோவில், வன்னியர் தெரு, திருச்செங்கோடு நகர காவல் நிலையம், வேலூர் சாலை, சங்ககிரி சாலை வழியாக 2.8 கி.மீ. தூரம் வந்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைகிறது. அங்கு பொதுக்கூட்டம் நடக்கிறது.

    • ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை முன்னிட்டு சேலம் மாநகர துணை கமிஷனர்கள் தலைமையில் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சேலம்:

    சேலத்தில் இன்று ஆர்.எஸ்.எஸ். சார்பில் மாலை 4 மணியளவில் ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வலம் மரவனேரி மாதவம் வளாகத்தில் இருந்து நடக்கிறது. இந்த ஊர்வலம் அம்பேத்கார் சிலை வழியாக சங்கர் நகர், தமிழ்சங்கம் சாலை வழியாக மீண்டும் மரவனேரி மாதவம் வளாகத்திற்கு வந்து அடைகிறது.

    பின்னர் மரவனேரி பிரதான சாலையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். மாநில செயற்குழு உறுப்பினர் விவேகானந்தன் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் செந்தில்குமார் செய்து வருகிறார்.

    ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை முன்னிட்டு சேலம் மாநகர துணை கமிஷனர்கள் மதிவாணன், பிருந்தா ஆகியோர் தலைமையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    இதே போல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலும் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடக்கிறது. திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி பஸ் நிலையம், சேலம் சாலை சந்திப்பு, பாவடி வீதி, கிழக்கு ரதவீதி சந்திப்பு, பூக்கடை சந்திப்பு, ஆறுமுகசாமி கோவில், வன்னியர் தெரு, திருச்செங்கோடு நகர காவல் நிலையம், வேலூர் சாலை, சங்ககிரி சாலை வழியாக 2.8 கி.மீ. தூரம் வந்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைகிறது.

    இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆர்.எஸ்.எஸ். பேரணியை முன்னிட்டு 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் இன்று மாலை நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் தீவிர வெடிகுண்டு சோதனை நடந்து வருகிறது.

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் தமிழ்நாடுஅரசின் மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதோடு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

    இதை தொடர்ந்து விழுப்புரத்தில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு அந்த அமைப்பினர் ஏற்பாடு செய்தனர். அதன்படி விழுப்புரம் நகரில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடக்கிறது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் 4 முனை சந்திப்பு, சென்னை நெடுஞ்சாலை, பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம், காமராஜர் வீதி, திரு.வி.க. வீதி, காந்தி சிலை, நேரு சாலை வழியாக பழைய பஸ் நிலையத்தில் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடக்கிறது.

    விழுப்புரத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெறுவதையொட்டி இந்த ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெறவும், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதனிடையே நேற்று மாலை முதல் நகரின் முக்கிய இடங்களான பழைய பஸ்நிலையம், புதிய பஸ் நிலையம், கடை வீதி, பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் ஊர்வலம் செல்லும் சாலைகள், பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் ராணி மூலம் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நெல்லை மாவட்டத்தில் அம்பை பகுதியில் அங்குள்ள ஒரு தியேட்டரில் தொடங்கி பல்வேறு பஜார் தெருக்கள் வழியாக ஊர்வலத்திற்கு அவர்கள் அனுமதி கேட்டனர்.
    • தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை சென்னை உயர்நீதிமன்றம் சங்கரன்கோவிலில் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்கியது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் சமுதாய நல்லிணக்கத்திற்காக அணிவகுப்பு ஊர்வலம் நாளை நடைபெறுவதாக இருந்தது.

    நெல்லை மாவட்டத்தில் அம்பை பகுதியில் அங்குள்ள ஒரு தியேட்டரில் தொடங்கி பல்வேறு பஜார் தெருக்கள் வழியாக ஊர்வலத்திற்கு அவர்கள் அனுமதி கேட்டனர். ஆனால் பிரச்சினை ஏற்படாத வண்ணம் அம்பையில் ஏதேனும் விளையாட்டு அரங்கம் அல்லது திருமண மண்டபங்களில் ஊர்வலத்தை நடத்தி கொள்ள வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார்.

    ஆனால் இதுவரை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அதற்கான இடத்தை தேர்வு செய்து தெரிவிக்கவில்லை. இதனால் நெல்லையில் ஊர்வலம் நடத்த வாய்ப்பில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வி.வி.டி. சிக்னல் அருகே காமராஜ் கல்லூரியில் இருந்து ஊர்வலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அங்கும் ஊர்வலத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அனுமதி மறுத்தார்.

