search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யனார் கோவில்"

    • அய்யனார் கோவிலில் துணிகர கொள்ளை நடந்தது.
    • கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் சாமி கோவில் உள்ளது. இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி சாத்தங்குடியைச் சேர்ந்த பாண்டி(வயது 57) பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் சாமி சன்னதியின் கதவை உடைத்து உள்ளே இருந்த பாரம்பரியான மரப் பெட் டியில் வைக்கப்பட்டிருந்த 6 பித்தளை மணி, பூர்ண கலா கவசம், அய்யனார் சாமி கவசம் மற்றும் பூஜை பொரு ட்களை திருடிக் கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ. 21 ஆயிரம் ஆகும்.

    மறுநாள் கோவிலை திறக்க வந்த பூசாரி சன்னதி கதவு உடைக்கப்பட்டு பொ ருட்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலில் கைவரிசை காட் டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை சூரக்குடி நகரத்தார்கள் செய்தி ருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடியில் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் சமஸ்தானம் தேவஸ் தானத்துக்குட்பட்ட செகுட்டு அய்யனார், சிறை மீட்ட அய்யனார், படைத் தலைவி அம்மன் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

    விழா கடந்த ஜூன் 23-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக சுமார் 30-க்கும் மேற்பட்ட குயவர்கள் புரவிகள் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பிரம்மாண்ட 2 அரண்மனை புரவிகள் உட்பட 282 புரவிகள் சாமி யாட்டத்துடன் சூரக்குடி புரவி பொட்டலுக்கு கொண்டு வரப்பட்டு வழிபாடு நடந்தது.

    நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்று ஊர் அம்பலகாரர்கள் முன்னிலையில் 282 புரவிகள் ஊர்வலம் நடந்தது.

    இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்று சாமி தரிசனம் பெற்றார். இதில் நகரத்தார் தலைவர் மாதவன் கணே சன், சிவசுப்பிரமணியன், வெள்ளையப்பன், வெங்கடாசலம் காந்திமதி சிவகுமார், ஆனந்த கிருஷ்ணன், தொழிலதிபர் தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை சூரக்குடி நகரத்தார்கள் செய்தி ருந்தனர்.

    • ராமநாதபுரம் அருகே உள்ள அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • முன்னதாக கும்பாபிஷேகம் முன்னாள் மாவட்ட சேர்மன் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரராஜ மூர்த்தி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கும்பாபிஷேகம் முன்னாள் மாவட்ட சேர்மன் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. தர்மர் எம்.பி., தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை ல் வகித்தனர். நிர்வாகிகள் செல்லமணி, சுந்தரமுர்த்தி , கனேசன், முத்துராமலிங்கம், கால்நடை மருத்துவர் சுந்தர முர்த்தி, தமிழ் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா நடந்தது.
    • இன்று காலை சிலைகளை எடுத்து கோவிலை சென்றடைந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தில் உள்ள அய்யனார், ஊர்க்காவலன், கொடிப்புலி கருப்புச்சாமி கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது. இந்த விழா 17 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மார்ச் 23-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கிராமத்தினர் குலவேளாளர்க ளிடம் சிலைகள் செய்வதற்கான பிடி மண் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து வேளாளர் வீட்டில் இருந்து சுவாமி, குதிரை சிலைகளை எடுத்து மேள தாளம் முழங்க வானவேடிக்கையுடன் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து மந்தையில் வைத்தனர். இரவு கலை நிகழ்ச்சியும் நடந்தது. இன்று காலை சிலைகளை எடுத்து கோவிலை சென்றடைந்தனர். பின்னர் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டாண்மை, கட்டையன், வாராமிலி கூட்டத்தினர் செய்திருந்தனர்.

    • சோழவந்தான் அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா நடந்தது.
    • இன்று காலை சிலைகளை எடுத்து கோவிலை சென்றடைந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தில் உள்ள அய்யனார், ஊர்க்காவலன், கொடிப்புலி கருப்புச்சாமி கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது. இந்த விழா 17 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மார்ச் 23-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கிராமத்தினர் குலவேளாளர்க ளிடம் சிலைகள் செய்வதற்கான பிடி மண் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து வேளாளர் வீட்டில் இருந்து சுவாமி, குதிரை சிலைகளை எடுத்து மேள தாளம் முழங்க வானவேடிக்கையுடன் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து மந்தையில் வைத்தனர். இரவு கலை நிகழ்ச்சியும் நடந்தது. இன்று காலை சிலைகளை எடுத்து கோவிலை சென்றடைந்தனர். பின்னர் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டாண்மை, கட்டையன், வாராமிலி கூட்டத்தினர் செய்திருந்தனர்.

