search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரங்கநாதர் கோவில்"

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • 900 வருடம் பழமையானது

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த திருமால் பாடி கிராமத்தில் கி.பி.1136ல் பராந்தக சோழன் மகன் விக்கிரம சோழனால் கட்டப்பட்ட ஸ்ரீ அரங்கநாதர் கோவில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சிதிலமடைந்த நிலையில் இருந்தது.

    அந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல முறை அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்தவித பணிகள் நடைபெற வில்லை.

    திருமால் பாடி கிராம பக்தர்கள் மீண்டும் கடந்த 2020-21-ம் ஆண்டு சட்டமன்ற பேரவை அறிவிப்பு மூலம் திருப்பணி செய்திட ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை எந்த வித நிதியும் வரவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்கள்.

    மேலும் 900 வருடம் பழமையான கோவில் என்பதால் கோவில் புனரமைப்பு பணி செய்யப்படாமல் கோவில் கூரை மழையால் ஒழுகும் அவலம் உள்ளது.

    மேலும் பல இடங்களில் பழைய கற்கட்டிடம் பாரம் தாங்காமல் விரிசல் விட்டு ஆங்காங்கே இரும்பு பைப் கொண்டு முட்டுகளும், சிமெண்ட் செங்கல்கள் கொண்டு தூண்களும் அமைக்கப்பட்டு மேல்கூரை தாங்கி பிடிக்க பட்டுள்ளது.

    கோவில் பக்கவாட்டில் கோவில் கூரை பாரம் தாங்காமல் சிறிது இறக்கமாக காணப்படுகிறது.

    உடனடியாக தற்போது அரசு நடவடிக்கை எடுத்து பழங்கால கோவிலை காக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

    • அரங்கநாதர் கோவில் தேர் திருவிழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது.
    • கடந்த 28ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மக திருத்தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோ ட்டம் நாளை மறுநா ள்(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.இதில் பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்து போலீசார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    அதன்படி கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனங்கள் பெட்டத்தாபுரம், திம்ம ம்பாளையம், மங்களக்கரை புதூர், டீச்சர்ஸ் காலனி வழியாக காந்திநகர் செல்ல வேண்டும்.

    அதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் வாகனங்கள் காந்திநகர் வழியாக தொட்டிபாளையம் பெள்ளாதி, கண்ணார்பா ளையம் வழியாக மத்தம்பா ளையம் செல்லும்.

    தேர் திருவிழா நடைபெறும் 6 மற்றும் பந்த சேவை நிகழ்வு நடைபெறும் 7-ந் தேதி ஆகிய இரு தினங்களிலம் இந்த போக்குவரத்து மாற்றமானது இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் கோவை-மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம்-கோவை செல்லும் வாக னங்கள் இதனை பின்பற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • மாசி மாதத்தில் மாசி மக தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • தேரை சுற்றிலும் இருந்த தகரங்கள் மற்றும் கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாக காரமடை அரங்க நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மாசி மக தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 வருடங்களாக கொரோனாவால் தேர்த்திருவிழாவில் பக்தர்கள் கட்டுப்பா–டுகளுடன் அனுமதி–க்கப்பட்டு வந்தனர்.இந்த ஆண்டு மாசி தேர்த்திருவிழா வருகிற 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதனையொட்டி நாள்தோறும் அரங்கநாதர் பல்வேறு உற்சவ வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.இதை தொடர்ந்து மார்ச் மாதம் 4-ந் தேதி ஸ்ரீபெட்டதெம்மன் அழைப்பு, 5-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

    பின்னர் முக்கிய விழாவான திருத் தேரோட்டம் மார்ச் 6-ந் தேதி மாலை வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

    தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழமை வாய்ந்த தேரை சுற்றிலும் இருந்த தகரங்கள் மற்றும் கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது தேர் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    ×