search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் தா.மோ.அன்பரசன்"

    • தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
    • சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

    சென்னை:

    போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43,051 மையங்களில் நடைபெறும்.

    இந்த மையங்களில் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

    சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    இந்நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை தொடங்கியது.

    பல்லாவரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.

    • அமைச்சர் தா.மோ.அன்பரசன் விருதை பெற்றுக்கொண்டார்.
    • சிறந்த மாநகராட்சிகள் பிரிவில் மதுரை 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    காந்திநகர்:

    பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தை (நகர்ப்புறம்) சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பயனாளிகளை அங்கீகரிப்பதற்காக பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா விருதுகள் வழங்கப்பட்டன.

    இதில் தேசிய அளவில் 3-வது இடத்தைப் பிடித்த தமிழகத்திற்கு பிரதமர் மோடி விருது வழங்கினார். இந்த விருதை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற நகர்ப்புற வீட்டு வசதி மாநாட்டில், பிரதமர் மோடியிடம் இருந்து தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்றுக்கொண்டார்.

    'அனைவருக்கும் வீட்டு வசதி' திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் பிரிவில் தமிழ்நாடு 3-வது இடத்தையும், சிறந்த மாநகராட்சிகள் பிரிவில் மதுரை 3-வது இடத்தையும், சிறந்த பேரூராட்சிகள் பிரிவில் கோவை மாவட்டம், பெரிய நெகமம் பேரூராட்சி 5-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    • தீனதயாள் உபாத்தியாய கிராம ஜோதி யோஜான திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சீரான மின் விநியோகம்
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம் 26,230 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்டரங்கில், நமது பாரத நாட்டின் 75-வது சுதந்திரதின அமுத பெருவிழாவினை முன்னிட்டு, "ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி @ 2047" நிகழ்ச்சியினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

    இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுத பெருவிழாவினை முன்னிட்டு இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறோம்.. இப்பெரு விழாவினை முன்னிட்டு ஜூலை 25 முதல் 30 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் @ 2047 என்ற நிகழ்ச்சி எல்லா பகுதியிலும் கொண்டாடி வருகிறது. தீனதயாள் உபாத்தியாய கிராம ஜோதி யோஜான (Deen Dayal Upadhyaya Gram Jyoti Yojana Scheme) திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்க பயன்பெறும் திட்டமாகும்.

    மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மற்றும் இதர பயன்பாட்டிற்கும் தடையில்லா மின்சாரம் வழங்கும் இத்திட்டத்தின் கீழ் கிராமத்தில் மின் விநியோக பயன்பாட்டிற்காக, நமது காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.34.83 கோடி மதிப்பில் 2 புதிய 33 KV துணை மின் நிலையங்கள் காஞ்சிபுரம் மற்றும் திருமுக்கூடல் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 26,230 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். மேலும், இதே திட்டத்தின் மூலம் மாகரல், பெருநகர், பரந்தூர் மற்றும் நெல்வாய் ஆகிய 4 துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 36,333 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.

    ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின் (Integrated Power Development Scheme) கீழ் உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில் 2 புதிய 33 KV துணை மின் நிலையங்கள் ரூ.30.46 கோடி மதிப்பில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் 43,081 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் மா.சுதாகர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, கூடுதல் தலைமை பொறியாளர் கி.சண்முகம், மாவட்ட நோடல் அலுவலர் அகஸ்டின் ரேமண்ட் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×