    • சோழவந்தான் அருகே அய்யனார் கோவில் கோபுர கலசங்கள் திருடு போயின.
    • இதுகுறித்து காடுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூவலிங்க அய்யனார் கோவில் உள்ளது. விசேஷ நாட்களில் இங்கு அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    அய்யனார் கோவிலில் பிச்சைக்கண்ணு என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு பூசாரி பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி வீட்டுக்கு சென்று விட்டார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து விநாயகர் சன்னதி விமான கோபுரத்தில் உள்ள கலசங்களை திருடி சென்றனர். மறுநாள் காலை கோவிலுக்கு வந்த பிச்சை கண்ணு கலசங்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் காடுப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குபேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கோபுர கலசத்தை திருடியது இரிடியம் விற்கும் கும்பலா? எனவும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    • சிவகங்கை அருகே உள்ள அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது.
    • இந்த விழாவில் நாளை இரவு கோழி பூஜை நடைபெற உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி கிராமத்தில் வேம்புடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் புரவி எடுப்பு விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

    தினமும் அய்யனார், காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது.

    நேற்று இரவு தேவகோட்டை குலாலர் தெருவில் உள்ள மகமாயியம்மன் கோவிலில் இருந்து 70-க்கும் மேற்பட்ட மண்ணால் ஆன குதிரை மற்றும் காளைகளை தோளில் சுமந்து சுமார் 4 கி.மீ தூரம் ஒத்தக்கடை, ஆற்றுப்பாலம், தளக்காவயல் விலக்கு வழியாக வேம்புடைய அய்யனார் கோவில் எதிரே உள்ள திடலில் பழங்கால முறைப்படி பனை ஓலையால் அமைக்கப்பட்ட பந்தலில் கிராம மக்கள் வைத்தனர்.

    குழந்தை வேண்டியும், வீட்டுக்குள் பாம்பு, ஓணான் வராமல் இருக்க மணலால் செய்த ஆண், பெண், மிதளை பிள்ளை, பாம்பு, தேள், ஓணான் போன்றவற்றை நேர்த்திக்கடனாக வேம்புடைய அய்யனாருக்கு செலுத்தினர்.

    விழாவில் நல்லாங்குடி, வெளிமுத்தி, பாப்பான்கோட்டை, இரவுசேரி, தளக்காவயல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நாளை இரவு கோழி பூஜை நடைபெற உள்ளது.

    • பங்குனி உத்திர திருவிழா 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • விழாவின் 6-ம் நாளான 31-ந்தேதி அன்னதானம் நடக்கிறது.

    குரும்பூர்:

    குரும்பூர் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் (26-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    முன்னதாக காலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமமும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடக்கிறது. இதையொட்டி காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு புஷ்ப அலங்கார உச்சிகால சிறப்பு பூஜையும், இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலில் வலம் வருதலும் நடக்கிறது.

    இதனைத்தொடர்ந்து விழாவின் 6-ம் நாளான 31-ந்தேதி பகல் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 10-ம் நாளான வருகிற

    (4-ந்தேதி) பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

    இதையொட்டி காலை 8.30 மணிக்கு ஹோமமும், 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு மேல் பங்குனி உத்திர கும்பாபிஷேகமும் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு சுவாமி அம்பாள்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    திருவிழாவின் 10 நாட்களும் இரவு 8 மணிக்கு சிறப்பு கலைநிகழ்ச்சிகளும், இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலில் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ஏற்பாடுகளை நிர்வாகிகள் ஆத்திக்கண் நாடார், அகோபால் நாடார், உதயகுமார் நாடார், தினேஷ் நாடார், செந்தில் நாடார், நாராயணராம் நாடார், கண்ணன் நாடார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • மேலூர் அருகே கொட்டக்குடி அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
    • இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை குதிரை பொட்டலில் இருந்து குதிரைகள் தூக்கிவரப்பட்டு மந்தையில் வைக்கப்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கொட்டக்குடி. இங்கு பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலின் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதற்காக கடந்த ஒரு வாரமாக சாமி ஆட்டம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை குதிரை பொட்டலில் இருந்து குதிரைகள் தூக்கிவரப்பட்டு மந்தையில் வைக்கப்பட்டது. பின் நேற்று மாலை மந்தையில் இருந்து கற்குடைய அய்யனார் கோவிலுக்கு தூக்கிச் செல்லப்பட்டது.

    இதில் 6 கரைக்குதிரைகள் மற்றும் நேர்த்திக்கடன் குதிரைகளும் தூக்கிச் செல்லப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த இந்த திருவிழா இந்த ஆண்டு விமரிசையாக நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு கொட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தென்மாபட்டு ஆதினமிளகி அய்யனார் கோவிலில் சேங்காய் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தென்மாபட்டில் ஆதின மிளகி அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கடந்த 1-ந் தேதி பிடிமண் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 2-ம் திருவிழாவாக நேற்று (8-ந் தேதி) சேங்காய் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.

    தென்மாபட்டு சவுக்கையில் இருந்து அக்கசாலை விநாயகரை தரிசனம் செய்து, அதனைத் தொடர்ந்து ஆதின மிளகி அய்யனார் கோவிலில் பூஜை செய்து கிராமத்தினர் முன்னிலையில் சேங்காய் ஊரணியில் சேங்காய் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. வருகிற 15-ந் தேதி புதுப்பட்டியில் இருந்து தென்மாப்பட்டுக்கு புரவி எடுத்து வரும் நிகழ்ச்சியும், 16-ந் தேதி புரவிகளை அய்யனார் கோவில் வாசலில் கொண்டு வரும் நிகழ்ச்சியும், 17-ந் தேதி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    ×