search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Senkai"

    • தென்மாபட்டு ஆதினமிளகி அய்யனார் கோவிலில் சேங்காய் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தென்மாபட்டில் ஆதின மிளகி அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கடந்த 1-ந் தேதி பிடிமண் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 2-ம் திருவிழாவாக நேற்று (8-ந் தேதி) சேங்காய் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.

    தென்மாபட்டு சவுக்கையில் இருந்து அக்கசாலை விநாயகரை தரிசனம் செய்து, அதனைத் தொடர்ந்து ஆதின மிளகி அய்யனார் கோவிலில் பூஜை செய்து கிராமத்தினர் முன்னிலையில் சேங்காய் ஊரணியில் சேங்காய் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. வருகிற 15-ந் தேதி புதுப்பட்டியில் இருந்து தென்மாப்பட்டுக்கு புரவி எடுத்து வரும் நிகழ்ச்சியும், 16-ந் தேதி புரவிகளை அய்யனார் கோவில் வாசலில் கொண்டு வரும் நிகழ்ச்சியும், 17-ந் தேதி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    ×