search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபராத தொகை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயலலிதா இறந்து 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவருக்கான அவரது தொகையை யாருமே செலுத்த முன்வராததால் கோர்ட்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
    • ஜெயலலிதாவின் நகைகள் வருகிற மார்ச் 6 மற்றும் 7-ந் தேதிகளில் தமிழகம் கொண்டு வரப்பட்டு உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட்டு அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராத தொகையை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும் தலா ரூ.10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது.

    இதனை எதிர்த்து ஜெயலலிதா உட்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் 4 பேரையும் நிரபராதிகள் என விடுவித்து தீர்ப்பளித்தது.

    அதைத்தொடர்ந்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதன் மீதான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா உயிரிழந்தார். சுப்ரீம் கோர்ட்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.

    அதே நேரத்தில் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுவதாக கூறி விட்டு செலுத்த வேண்டிய அபராத தொகையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்தது.

    இந்த நிலையில் ஜெயலலிதா இறந்து 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவருக்கான அவரது தொகையை யாருமே செலுத்த முன்வராததால் கோர்ட்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    அதன்படி ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவரது சொத்துக்களை விற்று அபராதம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 28 கிலோ நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், வைர நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் அப்போது கைப்பற்றியிருந்தனர். இவைகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.

    அந்த நகைகளை ஏலம் விட்டு அவரது தொகையில் ஒரு பகுதியை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி ஜெயலலிதாவின் நகைகள் வருகிற மார்ச் 6 மற்றும் 7-ந் தேதிகளில் தமிழகம் கொண்டு வரப்பட்டு உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    அதனை அரசு கருவூலத்தில் சேர்த்து பின்னர் நகையின் மதிப்பு கணக்கிடப்பட்டு தற்போதைய மதிப்பின்படி ஏலத்தில் விட்டு பணம் திரட்டப்படும் இந்த நகைகள் மட்டும் 40 கோடி ரூபாய் வரை ஏலம் போகும்.

    அதனை வைத்து அபராத தொகையை செலுத்திவிட்டு மீதமுள்ள ரூ.60 கோடிக்கு அசையா சொத்துக்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    இதை தவிர வழக்கு கட்டணமாக 5 கோடி ரூபாயை கர்நாடக அரசுக்கும் வழங்க வேண்டியுள்ளது. இதற்கும் ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு அதன் மூலமாகவே முழுமையாக கட்டப்படும் என்று தெரிகிறது.

    • ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.
    • நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    பல்லடம் :

    திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள்,20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதில் விசைத்தறிகளுக்கும் மின் கட்டண உயர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதனை ஏற்று விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது.

    இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விசைத்தறியாளர்கள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பாராட்டு விழா நடத்தினர். இந்த நிலையில் விசைத்தறியாளர்களுக்கு நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை அபராத தொகையுடன் சேர்த்து 6 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என மின்வாரியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை சங்கோதி பாளையம் பகுதிகளில் உள்ள விசைத்தறியாளர்கள், விசைத்தறிகளுக்கு கூடுதலாக கணக்கீடு செய்த மின் கட்டணத்தை ரத்து செய்யக் கோரியும், நிலுவையில் உள்ள மின் கட்டணத்துக்கு அபராத வட்டியை ரத்து செய்யக் கோரியும் காரணம்பேட்டை மின் பகிர்மான உதவி பொறியாளரிடம் தனித்தனியாக கோரிக்கை மனு அளித்தனர்.

    • விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது.
    • மின்கட்டணத்தை அபராத தொகையுடன் சேர்த்து ஆறு மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.

    பல்லடம் :

    திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதில் விசைத்தறிகளுக்கும் மின் கட்டண உயர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதனை ஏற்று விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விசைத்தறியாளர்கள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பாராட்டு விழா நடத்தினர். இந்தநிலையில், விசைத்தறியாளர்களுக்கு நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை அபராத தொகையுடன் சேர்த்து ஆறு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என மின்வாரியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் பல்லடம் வேலுச்சாமி, திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது :- தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று நிலுவையில் உள்ள விசைத்தறி மின் கட்டணத்தை கட்டுவதற்கு 6 தவணைகளாக பிரித்து கட்டணம் செலுத்தவும்,மேலும் மின் கட்டணத்தில் உள்ள அபராத தொகையை கழித்தும் கட்டுவதற்கு உத்தரவு பிறப்பித்த, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு நன்றி.

    இந்தநிலையில் தமிழ்நாடு மின் வாரியம் விசைத்தறியாளர்களுக்கு கடந்தாண்டு 2022 செப்டம்பர் முதல் ஏப்ரல் 2023 வரை நிலுவையில் உள்ள மின் பயன்பாட்டு கட்டணத்தை அபராதத்துடன் ஆறு மாத தவணையில் செலுத்த வேண்டும் என தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன்படி விசைத்தறியாளர்கள் நிலுவையில் உள்ள மின் பயன்பாட்டு கட்டணத்துடன் அபராததொகையும் சேர்த்துசெலுத்தி வருகின்றனர்.திருத்தி அமைக்கப்பட்ட மின் கட்டணத்தை விசைத்தறியாளர்கள் செலுத்த தயாராக உள்ளோம். அபாரதத் தொகையை தள்ளுபடி செய்யக்கோரி அமைச்சரை சந்திப்பதற்காக நிர்வாகிகள் சென்னை சென்றுள்ளனர்.அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறோம் .இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அரூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் எனது மகள்களை அழைத்து வருவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றேன்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் வேடியப்பன் (வயது 38).

    இவர் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து நேற்று மாலை எஸ்.பி.யிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

    நான் நேற்று முன்தினம் அரூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் எனது மகள்களை அழைத்து வருவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றேன்.

    அரூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் நின்றிருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் எனது வாகனத்தை நிறுத்தி ஹெல்மெட் அணியாததற்கு ரூ. 2,300 பணம் கொடு என்று கேட்டனர்.

    என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதற்கு ஆன்லைன் மூலம் அபராதம் கட்டு என்று கூறி ரசீது கொடுத்தனர்.

    அதில் அபராத தொகை ரூ.1,000 என்று குறிப்பிட்டிருந்ததை பார்த்து, என்னிடம் ரூ.2,300 கேட்டீர்கள். ஆனால் ரசீதில் ரூபாய் 1000 மட்டும் உள்ளதே என்று கேட்டதற்கு, என்னை தரக்குறைவாக பேசியதோடு மட்டுமல்லாமல், என்னை இழுத்துச்சென்று சரமாரியாக தாக்கினார்கள்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார். என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியபோது என்னை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று எனது சாதி பெயரை சொல்லி கேவலமாக பேசியதோடு சரமாரியாக தாக்கினார்கள்.

    பின்பு என்னிடம் வெற்று பேப்பர்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டு என்னை மீண்டும் எனது இருசக்கர வாகனம் நிறுத்தி இருந்த இடத்திற்கு கொண்டு வந்து விட்டனர்.

    பின்பு நான் எனது மனைவிக்கு போன் செய்து வரச் சொல்லி, அவர் என்னை அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.

    நான் முறையாக போலீஸ் இன்ஸ்பெக்டர் அளித்த ரசீதுபடி அபராதம் செலுத்த தயாராக இருந்த நிலையிலும் அவர் அதிகமாக பணம் கேட்டது குறித்து கேள்வி கேட்டதால் அதிகார துஷ்பிரயோக செயலில் மனிதாபமானமின்றி கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்திய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×