search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரங்கேற்றம்"

    • உச்சி மாகாளியம்மன் கோயில் முன்பாக பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்று விழா நடந்தது.
    • 16வது நாளில் அரங்கேற்று விழா நடந்தது இதில் குழந்தைகள் மிக சிறப்பாகவும் உற்சகத்துடனும் கும்மியடித்தனர்.

    உடுமலை:

    உடுமலை வட்டம் அந்தியூர் பஞ்சாயத்து சடைய கவுண்டன் புதூரில், உச்சி மாகாளியம்மன் கோயில் முன்பாக பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்று விழா நடந்தது. இதில் சடைய கவுண்டன் புதூர் மற்றும் ஜீவா நகரை சார்ந்த 46 ஆண்மற்றும்பெண் குழந்தைகள் கலந்து கொண்டனர். இவர்கள் சக்தி கலைக்குழு பவளக்கொடி கும்மியாட்ட பயிற்சியாளர் மகாலிங்கத்திடம் 15 நாட்கள் பயிற்சி பெற்றனர். 16வது நாளில் அரங்கேற்று விழா நடந்தது இதில் குழந்தைகள் மிக சிறப்பாகவும் உற்சகத்துடனும் கும்மியடித்தனர். இந்த நிகழ்ச்சியை ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்து நடத்தினர்.

    • கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடைகளை அணிந்து கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 50க்கும் மேற்பட்ட தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்து கூப்பிடு பிள்ளையார் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோவிலில், கூப்பிடு பிள்ளையார் கலை வள்ளி கும்மி ஆட்டம் குழுவின் 5-வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடைகளை அணிந்து சிறுமிகள்,பெண்கள் ஆடிய வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கும்மியாட்ட ஆசிரியர்கள் பெரியசாமி, கலையரசி, முருகன் -வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்களும் பாடி கும்மி ஆட்ட குழுவினரை உற்சாகப்படுத்தினர்.கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிச்சாமி, கூப்பிடு பிள்ளையார் அறக்கட்டளை நிர்வாகி சின்னச்சாமி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கும்மி ஆட்டத்தை கண்டு களித்தனர்.முன்னதாக 50க்கும் மேற்பட்ட தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்து கூப்பிடு பிள்ளையார் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    ×