    மாற்று இடத்தில் அங்குள்ள உள்விளையாட்டு அரங்கில் நடத்தி கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அதற்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் அங்கும் நாளை ஊர்வலம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை சென்னை உயர்நீதிமன்றம் சங்கரன்கோவிலில் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்கியது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சங்கரன்கோவில் பகுதியில் திறந்த வெளியில் ஊர்வலத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அனுமதி மறுத்தார். இதனால் அங்கு நடைபெற இருந்து ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    • அசாதாரண சூழல் நிலவுவதாக கூறி தமிழக அரசு இரு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதித்தது.
    • ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதிக்க மாட்டோம் என திருமாவளவன் கூறினார்

    சென்னை:

    தமிழகத்தில் காந்தி ஜெயந்தி தினத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலமும், விடுதலை சிறுத்தைகள் சார்பில் மத நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சிக்கும் அனுமதி கோரப்பட்டது.

    ஆர்.எஸ்.எஸ். சார்பில் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் பி.எப்.ஐ. தடை செய்யப்பட்டிருப்பதால் அசாதாரண சூழல் நிலவுவதாக கூறி தமிழக அரசு இரு நிகழ்ச்சிகளுக்குமே தடை விதித்தது.

    ஆர்.எஸ்.எஸ். தரப்பில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந்தேதி ஊர்வலம் நடத்தவும் அதற்கான அனுமதியை இந்த மாதம் 30-ந்தேதிக்குள் வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகளின் மனித சங்கிலி நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்றார்.

    இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கூறும்போது, யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு கோர்ட்டு அனுமதித்துள்ளது. எனவே திட்டமிட்டபடி அணிவகுப்பு நடைபெறும் என்றனர்.

    தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அணிவகுப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. அந்த இடங்களில் ஊர்வலம் செல்லும் பாதை, கடக்க வேண்டிய நேரம் ஆகியவற்றை பார்வையிட்டு முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    • வாதங்களைக் கேட்ட நீதிபதி, திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
    • அணிவகுப்புக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்சனை.

    சென்னை:

    தமிழகத்தில் அக்டோபர் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை ஐகோர்ட்டு கடந்த 22-ந் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தது.

    இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் தரப்பில் ஆஜரான வக்கீல், மத நல்லிணக்கம், சட்டம்- ஒழுங்கு பிரச்சனை சம்பந்தப்பட்டுள்ளதால் மறுஆய்வு கோர உரிமை உள்ளது. அணிவகுப்புக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்சனை. அதை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க வேண்டும். மாறாக குற்றவியல் வழக்காக விசாரணைக்கு எடுத்தது உகந்ததல்ல. அதனால் அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.

    இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

    • திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் அதற்கு அனுமதி மறுத்து மாவட்ட காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
    • ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை போன்றே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கும் காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

    பழனி:

    தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அக்டோபர் 2-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் செப்டம்பர் 28-ந் தேதிக்குள் அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

    இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் திராவிடர் கழகம் சார்பில் அக்டோபர் 2-ந் தேதி சமூக நீதி பேரணி நடைபெறும் என்றும் தங்களுக்கு அக்டோபர் 2-ந் தேதி இந்த பேரணியை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அந்தந்த மாவட்ட எஸ்.பி. அலுவலகங்களில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் அதற்கு அனுமதி மறுத்து மாவட்ட காவல் துறை உத்தரவிட்டுள்ளது. பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அக்டோபர் 2-ந் தேதி பொதுக்கூட்டம், போராட்டம், பேரணி என்ற எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை போன்றே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கும் காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

    • ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்து ஈரோடு மாவட்ட போலீசார் தடை விதித்து உள்ளனர்.
    • ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி வருகிற 2-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்து ஈரோடு மாவட்ட போலீசார் தடை விதித்து உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் சோதனை சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • தமிழகம் முழுவதும் 50 இடங்களில் வருகிற 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
    • தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ். சார்பில் அந்த அமைப்பின் சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆழ்வார் என்பவர் மனு அளித்திருந்தார்.

    சங்கரன்கோவில்:

    தமிழகம் முழுவதும் 50 இடங்களில் வருகிற 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு இடத்தில் ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ். சார்பில் அந்த அமைப்பின் சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆழ்வார் என்பவர் மனு அளித்திருந்தார்.

    அந்த மனு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜிக்கு பரிசீலனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறி அனுமதிக்கான மனுவை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நிராகரித்தார். இதையடுத்து வருகிற 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் கோரப்பட்டிருந்த ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    • ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மனு அளித்தனர்.
    • சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு கருதி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

    கடலூர்:

    இந்திய சுதந்திர தினத்தில் 75-வது ஆண்டு விழா, அம்பேத்கார் நூற்றாண்டு விழா, விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு அக்டோபர் 2-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம் நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டில் அனுமதிகோரி இருந்தனர். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மனு அளித்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் திருப்பாதிரிபுலியூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு அந்த பகுதியில் உள்ளவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இந்த மனுவும் பரிசீலனை செய்யப்படும் நிலையில் இருந்தது.

    இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கோரியிருந்த ஊர்வலத்துக்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு கருதி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இதுகுறித்து மனு அளித்தவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    ×